Saturday, November 27, 2010

காமக் கொடூர நாய்கள்

வலைப் பூவில் உலா வரும்போது நண்பர் எம் ரிஷான் ஷெரிப் அவர்களின் தளத்தை காண நேரிட்டது.  http://rishansharif.blogspot.com/
மகிழ்ச்சியோடு படித்துக் கொன்டிருக்கையில் பேரிடியாய் இப்புகைப்படம் கண்ணில் பட்டது
மனம் பொருக்கமுடியாமல் ரென்டு வார்த்தை அழுது கொட்டலாம்னு இதை எழுதுகிறேன்.


இது பாக்கிஸ்த்தானில் காமக் கொடூர நாய்களாலும், குடும்ப தலைவன் என்ற அரக்கர்களாலும்,அமில திரவம் மூலம் இவர்களின் வாழ்க்கையை நாசம்  பண்ணிவிட்டார்கள் அழகு தேவதைகளான இச்சகோதரிகள் நரக வாழ்வினை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

கருவிலியே ச்சீ..என கருவப்படும் பெண்ணானவள் கண்ணீருடன் காலடி எடுத்து வைத்தாலும் காலத்தை வெல்வது கேள்விக்குறியே ?

மரமே..மரமே..உம்மை துளையிட்டு உம்மேனியை ரதமாக்கி அதில் நான் கூடு கட்டுவதை நான் விரும்பவில்லை, ஆனால் பறவையா பிறந்த எனக்கு வேரு வழி தெரியலையே என்று பறவை அழுதுச்சாம்.
இந்தப் பறவைக்கு இருக்கும் இரக்கக் குணம் கூட நன்றி கெட்ட மனித ஜாதியிடம் இல்லையே...!!!

பெண்ணை போதைப் பொருளாய் நினைக்கும் மனித மிருகம் இருக்கும் வரை இந்த அழகிகளை போல், எத்தனை அழகிகள் நரக வேதனை அனுபவிக்கிறார்களோ ?

இந்த அவலத்திற்க்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால் உலகில் பெண் இனமே கோரமாகி போய்விடும்.

பாலியல் பலத்காரம் மற்றும்ஆசிட்  என்னும் கொடிய திரவத்தை எரிதல் போன்ற, நாச  வேலைகளில் ஈடுபடும் நாசக்கார நாய்களை இனம் கண்டு அவர்களின் வாயினுள் ஆசிட்டை ஊற்றவேண்டும், இது நீதி மன்றம் மூலம் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறவேண்டும்.

இது போன்ற காட்டுமிரான்டிகளை காப்பற்ற வரும் கேடுகட்ட கட்சிதலைவன்,லஞ்சம் வாங்கும் போலீசு மற்றும் ஊழல் வக்கீலு,இவர்களுக்கும் இந்த தண்டனையைக் கொடுக்கனும்,இதைப் பார்த்து எல்லா மனிதரும் திருந்தனும்.

பெண்கள் எப்படி வாழனும்னு இஸ்லாம் மிக தெளிவாக கூறி இருக்கு, அதை பின்பற்றினாலே போதும் உங்கள் பாதுகாப்பிர்க்கு.

அந்நியன் 2











காட்சிகள் மனதை காயப் படுத்தி விட்டன,

Thursday, November 25, 2010

விளங்குமா இந்தியா ?

படத்தின் மீது ஒரு க்ளிக் ப்ளீஸ் 

இப்பத் தெரிகிறதா ?

இந்தியா ஏன் இன்னும் பின்னுக்கு தள்ளப் படுகிறது என்று...!!!

வளரும் நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்று,இவ்வளர்ச்சியினை கெடுப்பதற்கு,வளர்ந்த நாடுகளான அமெரிக்கா,பிரிட்டன்,சீனா,மற்றும் எதிரி நாடான பாக்கிஸ்தானும் இதில் முழுப் பங்கு வகிக்கிறது.

