Tuesday, December 28, 2010

இதை கேட்க்க யாரும் இல்லையா ?


 1. என்ன சிகரட் விக்கிராணுக...முதல்லே இவனுகளை உள்ளே புடிச்சுப் போடணும்.
அண்ணன் ரஜினிகாந் இப்படித்தான் அடிக்க சொன்னாரு.



 2.             நீ..வர...வர கமல் படத்தைப் பார்த்து ரொம்ப கெட்டுப் போயிட்டே.


 3.                                               எங்க பீர் பாட்டிலியே கானோம் 

 4.                              நெருப்பை கொஞம் பக்கத்தில் கொன்டு வாடா

.
 5 .வீசா கார்டு இருக்கிறதுனாலெ யாரிடமும் கைய்யைக் கட்டி நிக்குறதுல்லை 


 6.                                           அதுக்கிலியா தீர்ந்து போச்சு



 7.மொலச்சு மூணு இலை விடலை அதுக்குள்ளே தண்ணியை அடிச்சிட்டு உளறவா செய்யுறே போதை தெளியட்டும் உன்னை என்ன செய்யுறேன் பாரு.



8.                                                   அம்மா.....மா...மா..மா..ங்....


 9.ஐயோ...யாராவது காப்பாத்துங்களேன் என் அம்மா துவைச்சு காயப் போட்டு விட்டார்கள். 


 10.கொஞ்சம் பக்கத்தில் வைக்காமல் தூரத்தில் வச்சுட்டு போயிருக்கு சனியன்.


11.வர..வர உனக்கு பீரு செலவுக்கு காசு அதிகமா தேவைப்படுது காய்கறிகாரனிடம் உன்னை கொடுத்து விட்டு ஒரு கிலோ வெங்காயம் வாங்கிட வேண்டியதுதான்.


 12.              சரக்குனா இதுவல்லவா சரக்கு..சும்மா குப்புன்னு ஏருதுலே. 



13.  ச்சே..பேப்பரை தொறந்தாலே ஒரே..சண்டைதான்..மனுஷன் நிம்மதியா ஆய் போக முடியுதா ?

14.                                                           ஆளைப் பாரு.....



15.டே..மரியாதையா என் பீர் பாட்டிலை தந்திடு இல்லை வகுந்துடுவேன்.





 16.என்னை தின்னுடாதே அப்பா..இனிமேல் பீர் குடிக்க மாட்டேன்... உன் மீது சத்தியமா.




17.             என்ன மச்சி கம்பெனிக்கு ஒரு ஆள் குறையுது வாவேன்.


18.                                        என்ன செய்றதுன்னு புரியலைங்க.



 
19.அவனுக எதையாவது செஞ்சுட்டு போகட்டும்..வா.... நாம் டூயட் பாடலாம்.



20.அடப் பாவிகளா..இருங்கடா உங்கள் எல்லோரையும் அந்நியனிடம் சொல்லி தண்டனை வாங்கித்தர்றேன்.


21.     அந்நியனுக்கு என்ன கொம்பா முளைச்சு இருக்கு போயி சொல்லுடா..

 22.  ச்சே..நம்ம பொழப்பு நாயை விட மோசமா போச்சு டப்பாவில் வச்சு கொண்டு போறானே இவன்லாம் என்ன அப்பா ?


23.உனக்கு தெரியுமா... கமல் அங்க்கிள் இப்படித்தான் எல்லோருக்கும் கொடுப்பாரு.



24.இன்னிக்கி எப்படியாவது பாய் fபிரெண்டை புடிச்சுட வேண்டியதுதான்.


25.                                     டேய்..என்னை கை விட்டுட மாட்டியே ?
 26.டேய் அப்பா..மரியாதையா சொத்தை பிரிச்சு தந்துடு இல்லாவிட்டால் வழக்கு தொடர்ந்து உன்னை நாரடிச்சுடுவேன்.


 27.            இப்படித்தான் என் அண்ணன் ராமராஜன் பால் குடிச்சாரு.



28.டேய் லைசன்சை எடுத்து வச்சுக்கோ..போலிஸ் இப்போ லஞ்சம்லாம் வாங்கிறது இல்லை.


29.காலில் ஆணி என்றால் உன்னைப் பிடிக்க முடியாதுனு நினைச்சியோ இப்போ பாரு உன்னை என்ன செய்றேன் என்று.


30.தமாசுக்காக எழுதினது..படித்து மகிழுங்கள் என்னடா அந்நியன் வர வர சிரிக்க வைக்கிறானே என்று நினைக்காதிர்கள் கூடிய சீக்கிரம் ஒரு பதிவு ரெடியாகிக்கொண்டு இருக்கிறது ஜனவரியில் இடுவதற்கு.

இதற்க்கு சில ஆதாரங்கள் தேவைப் படுகிறது அதுனாலே அந்த ஆதாரம் கிடைக்கப் பெற்றப் பிறகு கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.


// Nijam ஆனால், ரொம்ப்ப்ப்ப்ப 'பீர்' வாடை
அடிக்கிறதே!//


யாராவது இப்படி ஒரு கேள்வி கேட்க்க மாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருந்தேன் நல்ல வேலை நீங்கள் கேட்டு விட்டிர்கள் அப்படி நீங்களும் கேட்க்காமல் போயிருந்தால் நானே பின் குறிப்புன்னு போட்டிருப்பேன் கடைசியில்.

புதிய வருடத்திற்கு இளைஞர்கள் அடிக்கும் கூத்தினை இப்படி சிறுசுகள் மூலம் விளக்கியுள்ளேன்,டிசம்பர் ராத்திரி பனிரெண்டு மணிக்கு பீர் மழையில்தானே குழிக்கப் போகிறார்கள் அதற்காகத்தான் இந்தப் பதிவை போட்டேன்.
எனக்கும் ஒரு மாதுரியாத்தான் இருந்துச்சு என்ன செய்ய கண்ணை மூடிக் கொண்டு போட்டு விட்டேன்.


எல்லோரும் மனம் பொறுக்கவும்.


Thursday, December 23, 2010

டிஆர். புரட்சி பாடல்



பதிவைப் படித்து,போரடித்துப் போன நண்பர்களுக்கு ஒரு மாற்றத்திற்காக நகைச்சுவை இதில் இடம் பெறுகிறது,பாட்டைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்.


"
ஜெயில்ல இவ்வளவு நாள் இருந்தேனே.....ஒரு மரியாதைக்காவது அந்த ஆள் வந்து பாத்தானா பாரு?"

"நேரமில்லையாம் தலைவரே.... இன்னும் எத்தனையோ கேஸ்ல உள்ளே போகப்போறாரு, அப்போ போய்ப் பாத்துக்கலாம்னு சொல்லிக்கிட்டுருக்காராம்!"

-------------------------------------------------------
எங்க தலைவரோட நாட்டுப்பற்று வேற யாருக்குமே இருக்காதுங்க!"

"எதை வச்சு சொல்றீங்க?"

"தீபாவளிக்குக்கூட தெருவுல 'நாட்டு வெடிகுண்டு'தான் வெடிப்பாரு!"

--------------------------------------------------------
வேட்பாளர்: என் பேரை "தர்மம்"னு மாத்திக்கச் சொல்றீயே....ஏம்பா?

உதவியாளர்: தேர்தல்ல நீங்க தோத்துட்டாக் கூட "தர்மம்" தோத்துப்போச்சுன்னுதானே மக்கள் பேசிப்பாங்க!
----------------------------------------------------------------


சிறுவன்: ரோடு போடுற மெஷின்னா எப்படியிருக்கும்பா?

அப்பா: தேர்தல் வரட்டும்...தெருவுக்கு நாலு நிக்கும், காட்டுறேன்!

