Monday, October 17, 2011

விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


வலை உலகில் என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை முழுதாக படிக்கவும் நேரம் இல்லை
ஆகையால் தமிழ் மணத்தின் தவறுகள் நண்பர்களால் கோடிட்டு காண்பிக்கப் பட்டுள்ளதால் தமிழ்மணம் தார்மிக பொறுப்பேற்று மன்னிப்போ அல்லது விளக்கமோ அளிப்பதுதான் நீதி.

விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?

Wednesday, September 28, 2011

நண்பர்களே.....


நண்பர்களே கடந்த நான்கு நாட்களாய் வெளி ஊரில் இருப்பதால் உங்கள் வலை பூவிற்கு வர இயலவில்லை இன்னும் இரண்டு நாட்களில் வேலை முடிந்தப் பிறகு சந்திக்கிறேன்.


நன்றி.

Thursday, September 22, 2011

பெற்ற குழந்தையை உயிரோடு திண்ணும் அப்பா !!!


தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசியான இக்கொடியவன் தாம் பெற்ற பிள்ளையை உயிரோடு கடித்து சாப்பிட்டுள்ளான்.

பெற்ற மனம் கல்லாகி
குற்றமெனும் தெரிந்தும்
கற்றதறியா பிஞ்சுதனை
கடித்து குதறும் காட்சியினை பார்.


மழை துளி விழுந்தும்
மலர் பல நனைந்தும்
மங்காத மண் பூமியில்
கொடூரத்தின் சாட்சியினை பார்.


பசிக்காத வயிறும்
ருசிக்காத நாவும்
இக்கொடுஞ் செயலை 
செய்வதை நன்றாக பார்.


என் இதயம் கிழித்து
குரல் வளையை நெரித்து
என் குருதி குடித்த
கொலைகாரனை உற்றுப் பார்.


நெற்றி முத்தமிட்டு
வெற்றி என சத்தமிட்டு
எனை சுற்றி நீ வருவாய் என
காத்திருந்தேனே அப்பா.


கன்னத்தில் என் வண்ணத்தில்
என்ன குறை கண்டாயோ
மது கிண்ணத்தில் பொடியாக்கி
குடிக்கிறியே நான் பிறந்தது தப்பா?


உதிர்ந்த முத்தங்களும்
உணர்வற்ற சத்தங்களும்
உணர்ச்சிகள் இல்லாமல்
அழுத்து போகவில்லையே.


கறை படிந்த உன் உள்ளங்களை
சிறை பிடிக்க வேண்டும் என
பறை போட்டு சொல்லவும்
என் உயிரும் இல்லையே.


என் நினைவுகளை நீ சுமந்து
பின் விளைவுகளை நீ அடைந்து
மனித கழிவை திண்ணும்
நாளும் உனக்கு வராதோ?


உன் உயிரோடு உயிராக
நான் இல்லாமலும்...
உன் உயிருக்கு உறவாக 
ஆள் இல்லாமலும்...
உன் உயிர் இருக்கும் வரை
உணர்ச்சியின் வலிகள் தொடரட்டும்.



Friday, September 16, 2011

என்னது...மீண்டும் சிரிப்பா? jokes


மிச்சர் கடையில் கொசுரு கேட்க்கிறவனுங்க...
டீ கடையில் ஓசி பேப்பர் படிக்கிறவனுங்க...
சாக்ஸை தொவைக்காமல் போடுறவனுங்க...
பப்ள்கம் சாப்பிட்டு சீட்டுக்கு அடியில் ஒட்டுறவனுங்க...
சோறு வாங்கி கொடுத்துட்டு சொல்லி காட்டுறவனுங்க...
பஸ்ஸில் ஓசி பயணம் செய்ரவனுங்க...
இவர்கள் எல்லோரும் வன்மையாக தண்டிக்கப் படக் கூடியவர்கள்.



அப்புறம் என்ன சிரிக்க வேண்டியதுதானே.