அதற்காக அவர்கள் எந்த விதத்தில் துன்பத்தை இந்தியாவிற்கு தரமுடியுமோ,அவ்விதத்தில் அதிகப்பட்ச்சமாக மறைமுகமாகவும்  , குறைந்தப் பட்சம் நேரிடையாகவும், நண்பனைப் போன்று நடித்து, தந்து கொண்டு இருக்கிறார்கள்,நமது இந்தியாவும் வெளுத்தெதல்லாம் பால் என்று நினைத்து, அவர்களின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, கண்ணில்லாத குருடரைப் போன்று, தட்டு தடுமாறி காலத்தைப் போக்கிக் கொண்டு இருக்கிறது.

என்னடா இவன், கல்லூரி துணை வேந்தர்கள் உறங்கும் போட்டோவினைப் போட்டு விட்டு,சம்பந்தம் இல்லாமல் உளறுகிறானே என்று, திட்டி விடுவதற்குள் முழுவதையும் படியுங்கள்.

ஒரு குடும்பம் நல்லா இருக்கணும்னா, வீட்டுத் தலைவன் புத்திசாலியாக இருக்கணும்,ஒரு ஊரு நல்லப் பேரு எடுக்கணும்னா ஊர் மக்கள் நல்லதை செய்யணும்,நாடு நல்லா இருக்கணும்னா நாட்டுத் தலைவர்கள் நல்லவர்களாக இருக்கணும்,சரி..சீக்கிரம் விசயத்திற்கு வந்துடறேன்.

எத்தனையோ எதிர்ப்புகளை இந்தியா, ராணுவம் மூலம் சந்தித்து சாதனைப் பல புரிந்திருக்கு,வெற்றியும் பெற்றிருக்கு,ஆனால் இயற்க்கை பேரழிவுகளை எதிர்த்து இதுவரைக்கும் எந்த ஒரு நாடும் வெற்றிக் கண்டதில்லை.
வருமுன் காப்போம் என்ற திட்டம் எதற்கு கொண்டு வந்தது என்றால்,இயற்கைப் பேரழிவுக்குக் காரணமான சிலவற்றை கண்டறிந்து, நாம் செய்கின்ற செயலை குறைப்போமானால்,அதனின் பலன்கள் நன்மையில் போயி முடியும்.அதற்க்கத்தான் இந்த வேந்தர்கள் கூடி இருக்கிறார்கள்.

இங்கு நடந்து கொண்டிருக்கிற கூட்டம் ஒன்னும் சாதாரணக் கூட்டம் இல்லை, மிகப் பெரியக் கூட்டம்,பல்கலைக் கழகத்தின் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் துணை வேந்தர்கள் கூடியிருக்கும் மகா சபை.இச்சபையில் பேசக்கூடிய பேச்சுக்கள் அனைத்தும் கோடிக்கணக்கான கல்லூரி மாணவ மாணவிகளுக்கு எத்தி வைக்கக் கூடிய ஒரு ரகசிய காப்பு பாடம்,இந்தக் கூட்டத்திற்காக பல இலட்ச்சங்களை தமிழக அரசு செலவழித்து நடத்திக் கொண்டிருக்கிறது.
நமது அய்யாக்களோ ஒரு கவலையில்லாமல், கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்.
அய்யா அப்துல் கலாம் அவர்கள் கனவு காணசொன்னதை,தவறாக நினைத்துக் கொண்டு கனவு காண்கிறார்களோ ?

விளங்குமா இந்தியா ?

எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று, புகைப் படத்தின் கீழேயே எழுதி இருக்கு படித்து கொள்ளுங்கள் !

இவர்களைப் போன்றவர்கள் நாட்டிற்கு தேவையா ?


இவர்களுக்கு தண்டனைக் கொடுத்தால் தப்பா ?


ஒரு மாறுதலுக்காக தண்டனையை நீங்கள் வழங்குங்கள் !

அந்நியன் 2

Monday, November 22, 2010

வரதட்ச்சனைக் கொடுமை !!!



வரதட்ச்சனைக் கொடுமை !!!

புரியாதப் புதிராகவே இருக்கிறது இந்த சொல்...! வரதட்ச்சனை கேட்ட்பவள் பெண்,வரதட்ச்ச்சனையை கொடுப்பவள் பெண்,அதை போராடி வீதிக்கு கொண்டு வருபவள் பெண்,நீதி மன்றத்தில் தீர்ப்பு சொல்லுபவளும் பெண்.
இப்படித் தலைமுறை தலைமுறையாக தொடரும் இந்த தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாதா ?
கண்டிப்பாக முடியும்,பெண்கள் மனசு வைத்தால் மட்டுமே முடியும்.