----------------------------------------------------------------

வேட்பாளர்: அந்த தொகுதிக்கு "கால்நடை"யாவே போயி ஓட்டு கேக்கலாம்னு இருக்கேன்!

தொண்டர்: "மனுஷனா"வே போயி கேளுங்க தலைவரே!
------------------------------------------------------------------

"ஓட்டுப் போட்டுட்டு வெளியே வர்ற வாக்காளர்களுக்கெல்லாம் அந்த வேட்பாளர் ஏதோ ஸ்வீட் தர்றாரே...என்னங்க அது?"

"வேறென்ன...."அல்வா"தான்!"

"போர் முரசு ஒலிகேட்கிறதே......! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே?"

"அஞ்சாதீர்கள் மன்னா! .......மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக்கொண்டிருக்கிறார்கள்!"

------------------------------------------------------------------------------------

"நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம் பறவைகளைக்கூட பாதித்திருக்கிறது மன்னா!"

“எதைப்பார்த்துச் சொல்கிறீர் அமைச்சரே?"

"அண்டை நாட்டுக்கு நாம் ஓலை கொடுத்து அனுப்பிய புறா, அந்த ஓலையை ஒரு மரத்தில் வைத்துத் தின்றுகொண்டிருக்கிறதாம் மன்னா!"

-----------------------------------------------------------------------------------

"
என் தியானத்துக்கு மான் தோல் வாங்கியதில் ஏதோ ஊழல் நடந்திருக்குமோ அமைச்சரே!"

"ஏன் சந்தேகம் மன்னா?"

"சொறிநாய்த் தோலில் வண்ணம் தீட்டி ஏமாற்றி விட்டார்களோ.......உட்காரும் இடம் அரிக்கிறதே அமைச்சரே!"

------------------------------------------------------------------------------------

"பட்டினியால் வாடும் நம் மக்கள் அகழியிலுள்ள முதலைகளைப் பிடித்துச் சாப்பிடுகிறார்களாம் மன்னா....!"

"ஆகா! மக்களுக்குத் தெரிந்த மாற்றுணவுத் திட்டம் மந்திரியாகிய உமக்குத் தெரியவில்லையே....யாரங்கே? இன்று முதல் அரண்மணையிலும் முதலைக்கறி சமைக்க ஏற்பாடு செய்யுங்கள்!"




கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி


------------------------------------------------------------------------------------







Saturday, December 18, 2010

போக்குவரத்து விதிகளை மீறிய மாடு கைது...!!!




சென்னை மாநகருக்கு உட்பட்ட முக்கிய சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய மாட்டினை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர்,இதைப் பற்றிய ஒரு தொகுப்பு.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு இவை மூன்றினையும் தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் தமிழக காவல் துறையினர்,தவறு செய்யும் யாவரும் சட்டத்திற்கு முன் சமம் என்று சமிப காலமாக நிருபித்து வருவது தமிழக மக்களுக்கு மட்டுமின்றி இந்திய மக்களுக்கே வியப்பளிக்கிறது...!!!

சென்ற பதிவில் வக்கீலை கொலை செய்ய முயன்ற சேவலை அதிரடியாக வலை விரித்துப் பிடித்து கைது செய்த போலீசாருக்கு,தமிழக முதல்வர் விருதிற்கு,காவல் துறை டிஜிபி அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு விருது கிடைக்கப் போகும் தருவாயில்,மற்றொரு போலீசார் போக்குவரத்து விதியை மீறிய குற்றத்திற்காக மாட்டினை மிகத் துணிச்சலுடன் பிடித்து வரும் காட்ச்சியினை கண்டு, யாருக்கு அந்த விருதை கொடுப்பதற்கு பரிந்துரை செய்யலாம் என்று டிஜிபி அவர்கள் மிக தீவிர யோசனையில் உள்ளார்.

மிக துணிச்சலுடன் மாட்டினை கைது செய்த போலீசாரை "அந்நியன் 2"  நேரில் சென்று வாழ்த்தினை தெரிவித்தார் அவர்களின் உரையாடல் சில, இதோ உங்கள் பார்வைக்கு.

அந்நியன் : உங்களின் தீர செயலை பாராட்டுகிறேன் எங்கு வைத்து அந்த மாட்டினை பிடித்தீர்கள் ?

போலிஸ் : தம்பி.. நீங்கல்லாம் படத்தில்தான் சட்டம் பேசுவிர்கள் ஆனால் நானோ உண்மையில் சட்டத்தை காப்பாற்றக் கூடிய ஒரு நேர்மையான போலிஸ் அதிகாரி,நேற்று மாலை மூணு மணிக்கு சென்னை நகரில் முக்கிய வளைவில் விளக்கு சிவப்பு நிறத்தைக் காண்பித்தும் கொஞ்சம்கூட பயம் இல்லாமல் கடந்து சென்ற இந்த மாட்டினை கைது செய்து உள்ளேன்,இது முடிவு இல்லை,இது ஆரம்பம் இதை எல்லோரும் புரிஞ்சு நடந்துக்கணும்.

அந்நியன் : மாட்டிற்கு முன்னாடி ரெண்டு மோட்டார் சைக்கிலு சிக்னலை மதிக்காமல் சென்றதாக மக்கள் பேசிக்கொள்கிறார்களே அப்போ அவர்களை கைது செய்யலியா ?

போலிஸ் : என்ன தம்பி புரியாமல் பேசுறே..அவனுக பெரிய இடத்துப் பசங்கள் அவனுக மீது கையை வச்சா,அப்புறம் சாப்பிடறதுக்கு எனக்கு கை இருக்காது.

அந்நியன் : அப்போ..உங்கள் சட்டத்தில் ஆடு மாடு கோழி,தப்பு செய்தால் மட்டும்தான் கைது பண்ணுவதற்கு இடம் இருக்கு,மனுசர்கள் தப்பு செய்தால் கைது பண்ணுவதற்கு இடம் இல்லை..அப்படித்தானே ?

போலிஸ் : என்ன அந்நியன்,கிறுக்குத் தனமா கேள்வி கேக்குறே,யார் சொன்னா,தப்பு செய்ற மனுஷரைக் கைது பண்ண சட்டத்தில் இடம் இல்லை என்று ? ஒருநாளைக்கு எத்தனை தள்ளு வண்டிக்காரனை சட்டம் தண்டிக்கிது,எத்தனை பழ வியாபாரிகள் மீது சட்டம் பாயிகிறது,எத்தனை பிச்சைக் காரர்கள் மீது சட்டம் இரும்புக் கரம் கொண்டு அடக்கிறது,இவர்கள் எல்லாம் உன் கண்ணுக்கு மனுஷர்களா தெரியலையா ?

அந்நியன் : நல்லாவே தெரியுது..என் கண்ணுக்கு எல்லாமே...நல்லாவே தெரியுது.உங்களை மாதுரி போலீசார் இருக்கிறதுனாலத்தான் இந்தியா இந்த நிலைமைக்கு இருக்கு.உம்மை போன்ற நேர்மையான போலீசார் இருக்கும் வரை அந்நியனின் வேட்டை தொடரும்.


சிரிப்புப் பதிவு.யாரும் தப்பாக நினைக்க வேண்டாம் ஆடு மாடுகளை அள்ளிசெல்ல மாநகராட்சி ஊழியர்கள் இருக்கும் போது,போலீசார் இதில் ஈடு படுவது அவ்வளவு நல்லா தெரியலை.

Tuesday, December 14, 2010

பத்திரிக்கையர் மீது டி.ராஜேந்தர் கடும் தாக்கு !!!