ஆசிரியர்; நான் வரும்போது ஏன் சிரிக்கிறீர்கள்?
மாணவர்கள்; துன்பம் வரும்போது சிரிக்கணும்ன்னு நீங்கதானே சொன்னீங்க.
ஆசிரியர்;தண்ணீரில் வாழும் மூன்று உயிரினங்கள் சொல்லு
மாணவன்; மீன்,முதலை,எங்க அப்பா.
நோயாளி: டாக்டர் இதுக்கு மேலே என் வாயை திறந்தால் வாய் வலிக்கிறது.
டாக்டர்: யோவ்... நான் திறக்க சொன்னது வாயை இல்லை உன் மணி பர்ஷை.
---------------
கபாலிக்கு அந்த இன்ஸ்பெக்டர் சல்யூட் அடிக்கிறாரே எதுக்கு?
மாமூல் கொடுக்கிற பட்டியல்ல 30 வருஷமா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறானாம்.
-------------
ஒருவர்:என் மனைவியை இன்னிக்குத்தான் பயங்கரமா திட்டினேன்.
மற்றொருவர்: நீ திட்டுற வரைக்கும் உன் மனைவி சும்மாவா இருந்தாங்க?
ஒருவர் : இல்லை அவ நல்லா தூங்கிட்டு இருந்தா.
கணவன்: சீனி டப்பாவில் எதுக்கு உப்பு என்று எழுதி வைக்கிறே?
மனைவி : எல்லாம் எறும்பை ஏமாற்றத்தான்.
---------------
கபாலி: ஹலோ! சுந்தரா ஜவுளிக்கடையா?
ஓனர் : ஆமாங்க நீங்கள் யாரு பேசுறது?
கபாலி: நான் சைதாப்பேட்டை கபாலி பேசுறேன் ராத்திரி உங்க கடைக்கு வந்திருந்தேன் நல்ல டிஷைன் புடவைகள் இல்லை எப்போ வரும்னு சொல்ல முடியுமா சார்?
ஓனர்: !!!
---------------
நோயாளி: டாக்டர் எனக்கு இப்போ ஆப்ரேசன் பன்ன வேண்டாம் எனக்கு டைம் நல்லா இல்லைனு ஜோசியகாரர் சொல்லி இருக்கார்.
டாக்டர்: அதே ஜோசியகாரன்தாய்யா டைம் நல்லா இருக்கு நீங்கள் ஆப்ரேஷன் பன்னலாம் என்று என்னிடம் சொல்லி இருக்கார்.
நர்ஸ்: டாக்டர்..டாக்டர் ஸ்கேன் மெசினை கானோம்!!
டாக்டர்: அய்யோயோ...கபாலிகிட்டே ஸ்கேன் எடுக்கனும் சொன்னதை தப்பா புறிஞ்சுக்கிட்டு ஸ்கேன் மெசினை தூக்கிட்டு போயிட்டானே.
----------------
நோயாளி: நாய் துரத்துற மாதுரியே கனவு வருது டாக்டர்.
டாக்டர்: அப்படியா மூணு நாலு கல்லை வைத்துக் கொண்டு தூங்கு நாய் துரத்தாது.





Sunday, September 11, 2011

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்...



அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!
$$$$$$$$$$$$$$$$$$$$
பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா 
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!
$$$$$$$$$$$$$$$$$$$$
மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????
$$$$$$$$$$$$$$$$$$$$
குளிர்காலத்துல ஆபரேஷன் பண்றதா இருந்தா டாக்டருக்கு ரொம்ப இஷ்டம்...."
"ஏன்?"
"ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்னால நடுங்குதுன்னு சொல்லி சமாளிச்சுறலாமே!"
$$$$$$$$$$$$$$$$$$$$$
"என்னடா! கையில பைனாகுலர் எடுத்துகிட்டு எங்கே போறே?"
"நான் என் "தூரத்து" சொந்தக்காரர் ஒருத்தர பாக்கப்போறேன்."
$$$$$$$$$$$$$$$$$$$$$
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது,நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
$$$$$$$$$$$$$$$$$$$$$
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$
"ஏண்டி டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல..."
"ஆமாம்...அதுக்கென்ன...?"
"நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!"
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "ஓ" போட்டாங்க...
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
முதலாளி: இந்தக் கம்பெனியில்"நைட் வாட்ச் மேன்"வேலை கேட்கறியே,உனக்கு அனுபவம் இருக்குதா?
வேலைக்கு வந்தவன்: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க.இரவுல லேசா சின்ன சத்தம் கேட்டாக் கூட நான் விழித்துக் கொண்டு விடுவேன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நர்ஸ்:ஆப்ரேஷன் தியேட்டர்ல டெலிபோன் வைக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்?
டாக்டர்: ஏன்?
நர்ஸ்: இப்ப அதுவும் டெட் ஆய்டுச்சு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பொதுக் கூட்ட மேடையிலே ஏன் தீப்பிடிச்சிருக்கு?
தலைவர் அனல் பறக்கப் பேசினாராம்!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...? காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
போலீஸ்:!!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மனைவி: ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா இல்ல ரசம் வைக்கட்டுமா?
கணவன்: முதல்ல எதாவது ஒன்னு வை... அப்பறமா அதுக்கு பேரு வச்சுக்கலாம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க...
வணக்கம்தான் சொல்லிட்டேனே...வெண்ணே மறுக என்ன வணக்கம் நொனக்கம்னு.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
யாருங்க அந்த மகாலட்சுமி ?
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... பெண் அவ்வளவு அழகா? 
இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா.
$$$$$$$$$$$$$$$$$$$$$$
நீதிபதி:ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?
கபாலி:என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான் அதான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே? வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மெயில் அனுப்பி தந்த நண்பர்களுக்கு நன்றி.