நாற்ப்பது வருசத்திற்கு முன்னாடி நீங்கள் மருமகளாக, மாமியார் வீட்டிற்குப் போகும்போது வரதட்ச்ச்சனைக் கொடுமைக்கு, மாமியார், மற்றும் நாத்தனர்களால் பெரும் துனபத்திர்க்கு ஆளாக்கப் பட்டிர்கள்... சரியா ?
அன்று நீங்கள் மருமகள்கள்...!!! இன்று நீங்கள் மாமியார்கள்...!!!
நீங்கள்தான், இந்த தலைமுறையில் வரக்கூடிய மருமக்கள்மார்களை வரதட்ச்சனைக் கேட்டு தொல்லைப் பண்ணுகிறிர்கள்.
இதே மருமக்கள்மார்தான் இன்னும் இருபது வருஷம் கழித்து வரதட்ச்சனைக் கேட்கப் போகிறார்கள், ஆகமொத்தம் கூட்டி கழிச்சுப் பார்த்தால், பெண்ணிற்கு பெண்ணே எதிரி !!!

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதற்காகவே பெண் வீட்டார்கள், பயிரிடப்படும் நிலங்களை விற்று, தம் பொண்ணுகளை கரை சேர்த்துள்ளார்கள்,கணவன் என்றப போர்வையில் கைக்கூலி வாங்கியவன் திருடன்தான்.
திருடன் கத்தியைக் காட்டி திருடுவான்,நீயோ தாலியைக் காட்டி திருடுகிறாய்.
வரதட்ச்சனைக் கொடுமையைப் பற்றி எழுத்தின் மூலமாகவும்,சமூக அமைப்பின் மூலமாகவும்,கவிதைகள் மூலமாகவும்,மற்றும் பல போராட்டங்கள் மூலமாகவும், எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்க்காத இந்த கேடுகட்ட சமூகத்திற்கு, அன்னியனைப் போன்றவர்கள் தண்டனைக் கொடுத்தால், குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

தொட்டதெல்லாம் பொன்னாகிறதே என்று, பெண் வீட்டாரை தொல்லைப் படுத்தும் ஆண் வீட்டாரை எச்சரிக்கிறேன்.
வாங்கியது வாங்கியதாகவே இருக்கட்டும், இனி நீங்கள் வரதட்ச்சனை என்று வாயை எடுத்தால் பழுக்க காய வைத்த கடப்பாறையை எடுத்து உங்கள் வாயில் நுழைப்பதற்கு அந்நியனின் சட்டத்தில் இடம் இருக்கிறது,ஆகையால் அத்தகைய குற்றத்திற்கு ஆளாகாமல், நல்ல வீட்டாராக நடந்து கொள்ளுவதற்கு சத்திய பிராமணம் எடுத்துக் கொள்ளுங்கள்.
இல்லையேல் அந்நியனின் வேட்டை தொடரும், இங்கு தீர்ப்பு மட்டும்தான் வழங்கப்படும்,இந்த தீர்ப்பை படித்து விட்டு இந்தியாவில் உள்ள முப்பது கோடி அந்நியன்களும் உங்கள் இல்லம் தேடி வந்து தண்டனைக் கொடுப்பார்கள்.

வரதட்சனைக் கொடுத்து, கணவன் வீட்டிற்குள் போகும் புதுப் பெண்ணே, உன்னையும் எச்சரிக்கிறேன் உன் மகனுக்கும் வரதட்ச்சனைக் கேட்பதற்கு மனக்கணக்கு போட்டிருந்தால், வாசலில் போடும் கோலமாக நினைத்து அதை அழித்துவிடு, இல்லையேல் அந்நியனின் சட்டத்தின் முன்னே நீயும் குற்றவாளிதான், உனக்கும் அதேக் கம்பிதான் தண்டனை.

அந்நியனின் பரிந்துரை :

1 .ஆடம்பர கல்யாணச் செலவைக் குறைத்து விடுங்கள்.