திண்டுக்கல் பூச்சாண்டி நகரில் டி.ராஜேந்தரின் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின் நிகழ்ச்சி நடை பெற்றது அப்போது ஒரு பிரபல தொலைக் காட்ச்சியின் நிருபர் உங்கள் கூட்டத்திற்கு மக்கள் கூட்டமே கூடுவதில்லையே ஏன்?என்று கேள்வி எழுப்பினார்.

இதைக் கேட்ட டி.ராஜேந்தர் பானையில் அரிசி பொங்குவதைப் போல் பொங்கி அந்நிருபரை தாக்க முயன்றார் அவரின் கட்சி இயக்குனர்கள் டி.ராஜேந்தரை சமாதனம் செய்து அழைத்து சென்றனர் பதிவினைப் பாருங்கள்.

இச்சம்பவம் பற்றி மக்கள் தலைவன் விஜயகாந்திடம் கருத்து கேட்டப் போது :

ம்ஹே..ம்ஹே...ம்ஹே..(சிரிப்பு)எனக்கு அப்பவே தெரியும் டி ஆர் இப்படிலாம் நடந்துக் கொள்வார் என்று அதுனாலேதான் என் மனைவி அவரிடம் கூட்டணி வைத்துக் கொள்ளாதிர்கள் என்று சொன்னார் அவர் ரொம்ப கோவக்காரர் பார்க்கவே பூச்சாண்டி மாதுரி இருக்கார் என்று.இன்று அதுபோலவே நடந்து விட்டது.

மொத்தம் தமிழ் நாட்டில் ஆயிரத்து எண்ணூற்றி என்பெத்தேழு உறுப்பினர்கள் மட்டுமே அவர் கட்ச்சிக்கு இருக்கு அதுலே அரநூற்றி எழுபத்தேழு உறுப்பினர்கள் வட நாட்டை சேர்ந்தவர்கள் பேருந்து நிலையத்தில் கட்சி அடையாள அட்டை டி.ராஜேந்தரால் வழங்கப் பட்டபோது இலவச பஸ் பாஸ் என நினைத்து வாங்கிக் கொண்டவர்கள்தான் அவர்கள்.

ஐநூற்றி முப்பத்தேழு உறுப்பினர்கள் லாட்டரி சீட்டு வாங்குபவர்கள்,பொது இடத்தில் வைத்து கலர் கலரா கட்சி அடையாள அட்டை வழங்கப் பட்டபோது காசு கொடுத்து வாங்கிய அப்பாவிகள்.
காசை பெற்றுக் கொண்ட டி.ஆரோ,மக்கள் கட்ச்சிக்கு நிதி தருகிறார்கள் என்று எண்ணி பையில் போட்டுக் கொண்டார்.

மீதமுள்ள அரநூற்றி எழுபத்தி மூணு பேர்களுக்கு இன்னும் ஓட்டுரிமையே வழங்கப் படவில்லை இந்த நிலைமையில் அவர் கட்சி நடத்துகிறார்.

நீங்களே சொல்லுங்கள் இப்படிப் பட்டவரிடம் கூட்டணி அமைத்தால் நாளைக்கு நான் முதல் அமைச்சரா ஆகமுடியுமா ?

இல்லை அந்தக் கோட்டை பக்கம்தான் போகமுடியுமா ?

இன்னிக்கு தமிழ் நாடு இந்த நிலைமைக்கு இருக்கிறதுக்குக் காரணமே இந்த ராஜேந்தர்தான்.அதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டனும் என்பதால் எங்கள் கட்சி வரும் தேர்தலில் தனித்தே போட்டியிடும் நான் முதல் அமைச்சரா பொறுப்பேற்றப் பிறகு,முதல் வேலையா காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகளை வைத்து ஒரு படம் எடுக்கிறது.
கதா நாயகனாக டவுசர் ராமராஜன்,அவர் கதையின் ஆரம்பமமே அவர் ஒரு தீவிரவாதி,சுடுவதில் இல்லை பாட்டு பாடுவதில்.இந்தியாவை தீவிரவாதிகள் பாம் வைத்து தகர்க்கும் போகும் சமயத்தில்..பாட்டுப் பாடி தீவிரவாதிகளை எப்படிக் கொல்லுகிறார் என்பதே கதை.

கேப்ட்டனின் பதிவை அப்படியே டி.ராஜேந்தரிடம் போட்டு காண்பித்து,கருத்துக் கேட்ட போது.

அவன் கிடக்குறான் லூசு !
அவன் கையில் மின்னுது காசு !
டேய்..வார்த்தையை அளந்து.. நீ பேசு !
உன்னை சும்மா விடமாட்டார் ஏசு !

இப்படி அடுக்கி கொண்டே போகும்போதே அவருக்குத் தெரியாமலேயே நாங்கள் வெளியே வந்துட்டோம்.

கண்ணை மூடிகிட்டு இன்னும் பேசிக் கொண்டே இருக்கார் டி ஆர். (அவர் முதல் அடுக்கு வார்த்தை அவருக்கே பொருந்தும்)

அந்நியன் :

கூத்தைப் பார்த்தோம்,படித்தோம் சினிமாவில் கூத்தடிப்பவர்களுக்கு அரசியலில் என்ன வேலை ?

திரையில் முதல்வரா ஆகுங்கள்,பிரதமரா ஆகுங்கள்,உங்கள் தீற்றை ஏன் அரசியலில் காண்பிக்கிரிகள் ?

அரசியல் தலைவரா ஆகுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கு ?

MGRல் தொடங்கிய இந்த வியாதி இன்று விஜய் வரை வந்து நிக்குது !!!

இதுக்கெல்லாம் காரணம் முட்டாள் மக்கள்கள், இவர்கள் மாறாதவரை நாமும் மாறமாட்டோம்.




Saturday, December 11, 2010

வக்கீலை கொத்தி கொலை செய்ய முயன்ற சேவல் கைது !!!




.சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது.பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார்.செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு அதிரடியாக விரைந்து சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை வலை வீசி தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர்.

போலிசாரின் அதிரடி நடவடிக்கையை பற்றி பொது மக்கள் சிலரிடம் கேட்டபோது :

@ சேவல் கொத்துனதுனாலே அந்த வக்கீல் புகார் கொடுத்தார் ஒரு பாம்பு கொத்தி இருந்துச்சுனா புகார் கொடுத்திருப்பாரா ? இல்லை அந்த போலீசுதான் பாம்பை கைது பண்ணியிருக்குமா ?


@ கைது செய்யப் பட்ட சேவலை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தாதது போலிசின் மெத்ததனத்தை காட்டுகிறது.


@ கைது பண்ணுவதற்கு முன்னாள் அர்ரஸ்ட் வாரன்ட் இல்லாமல் கைது பண்ணியது மிகப் பெரிய குற்றம்.


@ இரவு முழுதும் காவல் நிலையத்தில் உயிரோடு அந்த சேவல் இருந்தது ஆச்சர்யமாக இருக்கு.


@ இந்த வழக்கை சிபி சிஐ டி போலீசார் விசாரிக்கணும்.


@ இந்த கைது விசயத்தில் நீதி மன்றம் முன்னுக்கு பின்னா தீர்ப்பளிச்சது வேதனையா இருக்கு,இதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.


@ எங்க ஊரு கொலைகாரனை பிடிக்க சொல்லி அஞ்சு வருஷம் ஆச்சு இன்னும் பிடிக்காமல் இருப்பது வெட்கமா இருக்கு.


@ சேவல் தப்பியோடியால் சூட்டிங் ஆர்டர் கொடுத்தது கண்டிக்க தக்கது.