Wednesday, September 7, 2011

டெல்லியில் குண்டு வைத்தது யார்?



டெல்லி ஐகோர்ட்டு முன்பு இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 10 பேர் பலியானார்கள். 65 பேர் காயம் அடைந்தனர். 

இந்த குண்டு வெடிப்புக்கு பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.பாராளுமன்றம் இன்று கூடியதும்,சபாநாயகர் மீராகுமார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

முடிந்தது வேலை.

கொல்லப்பட்டவர்களின் குடும்பம் நாதியற்று நிற்கின்றது அந்நிலையில் உணரப்பட்ட வலியும் மரணித்து மண்ணாகி போயின காயங்கள் பட்டு அக்காயத்திற்கு மருந்துகளை இட்டு வரும் தருவாயில் மற்றொரு குண்டு வெடிப்பு !!!
உள்துறை அமைச்சகமும் தேசிய பாதுகாப்பு கமிட்டியும் அவசரம் அவசரமாக ஒரு புகைப் படத்தை வெளியிட்டு இவனாக கூட இருக்கலாம் என்று இறந்து போனவனின் புகைப் படத்தை காட்டி இந்திய மக்கள்களை முட்டாளாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்,மும்பையில் நடந்த குண்டு வெடிப்பே இதுவரையிலும் கண்டு பிடிக்காமல் இருக்கும் நிலையில் இன்னொரு துர திருஷ்ட்டம் வந்திருப்பதை எந்த ஒரு ஆன்மாவும் மன்னிக்காது.

பிரதமர் தொடங்கி அனைத்து தலைவர்களின் கண்டனமும் கடுதாசியும் பத்திரிக்கையில் வந்தாச்சு ஆனால் இறந்து போனவரின் உயிர்தான் வரவில்லை இந்திய தேசிய கொடியை நெஞ்சில் சுமந்து கொண்டு ஒவ்வொரு இந்தியனும் உலா வரும் நிலையில் இரக்கமற்று கொன்னு குவிக்க எப்படி மனம் வந்தது என்றுதான் புறியவில்லை!
அரசியல் முடிவு எடுக்கப்படவேண்டிய நேரமிது இல்லையேல் மிஞ்சிய இந்தியாவும் சீரழிந்து போகும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இவைகளை யார் செய்கிறது?

பாக்கிஸ்த்தானை குற்றம் சுமத்தும் நாம் ஏன் அநாட்டுடன் உறவை வைத்திருக்க வேண்டும்?
சீனாவுடன் கூட்டு அமர்த்தி நம்மை குத்தி விடுவார்கள் என்ற பயமா?
இல்லை அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக மாறி நமக்கு தொல்லை தருவார்கள் என்ற பீதியா?
நாம் உறவை வைத்துக் கொண்டே இத்தனையயும் சந்தித்து வருகின்றோம் பிறகு எதற்கு அவர்களுடன் நமக்கு நட்பு?
தீவிராவாத இயக்கங்களும் அதனை வளர்க்கும் மனித மிருகங்களும் தண்டிக்கப் படகூடியவர்கள் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு முன்பே மக்கள் முன்பு கொல்லப்பட வேண்டும் காரணம்,வழக்குகளும் விசாரனைகளும் அவர்களை காப்பாற்றிவிடும் அதற்க்காகத்தான் வழக்கறிஞர் மஹான்கள் காத்திருக்கின்றனர் அவர்களின் வேலையோ அவர்களின் வாதத்திறமையால் நல்லதையும் கெட்டதாக நிரூபிக்கவேண்டும் கெட்டதையும் நல்லதாக நிரூபிக்கவேண்டும் இத மாயஜால வித்தையை கற்று வைத்திருக்கும் இவர்கள் குற்றவாளியை வெளியில் கொண்டு வருவதற்கு செத்த பிணத்தை கூட திண்ண தயங்க மாட்டார்கள்.