2 .இரு வீட்டாரும் கல்யாணச் செலவை சேர்ந்தே செய்யுங்கள்.

3 .விருந்தை ஒரே இடத்தில் வைத்து இரு வீட்டாரும் இனைந்து கொள்ளுங்கள்.

4 .தங்கம் அணிவதை பெண்கள் புறக்கணியுங்கள்.

5 .சீர்,சீராட்டத்தை மறந்து விடுங்கள்.

இதையும் மீறி நீங்கள் வரதட்சனைப் பணத்தை வாங்கி, வீடு கட்டிடலாம்னு மனக்கோட்டை கட்டி விடாதிர்கள் அழிந்து நாசமாகப் போவிர்கள்,அந்தப் பணத்தை வாங்கித் திங்கப்போகும் நீங்கள் மனித கழிவை தின்பதற்கு சமம்.

பெண்ணையும் கொடுத்து அதை சேர்த்து பொன்னையும் கொடுத்த மக்களின் சாபத்திற்கு ஆளாகிவிடவேண்டாம்.
நண்பர்களே சிந்தியுங்கள்...! பிறகு செயல்படுங்கள்...!

வரதட்ச்சனை மூலமாக வந்தப் பணம் !!!
அது உமது சகோதரனின் அழுகியப் பிணம் !!!


அந்நியன் : 2

Thursday, November 18, 2010

இந்தியா




சமமானகல்வி ,சுத்தமான கழிவறை,நிழலில் நிற்கப் பேருந்துநிலையம்,வறுமை ஒழிப்பு,பெண்களுக்கு பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாப்பு,இன்னும் ஏகப்பட்ட கோடானு கோடி கோரிக்கைகளை தலையில் சுமந்துகொண்டு  உலகை  வலம் வருகிறது இந்தியா.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ரப்பரால் செய்யப் பட்டதால், எப்படிவேனாலும் வளைத்துக் கொள்ளலாம் என்று கேள்விதான் எழுகிறது, ஏன் என்றால் அரசியல் தலைவர்களுக்கும், அகிம்சை ஊழல் பேர்வளிகளுக்கும் இந்த சட்டம் ரொம்பத்தான் வளைந்து கொடுக்கின்றது, சட்டத்தின் தவறா ?இல்லை சட்டத்தைக் காக்கின்ற அரசின் தவறா ?

பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், கிடைக்க மறுக்கப் படும்போது அரசிடம் போராடிப் பெறுவதற்கு சட்டம் வழி செய்கிறது,ஆனால் போராட்டம் என்று தெருவிற்கு வந்தால் அதே சட்டம் நம்மைக் கைது பண்ணுகிறது !!!

சரி விசயத்திற்கு வருவோம், மேலே உள்ளப் புகைப் படத்திற்கு வசனம் தேவை இல்லைன்னு நினைக்கிறேன், ஏன் என்றால் சில புகைப் படத்திற்கு வசனம் தேவைப் படாது பார்த்தாலே புரிந்து விடும்.

அரசும், அரசை நிர்ணயிக்கும் மக்கள் பேரரசும் சிந்தித்து செயல்படனும், மக்களாகிய நாம் ஓட்டுப் போடுவதற்கு முன்பே எத்தகைய அரசை தேர்வு செய்யணும் என்று, தம் சுய புத்தியால் முடிவெடுக்கணும் அப்படி இல்லையென்றால் ஒரு சொட்டுத் தண்ணீருக்காக அரசிடம் போராடிப் பெறுவதற்கு வழியை உண்டுப் பண்ணிவிடும்.

பஞ்சத்தில் பரிதவிக்கும் மேலே உள்ள மனிதர் உணவருந்தி எத்தனை நாள் ஆகி விட்டதோ ? வறுமையின் நிறம் சிகப்பு என்று எல்லோரும் சினிமாவைப் பார்த்துதான் சொன்னிர்கள், பாவம் இந்த மனிதரைப் பார்த்து வறுமையின் நிறம் சிகப்பு என்று நான் சொல்லுகிறேன்.