@ குற்றவாளியை பிடிக்கிறதை விட்டுட்டு பேசாமல் போலீசார் கோழிகளை வலை விரித்து தேடலாம்.


@ ஒரு வேலை இது கந்த சாமியோடு வேலையாக இருந்தாலும் இருக்கலாம்,அந்த வக்கீலு கொஞ்சம் கறாரா பணம் கரப்பாறு.

எது எப்படியோ நடந்த சம்பவம் போலீசாருக்கு மெடலை ஒன்னும் வாங்கி தந்திடாது,சும்மாவே தமிழனை கேலி செய்யும் மலையாளிகளுக்கு வாயில் மெல்லுவதற்கு அவல் கிடைச்சு இருக்கு,வருஷம் பூரா மெண்டு கொண்டே இருப்பான்,நாமளும் இல்லைன்னா..நொல்லைன்னா..என்று சமாதனம் சொல்ல வேண்டியதுதான்.

ஆறறிவு படைத்த நமக்குத்தான் நல்லது எது, கெட்டது எதுன்னு தெரியும்,அறிவே இல்லாத அந்த சேவலுக்கு தெரியுமா நாம செய்றது நல்லதா அல்லது கெட்டதா என்று ?

Friday, December 10, 2010

காந்தியும் ஒபாமாவும்



இந்தியத் தூதர் மீரா சங்கருக்கு மிசிசிபி விமானநிலையத்தில் நேர்ந்த அவமரியாதை குறித்து அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் மீராசங்கர் கடந்த 4ஆம் தேதி மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் பார்லிடிமோர் செல்வதற்காக, ஜாக்சன் எவர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தார். மீராசங்கர் இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்திருந்தார்.

அப்போது அங்குள்ள அதிகாரிகள் மீராசங்கரை தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். தான் ஒரு தூதர் என்று மீராசங்கர் மற்றும் அவருடன் சென்றிருந்தவர்கள் எடுத்துக்கூறியும், சமாதானம் அடையாத அதிகாரிகள், சாதாரண பயணிகளை நடத்துவதைப்போல் சோதனையிட்டனர்.
உயர் அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த இந்த சோதனை சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அரசிடம் இந்திய தூதரகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது நாளிதழ்களில் காணப் படும் செய்தி !!!

இந்தியாவால் புகார்தான் கொடுக்க முடியும், அமெரிக்கா செய்தது தவறு என்று கண்டனம் தெரிவிக்க இயலாது காரணம் அமெரிக்காவுக்கு காட்டும் விசுவாசமும் பயமும்.
இந்திய ஜனாதிபதியையே டவுசரை அவிழ்க்க சொன்ன அமெரிக்க அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரியை சோதனை என்ற பெயரில் டார்ச்சர் செய்தது கண்டிக்க தக்கது.இந்தியர்களை அவர்கள் இழிவுப் படுத்தாவிட்டால் தூக்கம் வராது அது அதிகாரியானாலும்சரி அரசியல் தலைவர்கலானாலும்சரி எல்லாம் ஒன்றுதான் அவர்களுக்கு.

ஒரு சாதாரண அமெரிக்க கம்பெனியின் குளிர்பான தலைவர் இந்தியாவிற்கு வருகை தந்தால், பாதுகாப்பு சோதனையை தளர்த்தி, சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் இந்தியா,நமது தேச தலைவர்களும்,ஜனாதிபதிகளும்,அரசு அதிகாரிகளும் அமெரிக்கர்களால் அவமானப் படுவது ஏன் ?

நாசாவை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இந்திய விஞ்ஞானிகள் கொஞ்சம் அமெரிக்காவுக்கு புத்திமதி சொல்லலாமே.

ஒருநாள் இந்த நிலமைக்கெல்லாம் மாற்றம் உண்டு,அந்த மாற்றங்களை செய்வதற்கு மக்கள் பலம் இருக்கு,அது பொங்கி கத்ரீனவா மாறுவதற்குள்,அமெரிக்கா மற்ற நாடுகளையும் மதிக்க கற்றுக்கொள்ளனும், இல்லையேல் அது அழிவுக்கு அவர்களே விதைத்த வித்தாகும்.

Saturday, December 4, 2010

ஏழைகளை தத்தெடுப்போம்.


சொந்தங்களை அரவணைப்போம் - ஏழைகளை தத்தெடுப்போம்.

அந்நியர்கள் மீது கூட வன்முறையை வெறுத்த மகாத்மா காந்தி வாழ்ந்த நாட்டில்,,குடும்ப வன்முறை மூலம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதும், பேசாமலிருப்பதும், வேதனையிலும் வேதனை.
குடும்பத்தில் ஏற்ப்படும் குழப்பம், அது சமுதாயத்திற்கே அழிவே ஏற்ப்படுத்தும் என்று, யாரும் புரிந்துக் கொள்வதில்லை,இதனால் பின்னால் வரும் சந்ததிகளுக்கு பின்னடைவே ஏற்ப்படுத்துமே தவிர, எந்த ஒரு நண்மையையும் தராது.
இதன் மூலம் அவர்களின் வாரிசுகள் மட்டுமின்றி பகையாக்கப் பட்ட அண்ணனோ, அல்லது தம்பியோ,அக்காவோ அல்லது தங்கையோ,இவர்களின் வாரிசுகளும் மனதால் பாதிக்கப் படுகிறார்கள்.

இதைப் பற்றி பெருமானார் ரசூல் (ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார்கள், என்னை சார்ந்த எவர் ஒருவரும்,என்னை சார்ந்தவரிடம், தொடர்ந்து மூன்று நாட்கள் பேசாமளிருப்பாறேனில், அவர் என்னை சார்ந்தவர் இல்லை என்று.

அண்ணல் மகாத்மாவும், மனிதருக்கு மனிதர் நேசித்து கொள்ளுங்கள்,துரோகித்துக் கொள்ளாதிர்கள் என்று தமது நண்பர்களுக்கு தினமும் அறிவுருத்துபவராக இருந்தார்.

குடும்பத்தில் எழும் பிரச்சினைகளுக்கு உணர்ச்சிவசப் படாமல், உறவுகள் செய்த நன்மையை மட்டும் எண்ணி, முடிவு எடுத்தால், குடும்பம் பிரிவதற்கு யாரும் காரணமாக இருக்கமாட்டார்கள்.
ஒரு ஊரை,சுற்றி ஆராய்ந்தோம் என்றால்,நாற்ப்பது சதவிகித மக்கள் குடும்ப பிரச்சினையால், சகோதர சகோதரிகளை இழந்து வாழ்கிறார்கள்.

இதற்க்கு காரணம் என்ன ?

வசதியும், வாய்ப்புகளும் கூடும்போது, தமது சம்பாத்தியத்தின் நிழலில், மற்ற உறவுகள் ஒண்டி வாழ்வதால், நமது குடும்பத்திற்கு நஷ்ட்டம் ஏற்படுமே என்று எண்ணம் கொள்வது. (ஒரு வகையினர்)

சொத்தினை பங்கிடும்போது, ஏற்ப்படும் பிரச்சினைகளுக்கு, சரியான முறையில், பேசி தீர்வு காணாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் விவாதிப்பது.(ஒரு வகையினர்)

கவுரவம் என்று அழைக்கப்படும் பெருமதிப்பை, உடையவர்கள் தமக்குத் தரவில்லையே என்று வருந்தி, ஒதுங்குபவர்கள்.
(ஒரு வகையினர்)

மரணத்தின் வாயிக்குள் போய் கொண்டிருக்கும் இந்த மனிதப் பிறவிகள், வாழும் கொஞ்ச நாட்களில் நன்மையை செய்து, தீமையை தவிர்த்து,உற்றார் உறவினருடன்,ஏழை எளியவருடன் ஒற்றுமையாய் வாழ்வதற்கு, மனம் வரவில்லையே ஏன் ?