தீவிரவாதம் முற்றிலுமாய் அழிக்கப் படவேண்டும் அதற்கு வழி வகுத்து கொடுக்கும் ஆசாமிகளும் அரசியல் வாதிகளும் தண்டிக்கபட வேண்டும் இல்லையேல் நாட்டின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும்.
பாக்கிஸ்த்தான் முஸ்லிம் செய்யும் குற்றத்திற்கு இந்திய முஸ்லிம் எப்படி பொறுப்பு ஏற்ப்பான்?
இஸ்லாம் என்று தம்மை தம்பட்டம் அடித்து கொண்டு திமிர் பிடித்து அலையும் தீவிரவாதிகளையும் ஹிந்துத்துவா நாங்கள்தான் என்று பறைசாட்டி திறியும் போலி காவிகளையும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

குண்டு வெடிப்பில் இறந்த ஆன்மாக்களுக்கும் அவ்வான்மாவின் உறவுகளுக்கும் எனது அனுதாபங்கள்.
காணொளியில் நீங்கள் பார்த்தது பாக்கிஸ்த்தான் அப்பாவிகளை தாலிபான் தீவிரவாதிகள் கொல்லும் காட்சிதான் இப்போ தெறிகிறதா தீவிரவாதி என்றால் எப்படி இருப்பார்கள் என்று?
கொல்லுகிறவனும் முஸ்லிம்தான் கொல்லப் படுகிறவனும் முஸ்லிம்தான்.
தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பது இல்லை இதை புறியாமல் நடப்பவர்கள் ஒரு போதும் முஸ்லிமாக இருக்கமாட்டார்கள்.

வாழ்க இந்தியா.







Wednesday, August 31, 2011

திரண்ட தமிழகம்!


ஏழு கோடி...தலையுடையாள்
ஏழாதவற்கும் அள்ளி தருவாள்
நாளு நாளாய் கண்ணீர் துயரால்
தவிக்கின்றாள் தமிழ் தாயவள்.

மத்திய அரசின் ஆனவமும்
கத்திய தமிழனின் ஆவனமும்
நீதியரசின் முன்னிலையில்
முட்டித்தான் பார்த்தது.

நீதிக்கு தலை வணங்கி
அநீதிக்கு குரல் சினுங்கி
வீர கம்பீரத்துடன்
தீர்ப்பளித்தார் நீதிமான்கள்.

மத்திய அரசின் படைகளும்
காந்திய பேரில் மனிதர்களும்
சிறையை பிடித்து வைத்தாலும்
திரையை அகற்ற முடியாது.

கொக்கரிக்கும் சுப்ரமணி சாமியும்
அதற்கு துணை போகும் ஆசாமியும்
குளத்தில் மிதக்கும் ஆமையென்று
செய்தி தாள்கள் சொல்லுகிறது.

மனித காந்தி சோனியாவும்
மவுனம் காப்பது சரியல்ல
மன்னிக்கும் பக்குவம் காந்திக்கு உண்டு
என்னைக்கு மாறும் இந்நிலை கண்டு.

மாநில அரசின் தீர்மானம்
மத்திய அரசு மதிக்காதாம்
விடையும் அவர்கள் நடையும்
வியப்பளிக்கிறது எங்களுக்கு.

ஓர் இந்தியா ஒரு மக்கள் ஒரு நாடு
கொள்கைக்கு உகந்ததல்ல உம் கோட்பாடு
மறவோம் மன்னிப்போம் மனித நேயத்தோடு
இறையான்மை காப்போம் ஒரு பலத்தோடு.

வாழ்க இந்தியா.