நடமாடும் ஜவுளிக்கடையாக இருக்கும் இந்த அம்மணியைப் போல பல கோடி அம்மணிகள் இந்தியாவை வலம் வருகிறார்கள் அவர்களின் முத்து மாலையிலிருந்து ஒரு முத்தை தானமாக இந்த ஏழை மக்களுக்கு வழங்க முன்வந்தால் வறுமை ஒழிந்து விடும்,அதற்காக நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை நான் ஒன்னும் குறை சொல்லமாட்டேன் அது உங்களின் சொத்து அதை அணிவதும் அணியாமல் இருப்பதும் உங்களின் விருப்பம்.

ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றுங்கள் !
அவர்கள் இருளில் மூழ்கி இருப்பது
 கல்லறையில் இருப்பது போல தெரிகிறது !

Sunday, November 14, 2010

பெருநாள் நல் வாழ்த்துக்கள்.


கண்ணீரில் மூழ்கி தினம் தினம் செத்து பிழைக்கும் மக்கள்களின் சார்பாக நின்று, அவரின் துக்கத்தில் பங்கு கொள்ளுகிறேன்.
உலகில் அமைதியை நிலை நாட்டவேண்டி அர்ஷின் தளபதி ஏக அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துஆ செய்கின்றேன்.

இந்தத் திருநாளில் உலகில் உள்ள அனைத்து மக்கள்களும் சந்தோசமாக இருக்க வேண்டி எல்லோரும் துஆ செய்வோம்.

இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.



குழந்தைகள் தின வாழ்த்துக்கள்


உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல யாரும் இல்லையா ?

கவலைப் படாதிர்கள் செல்வங்களே கூடிய விரைவில் உங்களுக்கும் விடிவு காலம் பிறக்கும்.இந்திய திரு நாட்டை எல்லோரும் ஏழைகள் நாடு என்றுதான் சொல்லுகிறார்கள் உம்மைப் பார்த்தும் உம்மைப் போன்ற மற்ற ஏழைக் குழந்தைகளை பார்த்தும்.
கட்டாயக் கல்வி சட்டமாகியும் சட்டை செய்யாமல் நீங்கள் உழைக்கிரிர்கள் காரணம் வறுமை, உங்களின் உழைப்பினால் உங்கள் அப்பாவை இழந்த நீங்கள் நோய் வாய் பட்டிருக்கும் உங்கள் அம்மாவுக்காக உழைக்கிரிர்கள் படிப்பையும் மறந்து.

கட்டாயக் கல்வியை தந்த அரசோ உமதின் உள் நிலையை ஆராயாமல் அவசரமாக சட்டம் பிறப்பித்து விட்டதால் உம்மை யாருமே வேலைக்கு சேர்க்க வில்லை என்ற  ஆதங்கத்தில், நீங்கள் பார்க்கிறது தெரிகிறது ஆனால் அரசுக்குத் தெரியவில்லையே !

கட்டாயக் கல்வியை சட்டமாக்கிய அரசு அந்த பிஞ்சுகளின் குடும்ப சூழ்நிலையை ஆராயாமல் இருப்பது துரதிருஷ்ட்டமே, அவர்களின் எதிர் காலத்தைக் கனக்கில்கொண்டு
கொண்டு வரப்பட்ட கட்டாயக் கல்வி அவர்களின் நிகழ் காலத்தின் வறுமையை ஒழிக்க மறந்தது வியப்பளிக்கிறது.

எந்த ஒரு தாயும் அல்லது தந்தையும் தம் மக்கள் படிக்காமல் வேலைக்குப் போவதை விரும்ப மாட்டார்கள் அது ஏழையாக இருந்தாலும் சரி பணக்காரனாக  இருந்தாலும் சரி,வறுமையின் காரணமாகவே அக்குழந்தைகளை பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள்,இன்று அவர்கள் வேலைக்கும் போகாமல், படிக்கவும் மனசு இல்லாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி வெகு சீக்கிரம் மன நோயால் பாதிக்கப் படுவதற்கு வழிகாட்டுதலாக இருக்கு இந்த சட்டம்.