கடினமான காரியத்தையும்,தமது பேச்சு திறனால் சாதிக்கும் மனித ஜாதி, காசுகள் பெருகியதும் கண்டும் காணாமல் போவது ஏன் ?

பணப் புழக்கம் அதிகரிப்பதால், உங்களின் அறிவுகளும்,அன்பு இதயங்களும் மங்கி போகின்றன, உங்களின் பலமும்,பலவீனமும் உணரும் சந்தர்ப்பம், கண்டிப்பாக ஒரு நாள் வரும்.

இது எல்லா மனிதருக்கும் பொருந்தாது.
நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி சொந்தங்களால் துரத்தி அடிக்கப் பட்டு,
நடுத்தெருவில் வீசி எறியப்பட்ட இந்த மூன்று ஜீவன்களை,
யார் காப்பாற்றுவார் ?

உழைக்கிறார்,தெருவில் சாப்பிடுகிறார்,நடை பாதையில் தூங்குகிறார்.
பச்சை மண்ணோடு...!!!

மழை பெய்வதற்கு முன்னேயே, நம் குழந்தைகளுக்கு குடையை கொடுத்து பள்ளிக்கு அனுப்பும் நாம்,திடிரென்னு மழை பெய்து விட்டால் இவர்கள் எங்கு போயி தூங்குவார்கள் ?

சொந்தங்களை அரவணைப்போம்..!!! 
ஏழைகளை தத்தெடுப்போம்...!!!

Wednesday, December 1, 2010

திருமணம் என்ற போர்வையில் விபச்சாரம்...!!!



திருமணமா.. இல்லை, திருமணம் என்ற பெயரில் விபச்சாரமா ?

இன்றைய இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்.ஆகவும்,ஐ.பி.எஸ்.ஆகவும்,டாக்ட்டராகவும்,தொழில் நுட்ப்ப வல்லுனர்களாகவும் சாதனை புரிந்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாது இந்தியாவை உலக அரங்கில் ஒரு வல்லரசுநாடாக மாற்றுவதற்கு அரும்பாடு பட்டு வருகிறார்கள்.

கவிஞர் சிநேகன்..!!! கவிஞர் என்று யார் பட்டம் கொடுத்தது ?

இவர் அப்படி என்ன புரட்ச்சியை உண்டுபன்னிவிட்டார் ?

ஓடி போயிட்டு புள்ளைகளெல்லாம் பெத்தப் பிறகு கல்யாணம் பண்ணச் சொன்னவர்தானே இந்த சிநேகன்.!

சமூக சீர் திருத்தம் என்ற பெயரில் கண்ணில் படுபவனை கட்டிப் பிடிக்கிரிகளே வெட்கமா இல்லை உங்களுக்கு ?

தமிழ் இலக்கியம்,திருவருட்ப்பா,திருக்குறள்,செம்மொழி என்று பறை சாட்டும் தமிழக முதல்வர்,தமிழக கலாச்சாரம் அழிந்து போவதற்கு இந்த மனிதக் கூட்டம் காரணமா இருக்கே என்று கண்டிக்காதது ஏன் ?

புரட்ச்சி திருமணம் செய், வேணான்னு சொல்லவில்லை வரதட்ச்சனை வாங்காதே,மூட நம்பிக்கையை ஒழி,விதவைக்கு வாழ்வு கொடு வரவேற்கிறேன், இப்படி வர்றவன் போறவன்லாம் உன் பொண்டாட்டியைக் கட்டிப் பிடிக்காரானே,நீ இல்லாத நேரத்தில் உன் இடத்தில் அவன் இருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம் ?

பெண்ணுகளும், நாசமா போனவர்களுடன் சேர்ந்து கெட்டு சீரழிந்து போகிறார்கள்,திருத்தப் போவது யாரு ?

கட்டிப்பிடி கட்டிபிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்பிடிடா... என்று நக்கீரன் கோபால் கேலி பண்ணுவது எல்லோருக்கும் கேட்க்கிறது.

நாடு முழுக்க திராவிடர்களின் கூட்டம்,குன்றக்குடி அடிகளார் போன்றவர்களின் பட்டிமன்றம்,சந்து பொந்தெல்லாம் இலக்கியம் பேசும் பொது மக்கள் வாழும் தமிழ் நாட்டில், இப்படி ஒரு கேடுகட்ட சமூகம் இருப்பது வேதனையே..!!!

பொது இடங்களிலும், பொது போக்குவரத்து பேருந்துகளிலும்,பொண்ணுகளை லேசா உரசியாலே உள்ளே தள்ளும் சட்டம், இப்படி பொது இடத்தில் கண்டவனை கட்டிப் பிடிப்பவரை கண்டும் காணாமல் இருப்பது ஏன் ?
ஒரு வேலை யாரும் புகார் கொடுக்காதக் காரணத்தால் கைது பன்னலியோ ???

இப்பவுள்ள சூழ்நிலையில் சமூக புரட்ச்சி தேவைதான், அதற்காக தனது வெட்கத்தை அடகு வைத்து அடுத்தவனை கட்டிப் பிடித்து புரட்ச்சி செய்பவரைக் கண்டிக்காமல் இருக்க முடியாது,

எப்படியோ இப்படி பல திருமணத்தை நடத்தி வைப்பதின் மூலமாக, பல சுகங்கள் கிடைக்கப் போவது அந்தக் கவிஞனுக்கும், அந்த சொட்டைத் தலையனுக்கும்தான்.

பொது மக்கள் விழிப்பது எப்போது ?


அந்நியன் 2

Saturday, November 27, 2010

காமக் கொடூர நாய்கள்

வலைப் பூவில் உலா வரும்போது நண்பர் எம் ரிஷான் ஷெரிப் அவர்களின் தளத்தை காண நேரிட்டது.  http://rishansharif.blogspot.com/
மகிழ்ச்சியோடு படித்துக் கொன்டிருக்கையில் பேரிடியாய் இப்புகைப்படம் கண்ணில் பட்டது
மனம் பொருக்கமுடியாமல் ரென்டு வார்த்தை அழுது கொட்டலாம்னு இதை எழுதுகிறேன்.


இது பாக்கிஸ்த்தானில் காமக் கொடூர நாய்களாலும், குடும்ப தலைவன் என்ற அரக்கர்களாலும்,அமில திரவம் மூலம் இவர்களின் வாழ்க்கையை நாசம்  பண்ணிவிட்டார்கள் அழகு தேவதைகளான இச்சகோதரிகள் நரக வாழ்வினை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

கருவிலியே ச்சீ..என கருவப்படும் பெண்ணானவள் கண்ணீருடன் காலடி எடுத்து வைத்தாலும் காலத்தை வெல்வது கேள்விக்குறியே ?

மரமே..மரமே..உம்மை துளையிட்டு உம்மேனியை ரதமாக்கி அதில் நான் கூடு கட்டுவதை நான் விரும்பவில்லை, ஆனால் பறவையா பிறந்த எனக்கு வேரு வழி தெரியலையே என்று பறவை அழுதுச்சாம்.
இந்தப் பறவைக்கு இருக்கும் இரக்கக் குணம் கூட நன்றி கெட்ட மனித ஜாதியிடம் இல்லையே...!!!

பெண்ணை போதைப் பொருளாய் நினைக்கும் மனித மிருகம் இருக்கும் வரை இந்த அழகிகளை போல், எத்தனை அழகிகள் நரக வேதனை அனுபவிக்கிறார்களோ ?

இந்த அவலத்திற்க்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால் உலகில் பெண் இனமே கோரமாகி போய்விடும்.