Tuesday, August 30, 2011

கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!! JOKES


திறுத்தப்பட்ட அதே பதிவுதான் பதிவை படித்தவர் படிக்க வேண்டாம்.
: ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா.
--------------------------------------------------------
நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ
ஸ்வீட்டா இருக்கு...."SISTER
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,
இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."
டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
--------------------------------------------------------
நர்ஸ்: மூணாம் நம்பர் ரூம் பேஷண்ட், ரொம்ப நாள் இங்க இருப்பார்போல தெரியுது டாக்டர்!
டாக்டர்: எப்படி சொல்ற?
நர்ஸ்: சுவத்துல ஆணியடிச்சு அவரோட போட்டோவை மாட்டிட்டாரே..?
------------------------------------------------
மனைவி: ”நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”
கணவன்:அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்.
-----------------------------------------------
ஒருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா என் கூட ஒரு வாரத்துக்கு பேச மாட்டாள்.
மற்றொருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா கையில எது கிடைக்குதோ அத என் மேல வீசி அடிப்பா.
மூன்றாமவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா உடனே என்னோட சட்டைய துவைக்க ஆரம்பிச்சிடுவா.
மற்ற இருவரும்: ஆச்சரியமா இருக்கே ... ஏன் அப்படி?
மூன்றாமவர்: அந்த சட்டைய நான் போட்டுக்கிட்டு இருக்கும் போதே அத அடிச்சி,துவைச்சி,அலசி,பிழிஞ்சி கிளிப் மாட்டி தொங்க விட்டுடுவா.
-----------------------------------------------
மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.
கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
-----------------------------------------------
அன்றோரு நாள்.....
-
-ஒரு மாலை வேளை.....
-
-ரயில்வே ஸ்டேஷன் அது.......
_
_நான் டிரெயினின் உள்ளே, நீ வெளியே......
_
_நம் இருவரின் கண்களும் ஒரே நேரத்தில் சந்தித்தபோது.......
_
_உன் முகத்தில் தான் எத்தனை உற்சாகம்.......
_
_அப்போது தான்....
_
_அப்போது தான்....
_
_அந்த வார்த்தையை நீ சொன்னாய்......
_
_அய்யா...... தர்மம் போடுங்க சாமி......
----------------------------------------------
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
-----------------------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
----------------------------------------------
ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது
மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க
----------------------------------------------
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?
அவன் : 4.
ஆசிரியர் : ப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா? அவன் யாருக்கும் எதுவும் தரமாட்டன்
-----------------------------------------------
ஆ‌சி‌ரிய‌ர் : அவ‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பையனா இரு‌க்கலா‌ம். அது‌க்காக இ‌ப்படி அட‌ம்புடி‌க்க‌க் கூடாது....
தலைமை ஆ‌சி‌ரிய‌ர் : எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா‌ன் பைய‌ன்?
ஆ‌‌சி‌ரிய‌ர் : க‌ழி‌த்த‌ல் கண‌க்கு போடு‌ம் போது ப‌க்க‌த்‌தி‌ல் ‌இரு‌க்‌‌கிற ந‌ம்ப‌ர் ‌கி‌ட்டஇரு‌ந்து கட‌‌ன் வா‌ங்கணு‌ம்னு சொ‌ன்ன.. நா‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பைய‌ன். ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்னு எ‌தி‌ர்கே‌ள்‌வி கே‌க்குறா‌ன்
தலைமை ஆ‌சி‌ரிய‌ர் :?!?!
-----------------------------------------------
முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?
ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு
-----------------------------------------------
மருத்துவர்: ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
நோயாளி :ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
------------------------------------------------
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??
கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...
------------------------------------------------
மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:(
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..
மனைவி: ????
--------------------------------------------------
நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டொக்டர்
டொக்டர் - அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதயுங்க
-------------------------------------------------------------
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க? 
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
--------------------------------------------------
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
--------------------------------------------------
வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?
கிராமத்தான் : கயிற்றாலே தான்
--------------------------------------------------
"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
-------------------------------------------------
நோயாளி : டாக்டர் !என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க.என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
-------------------------------------------------
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
------------------------------------------------
"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து குடுங்களேன்."
"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."
-----------------------------------------------
 என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
------------------------------------------------
எதுக்கு மேலே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?"
"மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்னு சொன்னாங்க.. அதான்!"
-------------------------------------------------
கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ?????????
-------------------------------------------------
''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''
''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''
''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''
''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''
-------------------------------------------------
" இந்த ஊர்ல திருடர்களே கிடையாதா? "
" இருந்தாங்க! இந்த ஊர் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் ஆகி, வேறே ஏரியாவுக்குப் போயிட்டதாலே,அவங்களும் அந்த ஏரியாவுக்கே போயிட்டாங்க "
---------------------------------------------------
 அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்? "
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம் "
----------------------------------------------------


எல்லோருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.


இந்த நாள் மட்டுமின்றி எல்லா நாள்களிலும் எல்லோரும் குறிப்பாக ஏழைகள் அனைவரும் சந்தோசமாக இருக்க இறைவனிடம் பிறார்த்திக்கிறேன்.


அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.






நீ வேஷ்ட்டி கட்டிய ஆண்மகன் என்றால்...


3 பேரை தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்புசட்டப்படி அதிகாரம் இல்லை : சுப்பிரமணிய சாமி.


அடே அறிவுகெட்ட எருமை இந்த மூனு பேரும் நேரடியாக ராஜுவை கொல்லவில்லைடா அறியாமையின் கோளாறினால் பேட்டரி வாங்கி கொடுத்தவர்கள்தான் அது இந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்று கனவில் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள்.

நீ கூடத்தான் சோரு வாங்கி கொடுத்தே ஆடைகள் வாங்கி கொடுத்தே உனக்கும் இந்த கொலையில் பங்கு இருக்கு நீ மட்டும் எப்படிடா ஹாயாக சுற்றுகிறாய்?