சட்டத்தை இயற்றிய மாண்புமிகுக்கள் அவர்களின் குடும்ப சூழ் நிலையையும் ஆராய்ந்து வருமானத்திற்கு ஒரு வழியை திறந்து வைத்து விட்டு இந்த இந்திய திருச் செல்வங்களை பள்ளிக்கு அனுப்பி இருக்கலாமே ?

கவலைப் படாதிர்கள் என்னருமைச் செல்வங்களே உங்களுக்கும் விடிவு காலம் பிறக்கும் எப்போது என்றால் ஊழலில் மூழ்கி கிடக்கும் பணக்கார வர்க்கத்தரிடம் பணத்தை சுரண்டி உங்கள் வாழ்க்கைக்கு ஒளி காட்டிட உத்தம அரசியல் தலைவன் விரைவில் வருவான்.

நாம் காத்திருப்போம்.

உங்களுக்கும் மற்றும் எல்லாக் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.

அந்நியன் : 

Friday, November 12, 2010

சட்டத்தின் சலுகைகள்





ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா?

ஆம் அளிக்கிறது.

நம் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும்போது நள்ளிரவில் திருடர்களோ அல்லது சமூக விரோதிகளோ வீட்டினுள் நுழைந்து உங்களை கொடூரமாக தாக்கிவிட்டு உங்களின் சொத்துக்களை கொள்ளையடித்துப் போகும் சமயத்தில் தாராளமாக நீங்கள் அவர்களைக் கொல்லலாம்.

நீங்கள் கொல்லப் போவது இல்லை தற்க்காப்பிற்க்காக நீங்கள் எதிர்தாக்குதல் செய்யும் பட்ச்சத்தில் அவர்கள் உயிர் துறக்க நேரிட்டால்,அத்தைகைய செயல் குற்றமாகாது இதைப் பற்றி நமது இந்திய அரசியலைமைப்பு சட்டப் பிரிவு என்ன சொல்லுது ?

இது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக்கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்குகிறது. நமது உயிர், உடைமை, உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உரிமையை, தற்காப்புரிமை செயல் (Act Of Private Defence) என்று சட்டம் அங்கிகரிக்கிறது.

இந்த உரிமையை பயன்படுத்தும்போது விளையும் தீங்குகள் குற்றமாக கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம் அனுமதிப்பதோடு, ஊக்கமும் அளிக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு நிலையை கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக நடப்பவர்களிடமும் இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத்தடுத்து மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும் பெருக்குவதற்கு தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதை பார்த்தும் பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து விடுகிறது.

ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம் அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கலாம். அப்போது என்ன செய்யலாம்?

எதிர்த்துப் போராடுங்கள் அதுதான் வீரனுக்கு அழகு என்னைக்கோ ஒரு நாளைக்குப் போகப் போகிற உயிர் ஒரு ரெண்டு தீயவர்களை கொண்டோம்னு போகட்டுமே அதுனாலே ஒரு நூறு பேராவது சந்தோசப் படடுட்டுமே.

அப்படி நீங்கள் தற்க்காப்பிற்க்காக செய்யும் குற்றத்தை குற்றம் என்று எந்த நீதி மன்றத்திலேயும் நிரூபிக்க முடியாது போலிசு வேணா உங்களைக் கைது பண்ணலாம் விசாரணையில் நீங்கள் நிராபாரதிதிதான் என்ன நீங்கள் சட்டம் தெரிந்தவராக இருக்க வேணும் அப்போதுதான் வெல்ல முடியும் தற்காப்பு பிரிவு சட்டம் மக்களுக்கு என்ன என்ன சழுகை அளிக்கிறது பாருங்கள்.


இந்திய தண்டனை சட்டத்தின்

(Indian Penal Code) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.

பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.

பிரிவு 97: முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை
பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள
உரிமை.

இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிப்பு, அல்லது அத்துமீறல் போன்ற குற்றச்செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.

இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ – உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.

ஆகவே நீங்கள் கோழையாக இருக்காமல் நம்மை கொன்னு நம் உடமைகளை அள்ளிப் போகவரும் கயவர்களை கொல்வதற்கு சட்டத்தில் அனுமதி இருக்கு ஆனால் யாருமே இதை செயவதுக் கிடையாது காரணம் நமது கோழைத்தனமும் அறியாமையும்தான்.