பாலியல் பலத்காரம் மற்றும்ஆசிட்  என்னும் கொடிய திரவத்தை எரிதல் போன்ற, நாச  வேலைகளில் ஈடுபடும் நாசக்கார நாய்களை இனம் கண்டு அவர்களின் வாயினுள் ஆசிட்டை ஊற்றவேண்டும், இது நீதி மன்றம் மூலம் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறவேண்டும்.

இது போன்ற காட்டுமிரான்டிகளை காப்பற்ற வரும் கேடுகட்ட கட்சிதலைவன்,லஞ்சம் வாங்கும் போலீசு மற்றும் ஊழல் வக்கீலு,இவர்களுக்கும் இந்த தண்டனையைக் கொடுக்கனும்,இதைப் பார்த்து எல்லா மனிதரும் திருந்தனும்.

பெண்கள் எப்படி வாழனும்னு இஸ்லாம் மிக தெளிவாக கூறி இருக்கு, அதை பின்பற்றினாலே போதும் உங்கள் பாதுகாப்பிர்க்கு.

அந்நியன் 2











காட்சிகள் மனதை காயப் படுத்தி விட்டன,

Thursday, November 25, 2010

விளங்குமா இந்தியா ?

படத்தின் மீது ஒரு க்ளிக் ப்ளீஸ் 

இப்பத் தெரிகிறதா ?

இந்தியா ஏன் இன்னும் பின்னுக்கு தள்ளப் படுகிறது என்று...!!!

வளரும் நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று,இவ்வளர்ச்சியினை கெடுப்பதற்கு,வளர்ந்த நாடுகளான அமெரிக்கா,பிரிட்டன்,சீனா,மற்றும் எதிரி நாடான பாக்கிஸ்தானும் இதில் முழுப் பங்கு வகிக்கிறது.

அதற்காக அவர்கள் எந்த விதத்தில் துன்பத்தை இந்தியாவிற்கு தரமுடியுமோ,அவ்விதத்தில் அதிகப்பட்ச்சமாக மறைமுகமாகவும்  , குறைந்தப் பட்சம் நேரிடையாகவும், நண்பனைப் போன்று நடித்து, தந்து கொண்டு இருக்கிறார்கள்,நமது இந்தியாவும் வெளுத்தெதல்லாம் பால் என்று நினைத்து, அவர்களின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, கண்ணில்லாத குருடரைப் போன்று, தட்டு தடுமாறி காலத்தைப் போக்கிக் கொண்டு இருக்கிறது.

என்னடா இவன், கல்லூரி துணை வேந்தர்கள் உறங்கும் போட்டோவினைப் போட்டு விட்டு,சம்பந்தம் இல்லாமல் உளறுகிறானே என்று, திட்டி விடுவதற்குள் முழுவதையும் படியுங்கள்.

ஒரு குடும்பம் நல்லா இருக்கணும்னா, வீட்டுத் தலைவன் புத்திசாலியாக இருக்கணும்,ஒரு ஊரு நல்லப் பேரு எடுக்கணும்னா ஊர் மக்கள் நல்லதை செய்யணும்,நாடு நல்லா இருக்கணும்னா நாட்டுத் தலைவர்கள் நல்லவர்களாக இருக்கணும்,சரி..சீக்கிரம் விசயத்திற்கு வந்துடறேன்.

எத்தனையோ எதிர்ப்புகளை இந்தியா, ராணுவம் மூலம் சந்தித்து சாதனைப் பல புரிந்திருக்கு,வெற்றியும் பெற்றிருக்கு,ஆனால் இயற்க்கை பேரழிவுகளை எதிர்த்து இதுவரைக்கும் எந்த ஒரு நாடும் வெற்றிக் கண்டதில்லை.
வருமுன் காப்போம் என்ற திட்டம் எதற்கு கொண்டு வந்தது என்றால்,இயற்கைப் பேரழிவுக்குக் காரணமான சிலவற்றை கண்டறிந்து, நாம் செய்கின்ற செயலை குறைப்போமானால்,அதனின் பலன்கள் நன்மையில் போயி முடியும்.அதற்க்கத்தான் இந்த வேந்தர்கள் கூடி இருக்கிறார்கள்.

இங்கு நடந்து கொண்டிருக்கிற கூட்டம் ஒன்னும் சாதாரணக் கூட்டம் இல்லை, மிகப் பெரியக் கூட்டம்,பல்கலைக் கழகத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் துணை வேந்தர்கள் கூடியிருக்கும் மகா சபை.இச்சபையில் பேசக்கூடிய பேச்சுக்கள் அனைத்தும் கோடிக்கணக்கான கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எத்தி வைக்கக் கூடிய ஒரு ரகசிய காப்பு பாடம்,இந்தக் கூட்டத்திற்காக பல இலட்ச்சங்களை தமிழக அரசு செலவழித்து நடத்திக் கொண்டிருக்கிறது.
நமது அய்யாக்களோ ஒரு கவலையில்லாமல், கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்.
அய்யா அப்துல் கலாம் அவர்கள் கனவு காணசொன்னதை,தவறாக நினைத்துக் கொண்டு கனவு காண்கிறார்களோ ?

விளங்குமா இந்தியா ?

எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று, புகைப் படத்தின் கீழேயே எழுதி இருக்கு படித்து கொள்ளுங்கள் !

இவர்களைப் போன்றவர்கள் நாட்டிற்கு தேவையா ?


இவர்களுக்கு தண்டனைக் கொடுத்தால் தப்பா ?


ஒரு மாறுதலுக்காக தண்டனையை நீங்கள் வழங்குங்கள் !

அந்நியன் 2

Monday, November 22, 2010

வரதட்ச்சனைக் கொடுமை !!!



வரதட்ச்சனைக் கொடுமை !!!

புரியாதப் புதிராகவே இருக்கிறது இந்த சொல்...! வரதட்ச்சனை கேட்ட்பவள் பெண்,வரதட்ச்ச்சனையை கொடுப்பவள் பெண்,அதை போராடி வீதிக்கு கொண்டு வருபவள் பெண்,நீதி மன்றத்தில் தீர்ப்பு சொல்லுபவளும் பெண்.
இப்படித் தலைமுறை தலைமுறையாக தொடரும் இந்த தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாதா ?
கண்டிப்பாக முடியும்,பெண்கள் மனசு வைத்தால் மட்டுமே முடியும்.

நாற்ப்பது வருசத்திற்கு முன்னாடி நீங்கள் மருமகளாக, மாமியார் வீட்டிற்குப் போகும்போது வரதட்ச்ச்சனைக் கொடுமைக்கு, மாமியார், மற்றும் நாத்தனர்களால் பெரும் துனபத்திர்க்கு ஆளாக்கப் பட்டிர்கள்... சரியா ?
அன்று நீங்கள் மருமகள்கள்...!!! இன்று நீங்கள் மாமியார்கள்...!!!
நீங்கள்தான், இந்த தலைமுறையில் வரக்கூடிய மருமக்கள்மார்களை வரதட்ச்சனைக் கேட்டு தொல்லைப் பண்ணுகிறிர்கள்.
இதே மருமக்கள்மார்தான் இன்னும் இருபது வருஷம் கழித்து வரதட்ச்சனைக் கேட்கப் போகிறார்கள், ஆகமொத்தம் கூட்டி கழிச்சுப் பார்த்தால், பெண்ணிற்கு பெண்ணே எதிரி !!!