நீ வாயை திறந்தாலே வெறும் பொய்யுதான் வரும் நீ சொல்லுகிறாய் மரண தண்டனை விதிக்கப் பட்ட நளினியை ஆயுள் தண்டனையாக குறைத்தது இந்திய சட்ட அமைப்பிற்கு கொடுக்கப்பட்ட சவால் என்று.
ஒரு மனு தாக்கல் செய்தால் நளினியையும் இவர்களோடு சேர்த்து தூக்கிலிட முடியும் என்று கொக்கரிக்கிறாய்.

நீ வேஷ்ட்டி கட்டிய ஆண்மகன் என்றால் முதலில் சென்னை தலமை நீதிமன்ற வாசலில் கால் வைத்து பார்.

நீ மத்திய அரசை மிரட்டியதாலதான் பத்து வருடமாக இழுவையில் இருந்த இந்த வழக்கு முடிவிற்கு வந்தது என்று சொல்லுகிறாயே யாரடா சொன்னது முடிவிற்கு வந்து விட்டது என்று ?

இல்லை இன்னும் முடிவிற்கு வரவில்லை இனிமேல்தான் ஆரம்பம் ஆக போகிறது ஆம் சிவராசன் உன் வீட்டில் தங்கினதற்க்கான ஆதாரம் இப்பொழுது சி பி ஐ வசம் சிக்கியுள்ளதாக ஏஜெண்ட் நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டு கொண்டு இருக்கின்றன மவனே அது மட்டும் உறுதியானால் உனக்கு இரண்டு தடவை தூக்கு...தான்டி.

தமிழக மக்கள்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்ட மன்றத்தில் தூக்கிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததற்கு தமிழக மக்கள்களின் சார்பாகவும் பதிவர் நண்பர்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தற்காலிகமாக எட்டு வாரங்களுக்கு தூக்கினை நிறுத்தி வைத்த சென்னை உயர் மன்ற நீதியரசர்கள் அவர்களுக்கும்
உயர் நீதிமன்ற கதவினை தட்டியதுமில்லாமல் அவசர கால அடிப்படையில் இவ்வழக்கினை விசாரிக்கனும் என்று டெல்லியில் இருந்து பறந்து வந்த வசந்தகால ராஜன் அய்யா ராம்ஜெத் மலானி அவர்களுக்கும்.
 இப்பிரச்சினையை பொதுமக்கள்கள் முன்னிலைற்கு முதலில் கொண்டு சென்ற நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கும்
 பத்திரிகை தர்மகத்தார் அனைவருக்கும் தோளோடு தோல் கொடுத்து தொனிவில்லாமல் அற்புதம்மாளுடன் துணையிருந்த வைகோ அவர்களுக்கும்.
 தடா வக்கீல் புகழேந்தி அவர்களுக்கும் எதிர் கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கும் .
சட்ட மன்ற உருப்பினர்கள் அனைவருக்கும் அவசர தந்தியினை ஜனாதிபதிக்கு அனுப்பி தந்த தாயுள்ள்ம் கொண்ட வெளி நாட்டு வாழ் தமிழர்களுக்கும்.
 புரட்சி புயல் சீமான் அவர்களுக்கும் தொல் திருமாவளவன் அவர்களுக்கும் 
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்களுக்கும் மற்றும் டாக்டர் கிருஷ்ண சுவாமி அவர்களுக்கும் 
மக்கள் ஆதரவை மதித்து பொருமை காத்த தமிழக காவல் துறையினருக்கும் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும்

நன்றி...நன்றி...நன்றி.

செங்கொடியே நீ செய்த காரியத்தால் நாம் உம்மை மறந்தோம் எதர்க்காக தெரியுமா?

உன்னை தியாகி என்று நாம் புகழாராம் சூடியால் இன்னும் எத்தனை கொடிகள் வீழும் இம்மண்ணில்?

அதற்காகத்தான்.


Monday, August 29, 2011

தூக்கு தண்டனை ரத்தாகும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருபத்தி ஓராண்டு காலம் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவித்த முருகன் சாந்தன் மற்றும் பேரறிவாளனின் தூக்கு நிறுத்தப் போவது உறுதி.


இவ்வழக்கில் புதிய திருப்பமாக அனைத்து கட்சிகளும் போர் கொடி தூக்கி இருப்பதால் மக்கள் சக்தி ஓரனியில் திகல்கிறது அதைத்தான் நாமும் எதிர்பார்த்தோம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் கோரிக்கையை மீறி மத்திய அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆனையிட்டாலும் அது செல்லுபடியாகாது இதை தடுத்து நிறுத்தும் உரிமம் சென்னை ஐ கோர்ட்டிற்கு இருக்கு இருந்த போதிலும் அனைத்து தரப்பு அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை இது மெது மெதுவாக இணைந்து கொண்டு இருக்கின்றது.