இப்படி பட்ட ஒரு சூழ் நிலையில் நீங்கள் சட்டத்தைக் கையில் எடுங்கள் அதற்காக குடும்பச் சண்டைக்கெல்லாம் சட்டத்தைக் கையில் எடுத்து விடாதிர்கள்,அது உங்களையும் உங்கள் வாரிசுகளையும் அழித்து விடும்.



அந்நியன் :

Sunday, November 7, 2010

லஞ்சம்






அரசியல்வாதியானாலும் சரி,அரசு அதிகாரியானாலும் சரி,லஞ்சம் என்ற வார்த்தையை உபயோகிக்காத நாளேக் கிடையாது.
கேட்க்கும் விதம் பலவிதமாக இருக்கலாம்,ஆனால் பொருள் லஞ்சமே!

இந்தியத் தாய் வெள்ளைக் காரனிடம் பல நூறு வருடம் அடிமைபட்டிருந்தாள்
பாவம் அவளை மீட்க்க நமது தேசத் தலைவர்கள் ஜாதி மதம் மறந்து, ஒன்றிணைந்து பல உயிர்களை பலியிட்டு,பல இன்னல்களை மதித்தேற்று,வீர மரணித்தப் பிறகு அவளை மீட்டார்கள்.

பசுமை நிறைந்த காடுகளும்,பலகோடி ஏக்கர் பல்ல மேடுகளையும் திகைப்பூட்டும் வன விலங்குகளையும்,பாங்காய் பலவித அருவிகளையும்,கம்பீரமான மலைத் தோற்றங்களையும்,இன்னும் பல ஆயிரம் இயற்க்கை வளங்களையும் இறைவனடிமிருந்து இலவசமாக பெற்று இருந்தாள்.இவ்வளவு அழகினைப் பெற்றத் தாயவள் இன்று உலக மக்களிடம் தலை குனிந்து நிக்கிறாள்.

ஆம் ! உலக தர வரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடமாம்,
முதலிடம் என்றால் சந்தோசப் படவேண்டியதுதானே என்று நீங்கள் கேள்விக் கேட்கலாம்,
* பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் பெற்றிருந்தால் சந்தோசப் பட்டிருப்போம்.
*வறுமையை ஒழித்திருந்தால் கூட சந்தோசப் பட்டிருப்போம்.
*இன்னும் எத்தனையோ நல்ல விசயங்களில் முதலிடம் பெற்றிருந்தாலும் சந்தோசப் பட்டிருப்போம்.
ஆனால் லஞ்சம் வாங்குவதலில் முதலிடமாம்.
நூற்றி பத்துக் கோடி மக்கள்கள் வசிக்கும் நாட்டில் இதுலாம் சகஜம்தானே, என்று கேட்டு விடாதிர்கள், ஏன் என்றால் சிறி சிறிய தப்புக்களை நாம் முளையிலையே கிள்ளி எரியாததுனாலே இன்று வேரூன்றி பெரிய ஆல மரமாக வளர்ந்து நிக்குது,லஞ்சம் என்ற விசச் செடி.
பக்கத்து நாடான சீனாவையும் பாருங்கள், நம்மை விட மக்கள் பெருக்கத்தில் கூடுதலானவர்கள்தான்,இன்று உலகத் தர வரிசையில் சீனா முதலிடம்.          ( ஆசியக்கண்டம் மட்டும் )
லஞ்சம் வாங்குவதிலியா ?
இல்லை உணவு உற்ப்பத்திலேயும் சரி,ஆயுத உற்பத்தியிலும் சரி,மற்றும் ஏனைய வர்த்தக ரீதியிலும் சரி,சீனா நம்பர் ஒண்ணாகவே திகழ்கிறது,
அதுக்குக் காரணம் ???
மக்கள்கல்தான் காரணம்,அயராத உழைப்பு,அனாவசியமாக வாகனத்தை உபயோகிக்காமல்,ஏன் என்றால் வாகன போக்குவரத்தினால் மாசு ஏற்ப்பட்டு விடுமாம்,எரி பொருள் வீணாகி விடுமாம்,என்று காரணம் காட்டி பெரியவர் முதல் சிறியவர் வரை,பணக்காரனிலிருந்து ஏழைகள் வரை,அரசியல் வாதியிலிருந்து,அரசு அதிகாரி வரை, பத்துக் கிலோ மீட்டர் தூரம் இருக்கும் நகர் களுக்கு சைக்கிளில்தான் செல்லுகிறார்கள்.