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதற்காகவே பெண் வீட்டார்கள், பயிரிடப்படும் நிலங்களை விற்று, தம் பொண்ணுகளை கரை சேர்த்துள்ளார்கள்,கணவன் என்றப போர்வையில் கைக்கூலி வாங்கியவன் திருடன்தான்.
திருடன் கத்தியைக் காட்டி திருடுவான்,நீயோ தாலியைக் காட்டி திருடுகிறாய்.
வரதட்ச்சனைக் கொடுமையைப் பற்றி எழுத்தின் மூலமாகவும்,சமூக அமைப்பின் மூலமாகவும்,கவிதைகள் மூலமாகவும்,மற்றும் பல போராட்டங்கள் மூலமாகவும், எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்க்காத இந்த கேடுகட்ட சமூகத்திற்கு, அன்னியனைப் போன்றவர்கள் தண்டனைக் கொடுத்தால், குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

தொட்டதெல்லாம் பொன்னாகிறதே என்று, பெண் வீட்டாரை தொல்லைப் படுத்தும் ஆண் வீட்டாரை எச்சரிக்கிறேன்.
வாங்கியது வாங்கியதாகவே இருக்கட்டும், இனி நீங்கள் வரதட்ச்சனை என்று வாயை எடுத்தால் பழுக்க காய வைத்த கடப்பாறையை எடுத்து உங்கள் வாயில் நுழைப்பதற்கு அந்நியனின் சட்டத்தில் இடம் இருக்கிறது,ஆகையால் அத்தகைய குற்றத்திற்கு ஆளாகாமல், நல்ல வீட்டாராக நடந்து கொள்ளுவதற்கு சத்திய பிராமணம் எடுத்துக் கொள்ளுங்கள்.
இல்லையேல் அந்நியனின் வேட்டை தொடரும், இங்கு தீர்ப்பு மட்டும்தான் வழங்கப்படும்,இந்த தீர்ப்பை படித்து விட்டு இந்தியாவில் உள்ள முப்பது கோடி அந்நியன்களும் உங்கள் இல்லம் தேடி வந்து தண்டனைக் கொடுப்பார்கள்.

வரதட்சனைக் கொடுத்து, கணவன் வீட்டிற்குள் போகும் புதுப் பெண்ணே, உன்னையும் எச்சரிக்கிறேன் உன் மகனுக்கும் வரதட்ச்சனைக் கேட்பதற்கு மனக்கணக்கு போட்டிருந்தால், வாசலில் போடும் கோலமாக நினைத்து அதை அழித்துவிடு, இல்லையேல் அந்நியனின் சட்டத்தின் முன்னே நீயும் குற்றவாளிதான், உனக்கும் அதேக் கம்பிதான் தண்டனை.

அந்நியனின் பரிந்துரை :

1 .ஆடம்பர கல்யாணச் செலவைக் குறைத்து விடுங்கள்.

2 .இரு வீட்டாரும் கல்யாணச் செலவை சேர்ந்தே செய்யுங்கள்.

3 .விருந்தை ஒரே இடத்தில் வைத்து இரு வீட்டாரும் இனைந்து கொள்ளுங்கள்.

4 .தங்கம் அணிவதை பெண்கள் புறக்கணியுங்கள்.

5 .சீர்,சீராட்டத்தை மறந்து விடுங்கள்.

இதையும் மீறி நீங்கள் வரதட்சனைப் பணத்தை வாங்கி, வீடு கட்டிடலாம்னு மனக்கோட்டை கட்டி விடாதிர்கள் அழிந்து நாசமாகப் போவிர்கள்,அந்தப் பணத்தை வாங்கித் திங்கப்போகும் நீங்கள் மனித கழிவை தின்பதற்கு சமம்.

பெண்ணையும் கொடுத்து அதை சேர்த்து பொன்னையும் கொடுத்த மக்களின் சாபத்திற்கு ஆளாகிவிடவேண்டாம்.
நண்பர்களே சிந்தியுங்கள்...! பிறகு செயல்படுங்கள்...!

வரதட்ச்சனை மூலமாக வந்தப் பணம் !!!
அது உமது சகோதரனின் அழுகியப் பிணம் !!!


அந்நியன் : 2

Thursday, November 18, 2010

இந்தியா




சமமானகல்வி ,சுத்தமான கழிவறை,நிழலில் நிற்கப் பேருந்துநிலையம்,வறுமை ஒழிப்பு,பெண்களுக்கு பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாப்பு,இன்னும் ஏகப்பட்ட கோடானு கோடி கோரிக்கைகளை தலையில் சுமந்துகொண்டு  உலகை  வலம் வருகிறது இந்தியா.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ரப்பரால் செய்யப் பட்டதால், எப்படிவேனாலும் வளைத்துக் கொள்ளலாம் என்று கேள்விதான் எழுகிறது, ஏன் என்றால் அரசியல் தலைவர்களுக்கும், அகிம்சை ஊழல் பேர்வளிகளுக்கும் இந்த சட்டம் ரொம்பத்தான் வளைந்து கொடுக்கின்றது, சட்டத்தின் தவறா ?இல்லை சட்டத்தைக் காக்கின்ற அரசின் தவறா ?

பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், கிடைக்க மறுக்கப் படும்போது அரசிடம் போராடிப் பெறுவதற்கு சட்டம் வழி செய்கிறது,ஆனால் போராட்டம் என்று தெருவிற்கு வந்தால் அதே சட்டம் நம்மைக் கைது பண்ணுகிறது !!!

சரி விசயத்திற்கு வருவோம், மேலே உள்ளப் புகைப் படத்திற்கு வசனம் தேவை இல்லைன்னு நினைக்கிறேன், ஏன் என்றால் சில புகைப் படத்திற்கு வசனம் தேவைப் படாது பார்த்தாலே புரிந்து விடும்.

அரசும், அரசை நிர்ணயிக்கும் மக்கள் பேரரசும் சிந்தித்து செயல்படனும், மக்களாகிய நாம் ஓட்டுப் போடுவதற்கு முன்பே எத்தகைய அரசை தேர்வு செய்யணும் என்று, தம் சுய புத்தியால் முடிவெடுக்கணும் அப்படி இல்லையென்றால் ஒரு சொட்டுத் தண்ணீருக்காக அரசிடம் போராடிப் பெறுவதற்கு வழியை உண்டுப் பண்ணிவிடும்.

பஞ்சத்தில் பரிதவிக்கும் மேலே உள்ள மனிதர் உணவருந்தி எத்தனை நாள் ஆகி விட்டதோ ? வறுமையின் நிறம் சிகப்பு என்று எல்லோரும் சினிமாவைப் பார்த்துதான் சொன்னிர்கள், பாவம் இந்த மனிதரைப் பார்த்து வறுமையின் நிறம் சிகப்பு என்று நான் சொல்லுகிறேன்.

நடமாடும் ஜவுளிக்கடையாக இருக்கும் இந்த அம்மணியைப் போல பல கோடி அம்மணிகள் இந்தியாவை வலம் வருகிறார்கள் அவர்களின் முத்து மாலையிலிருந்து ஒரு முத்தை தானமாக இந்த ஏழை மக்களுக்கு வழங்க முன்வந்தால் வறுமை ஒழிந்து விடும்,அதற்காக நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை நான் ஒன்னும் குறை சொல்லமாட்டேன் அது உங்களின் சொத்து அதை அணிவதும் அணியாமல் இருப்பதும் உங்களின் விருப்பம்.

ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றுங்கள் !
அவர்கள் இருளில் மூழ்கி இருப்பது
 கல்லறையில் இருப்பது போல தெரிகிறது !

Sunday, November 14, 2010

பெருநாள் நல் வாழ்த்துக்கள்.