கண்டிப்பாக இது கிடைக்கும்.

வாயை மூடி கொண்டிருந்த விஜய்காந்தும் குரல் எழுப்பியது மட்டுமில்லாமல் போராடவும் வருவார் என தெறிகிறது இப்படி ஒவ்வொரு கட்சியும் முடிவெடுத்தால் மத்திய அரசின் ஆனையையும் சுப்ரீம் கோர்ட்டின் ஆனையையும் தூக்கி வீசி விடலாம்.

மக்களின் தீர்ப்பே இறுதி என்று அரசியல் வாதிகள் புறிந்து கொள்ளனும் மக்களே இவர்களின் கொட்டத்தை அடக்க இவர்களின் திட்டத்தை முறியடிக்க வெகுன்டெழுந்து அநீதியை எதிர்க்க வாருங்கள்.


 இதுதான் இந்த இருபத்தியோராம் ஆண்டில் தாய் மண்ணிற்க்காக நாம் செய்யகூடிய கடமையாகும்.

Tuesday, August 23, 2011

வெற்று உடம்புகள்

வீடற்று நாதியற்று

வீட்டாரின் உறவற்று
காடற்று கடலற்று
கண்டிராத புகழற்று
நடைப்பாதை புழுதியிலே
விடையில்லா பொழுதினிலே
உடையும் என் மனதினை
ஒட்டிவிட ஆளில்லை.

மரணம் நெருங்குமென்று
கரணம் நானிட்டாலும்
சரணம் துதிப்பாடியே
ரணம் ஆனது வாழ்க்கை.
ஆண்பாதி பெண்பாதி
கண்ணீர் வழியும் சரிபாதி
வெண்மை இதயத்தில் 
இருண்ட வாழ்க்கைதான் மீதி.

வெற்று உடம்புகளும்
பற்றற்று போகின
பற்று உறவினமும்
புண்பட்டு மடிந்தன.
கூவ நீரில் நானும்
குழாய் நீரில் நீயும்
போராடி வாழ்ந்தாலும்
மரணம் நிச்சயம்.

உயிரில்லா உறவுகளும்
நடைபிணமாய் அழைகின்றது
பெயரில்லா மனிதர்களும்
படைகொண்டு வாழ்கின்றது.
இதுதான் வாழ்க்கையா
இல்லையேல் இயற்கையா
வசீகர வாழ்க்கையில்
ருசிகரமாய் தெரிவது மரணமே.

என் ஏக்கங்களை தொலைத்து விட்டு
என் ஆக்கங்களை மண்ணில் புதைத்து விட்டு
வீன் தர்க்கத்தில் வாதிட்டால்
விளங்குமா வாழ்க்கை?
இறுகிய இதயத்தில்
இறையருள் பெற்றிட வேண்டும்
குறுகிய காலத்தில்
குறைகள் போக்கிட வேண்டும்

அங்கும் இங்கும் கடன்பெற்று
அன்பு எனும் பயிரை விதைத்திட்டு
அல்லல் படும் மாந்தர்களை
அனைத்திடுவோம் இருகரம் தொட்டு.
இலை உதிர்ந்து கிளை ஒடிந்து
கருகி போன மரம்கூட தளிர்கின்றது
நிலை குழைந்து நில்லாமல்
கலை மகள் காவியமாய் 
நிற்பாய் என நான் நம்புகிறேன்.

வலிகள் நிறைந்த உன் வாழ்க்கையில்
நல் வழிகள் திறக்கட்டும்.
ரணங்கள் ஆன உன் மேனிகள்
நருமணம் கொண்டு சிறக்கட்டும்.
வாழ்க ஏழைகள்.











Saturday, August 13, 2011

(சு)தந்திர தின வாழ்த்துக்கள்!

ஏழை பங்காளானின் ஆட்சியும் 
கோழை காங்கிரசின் காட்சியும் 
காண்பதற்கு பசுமையாக தெரிகிறது கண்களுக்கு.
வெள்ளையரிடம் சுதந்திரம் பெற்று இந்த கொள்ளையரிடம் நாட்டை கொடுத்தால்...
முல்லை பெரியார் அனை தொடங்கி
எல்லை தேசம் வரை ஊழல்
வெள்ளையரின் ஆட்சியும்
கொடுமையான காட்சியும் மாறி
64 ஆண்டு ஆகியும் நம் நாட்டின் அவலம் மாறவில்லை.
இறந்த பிறகே சிதைக்கு தீ மூட்டும் இந்நாட்டில்
பிறந்த உடனேயே பெண் சிசுவுக்கு தீ மூட்டுகிறார்கள் 
சிந்திய ரத்தமும்
தியாகிகளின் சத்தமும் 
தூக்கு கொட்டடியிலே
கழுத்து நெரிபட்டு
கைகள் முறிபட்டு
தசைகள் வடு பட்டு
கண்களும் கட்டப்பட்டு
கொல்லப் பட்ட காட்சியோ...
சொல்லி விட முடியாது.
கூடி அழ அவர் சவங்கள் கிடைக்காமலும்
தேடி எழ வீரர்கள் இல்லாமலும்
அழிக்கப்பட்டனர் தியாகிகள்
அத்தியாகளின் நினைவாகத்தான் நாம் சுதந்திரம் கொண்டாடனுமே தவிர
போலியாக இல்லை.
இந்த அவஸ்தைகளை போக்கி சுதந்திரம் கொண்டாடுங்கள்.