நம்ம நாட்டிலேயும்தான் இருக்கார்களே, சைக்கிள் ஓட்டுவதை கேவலமாக நினைக்கும் மக்கள்.

மிக சமிபத்தில் உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கு,லஞ்சம் பெறுபவர்கள்,அவர்கள் செய்து கொடுக்கும் பணிக்கு ஏற்றவாறு தொகையை தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும், அதிகமாக வசூல் பண்ணக் கூடாது என்றும், விசித்திர தீர்ப்பை வாரி வழங்கி இருக்கிறார்கள் நீதிமான்கள் ??

இந்தியச் சட்டத்தில் ஆயிரம் ஓட்டை இருக்கு,கீழ் கோர்ட் தண்டனை வழங்கியால்,மேல் கோர்ட் அதை தடை செய்கிறது ,மேல் கோர்ட் விதித்த தடையை தற்காலிகமாக சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்து விடுகிறது,இப்படி தடை,தடைன்னு, தடையை விதித்தால் தண்டனை யார் கொடுப்பது ??? அப்போ பாதிக்கப் பட்டவரின் கதி ?
குற்றம் சுமத்தப் பட்டவனுக்கு குற்றம் செய்வதற்கு மேலும் ஆர்வம் தூண்டுமே.... இன்னும் பல குற்றம் புரிவதற்கு.

இதுக்கெல்லாம் யார் காரணம் ?
லஞ்சம்தான் காரணம்.

இலவசப் பாடப் புத்தகம் பெற லஞ்சம்,இலவச சீருடைப் பெற லஞ்சம்,இலவச சைக்கிள்கள் பெற லஞ்சம்,அரசிடமிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய இலவச சலுகைகளை பெற லஞ்சம்,பிறப்பு சான்றிதழ்கள் பெற லஞ்சம்,இறப்பு சான்றிதழ்கள் பெற லஞ்சம்,இப்படி ஈவு இரக்கமின்றி லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளையும்,அரசு அதிகாரிகளையும் என்ன செய்வது ?

இவர்களை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா ? என்று நீங்கள் கேள்விக் கேட்கலாம் ,
இவர்களை நாம் சட்டத்தின் முன்பு கொண்டு போவதற்கு முன்பு பாமரக் குடி மகனும் சட்டத்தை அறிந்திருக்கனும்,அப்பத்தான் இவர்கள் சட்டத்தின் ஓட்டையிலிருந்து தப்பமுடியாமல் பாது காக்க முடியும்.

அதுக்காக வக்கிலுக்கா படிக்க முடியும் என்று முனங்காதிர்கள்.
வக்கீலும்,போலிசும்,நீதிமான்களும் மட்டுமே சட்டத்தை தெரிந்து இருப்பதுனாலேதான் மக்கள்களை அவர்கள் ஒரு தூசியாகவே பார்க்கிறார்கள்,சட்ட புதுத்தகத்தை ஒரு முறை புரட்டிப் பாருங்கள், அது மக்கள்களுக்கு என்ன... என்ன சலுகைகளை வழங்கியிருக்கு என்று,போலிஸ் நமக்கு சேவை செய்யக் கூடிய வேலைக் காரன்தான் என்று சட்டம் சொல்லுது,ஆனால் போலிசுக்கு நாமாதான் வேலைக்காரனா இருக்கோம்.

இந்த அறியாமை ஒழிக்கப் படனும்,சட்டத்தை அனைவரும் கட்டாயக் கல்விப் போல படிக்கணும், அப்பத்தான் இந்த ஊழல் பெருச்சாளிகளை ஒழிக்க முடியும்,நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும்.



சட்டத்தைத்தான் நாம் கையில் எடுக்கக் கூடாது 
சட்டப் புத்தகத்தை எடுக்கலாம்.