கண்ணீரில் மூழ்கி தினம் தினம் செத்து பிழைக்கும் மக்கள்களின் சார்பாக நின்று, அவரின் துக்கத்தில் பங்கு கொள்ளுகிறேன்.
உலகில் அமைதியை நிலை நாட்டவேண்டி அர்ஷின் தளபதி ஏக அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துஆ செய்கின்றேன்.

இந்தத் திருநாளில் உலகில் உள்ள அனைத்து மக்கள்களும் சந்தோசமாக இருக்க வேண்டி எல்லோரும் துஆ செய்வோம்.

இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.



குழந்தைகள் தின வாழ்த்துக்கள்


உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல யாரும் இல்லையா ?

கவலைப் படாதிர்கள் செல்வங்களே கூடிய விரைவில் உங்களுக்கும் விடிவு காலம் பிறக்கும்.இந்திய திரு நாட்டை எல்லோரும் ஏழைகள் நாடு என்றுதான் சொல்லுகிறார்கள் உம்மைப் பார்த்தும் உம்மைப் போன்ற மற்ற ஏழைக் குழந்தைகளை பார்த்தும்.
கட்டாயக் கல்வி சட்டமாகியும் சட்டை செய்யாமல் நீங்கள் உழைக்கிரிர்கள் காரணம் வறுமை, உங்களின் உழைப்பினால் உங்கள் அப்பாவை இழந்த நீங்கள் நோய் வாய் பட்டிருக்கும் உங்கள் அம்மாவுக்காக உழைக்கிரிர்கள் படிப்பையும் மறந்து.

கட்டாயக் கல்வியை தந்த அரசோ உமதின் உள் நிலையை ஆராயாமல் அவசரமாக சட்டம் பிறப்பித்து விட்டதால் உம்மை யாருமே வேலைக்கு சேர்க்க வில்லை என்ற  ஆதங்கத்தில், நீங்கள் பார்க்கிறது தெரிகிறது ஆனால் அரசுக்குத் தெரியவில்லையே !

கட்டாயக் கல்வியை சட்டமாக்கிய அரசு அந்த பிஞ்சுகளின் குடும்ப சூழ்நிலையை ஆராயாமல் இருப்பது துரதிருஷ்ட்டமே, அவர்களின் எதிர் காலத்தைக் கனக்கில்கொண்டு
கொண்டு வரப்பட்ட கட்டாயக் கல்வி அவர்களின் நிகழ் காலத்தின் வறுமையை ஒழிக்க மறந்தது வியப்பளிக்கிறது.

எந்த ஒரு தாயும் அல்லது தந்தையும் தம் மக்கள் படிக்காமல் வேலைக்குப் போவதை விரும்ப மாட்டார்கள் அது ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரனாக  இருந்தாலும் சரி,வறுமையின் காரணமாகவே அக்குழந்தைகளை பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள்,இன்று அவர்கள் வேலைக்கும் போகாமல், படிக்கவும் மனசு இல்லாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி வெகு சீக்கிரம் மன நோயால் பாதிக்கப் படுவதற்கு வழிகாட்டுதலாக இருக்கு இந்த சட்டம்.

சட்டத்தை இயற்றிய மாண்புமிகுக்கள் அவர்களின் குடும்ப சூழ் நிலையையும் ஆராய்ந்து வருமானத்திற்கு ஒரு வழியை திறந்து வைத்து விட்டு இந்த இந்திய திருச் செல்வங்களை பள்ளிக்கு அனுப்பி இருக்கலாமே ?

கவலைப் படாதிர்கள் என்னருமைச் செல்வங்களே உங்களுக்கும் விடிவு காலம் பிறக்கும் எப்போது என்றால் ஊழலில் மூழ்கி கிடக்கும் பணக்கார வர்க்கத்தரிடம் பணத்தை சுரண்டி உங்கள் வாழ்க்கைக்கு ஒளி காட்டிட உத்தம அரசியல் தலைவன் விரைவில் வருவான்.

நாம் காத்திருப்போம்.

உங்களுக்கும் மற்றும் எல்லாக் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.

அந்நியன் : 

Friday, November 12, 2010

சட்டத்தின் சலுகைகள்





ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா?

ஆம் அளிக்கிறது.

நம் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும்போது நள்ளிரவில் திருடர்களோ அல்லது சமூக விரோதிகளோ வீட்டினுள் நுழைந்து உங்களை கொடூரமாக தாக்கிவிட்டு உங்களின் சொத்துக்களை கொள்ளையடித்துப் போகும் சமயத்தில் தாராளமாக நீங்கள் அவர்களைக் கொல்லலாம்.

நீங்கள் கொல்லப் போவது இல்லை தற்க்காப்பிற்க்காக நீங்கள் எதிர்தாக்குதல் செய்யும் பட்ச்சத்தில் அவர்கள் உயிர் துறக்க நேரிட்டால்,அத்தைகைய செயல் குற்றமாகாது இதைப் பற்றி நமது இந்திய அரசியலைமைப்பு சட்டப் பிரிவு என்ன சொல்லுது ?

இது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக்கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்குகிறது. நமது உயிர், உடைமை, உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உரிமையை, தற்காப்புரிமை செயல் (Act Of Private Defence) என்று சட்டம் அங்கிகரிக்கிறது.

இந்த உரிமையை பயன்படுத்தும்போது விளையும் தீங்குகள் குற்றமாக கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம் அனுமதிப்பதோடு, ஊக்கமும் அளிக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு நிலையை கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக நடப்பவர்களிடமும் இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத்தடுத்து மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும் பெருக்குவதற்கு தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதை பார்த்தும் பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து விடுகிறது.

ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம் அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கலாம். அப்போது என்ன செய்யலாம்?

எதிர்த்துப் போராடுங்கள் அதுதான் வீரனுக்கு அழகு என்னைக்கோ ஒரு நாளைக்குப் போகப் போகிற உயிர் ஒரு ரெண்டு தீயவர்களை கொண்டோம்னு போகட்டுமே அதுனாலே ஒரு நூறு பேராவது சந்தோசப் படடுட்டுமே.

அப்படி நீங்கள் தற்க்காப்பிற்க்காக செய்யும் குற்றத்தை குற்றம் என்று எந்த நீதி மன்றத்திலேயும் நிரூபிக்க முடியாது போலிசு வேணா உங்களைக் கைது பண்ணலாம் விசாரணையில் நீங்கள் நிராபாரதிதிதான் என்ன நீங்கள் சட்டம் தெரிந்தவராக இருக்க வேணும் அப்போதுதான் வெல்ல முடியும் தற்காப்பு பிரிவு சட்டம் மக்களுக்கு என்ன என்ன சழுகை அளிக்கிறது பாருங்கள்.


இந்திய தண்டனை சட்டத்தின்

(Indian Penal Code) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.

பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.

பிரிவு 97: முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை
பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள
உரிமை.

இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிப்பு, அல்லது அத்துமீறல் போன்ற குற்றச்செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.

இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ – உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.

ஆகவே நீங்கள் கோழையாக இருக்காமல் நம்மை கொன்னு நம் உடமைகளை அள்ளிப் போகவரும் கயவர்களை கொல்வதற்கு சட்டத்தில் அனுமதி இருக்கு ஆனால் யாருமே இதை செயவதுக் கிடையாது காரணம் நமது கோழைத்தனமும் அறியாமையும்தான்.

இப்படி பட்ட ஒரு சூழ் நிலையில் நீங்கள் சட்டத்தைக் கையில் எடுங்கள் அதற்காக குடும்பச் சண்டைக்கெல்லாம் சட்டத்தைக் கையில் எடுத்து விடாதிர்கள்,அது உங்களையும் உங்கள் வாரிசுகளையும் அழித்து விடும்.



அந்நியன் :