அவஸ்தை எண் 1: இந்திய திரு நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை 36 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாக புள்ளி விவர கணக்கு தெரிவிக்கின்றதை உடனே சரி செய்து தடுத்திடும் போது...
அவஸ்தை எண் :2 ஏழை இந்தியா பணக்கார இந்தியா என இரு வேஷம் போடுகிறது நாடு,பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்பதை மாற்றிட முயற்சிகள் எடுக்கும் போது...
அவஸ்தை எண் : 3 பட்டினி சாவும்,பாலியல் கொடுமையும் தீண்டாமை வன் கொடுமையும்,தீண்ட தகாத மனித ஜாதி என, மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரித்தாலும்,நய வஞ்சக மனிதர்களை கண்டும் காணாமல் இருக்கும் இருட்டு சட்டமும்,அதனின் பாது காவலர்களும் திருந்திடும் போது...
அவஸ்தை எண் :4 வதைக்கப்படும் பெண்ணுக்காக சிதைக்கப்படும் அவள் கற்பிற்க்காக எத்தனையோ வழக்குகள் நீதி மன்றத்தில் இருந்தும் அவளின் வாழ்க்கை மண்ணில் புதைக்கபடும் தருவாயில் தீர்ப்பு அளிப்பதை நினைத்து பார்க்கும் போது...
அவஸ்தை எண் :5 இன்னும் அன்னம் இல்லை என தினம் என்னும் மனிதர்கள் பசியின்றி பசித்துண்ண வசதிகள் செய்யப் படாத நிலையிலும் அரசியல்வாதிகள் வெட்டி பேச்சை நிறுத்தி கொள்ளும் போது...
அவஸ்தை எண் :6 சரித்திர ஏட்டில் சித்திரம் வரைக்க 
சாமானிய இளைஞர்கள் முற்பட்ட போதும் வேலை இல்லா தின்டாட்டம் ஒழிக்கப் படும் போது...
அவஸ்தை எண் :7 குடியை தடுத்து குடி மகன்களை தத்தெடுத்து குற்றம் குறைவதற்கு முயற்சி எடுக்காத போதும்...
அவஸ்தை எண் :8 காவல் நிலையங்கள் கட்ட பஞ்சாயத்து நிலங்களாக மாறாமல் இருந்திடும் போதும்...
அவஸ்தை எண் :9 நேர்மையும் உண்மையும்தான் இந்தியாவின் கண்கள் அதற்கு கலங்கம் கற்பிக்கும் அரசியல் வாதிகளை தண்டிக்க மறுத்திடும் போதும்...
அவஸ்தை எண் :10 கடமை கண்ணியம் கட்டுப்பாடு மறுக்கப்பட்ட போதும்...

என்ன சுதந்திரம்?
(சு)தந்திர தின வாழ்த்துக்கள்!

என்ன முட்டாள்தனமான பதிவு இதுலாம் நடக்கிற காரியமா?
ஹா..ஹா..ஹா.
எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கஞ்சி,இருங்கள் குடிச்சுட்டு வந்து சொல்றேன்.
ஐயா இன்னைக்கு சுதந்திர தினம் தண்ணீர் குடிச்சது போதும்
போயி எண்ணை தேச்சு குழிச்சுட்டு வாங்கள்

எப்படியாவது அந்த ஃபைலில் கையெழுத்து போட்டிருங்கள் என்னைக்குமே நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஆமா...பக்கத்தில் பொம்மை மாதிரி நிற்கிறாரே யாரு?


கண்டிப்பாக நீங்கள் இலங்கை வரனும் 

உங்களுக்காக மனுசகிட்னி வருவல்

மனுசதலை பொறியல்
மனுசகுடல் சூப்பு எல்லாம் தயாரா இருக்கு.
இந்த கொடுமைகளை பார்ப்பதற்கு 
     நல்ல வேளை நான் உயிரோடு இல்லை