நான் விரும்பும் மூன்று விஷயங்கள்.
(1) சீர்வரிசை கொடுத்துன்னை வழியனுப்பும் பெற்றோர்க்கு
சீரழிவை கொடுக்கக்க கூடாது அப்பெண்.
(2)பட்டினியின் கோரப் பிடியில் மயங்கிருக்கும் மனித கூட்டம் மூன்று வேளையும் உணவருந்த வேண்டும்.
(3)ஏழைகள் பணக்காரர்களாக மாறனும்.
நான் விரும்பாத மூன்று விஷயங்கள்.
(1)பெற்ற தாயையும் பொறந்த நாட்டையும் ஒதுக்கும் மனிதர்கள் பிடிக்காது.
(2)பணத்தாசையில்"மார்"தட்டும் மானிடமும் புறம் பேசி குழி பறிக்கும் நட்பகத்தையும் பிடிக்காது.
(3)நாம் வாழும் வாழ்க்கை அரியது வறுமையும் கொடியது நாம் வாழும் வரை எழியோரை வாழ வைக்க முயற்சிக்காதவரையும் பிடிக்காது.
பயப்படும் மூன்று விஷயங்கள்.
(1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா என்ற பயம் இருக்கு.
(2)உதட்டில் ஆசை மொழிகளும் உள்ளத்தில் விஷ உறவுகளும் வைத்து பழகும் மனித கூட்டத்துடன் பழக பயந்து கிடக்கின்றது.
(3)வாழ்க்கையின் பாதையினில் வேதனைகளும் சோதனைகளும் தோன்றும் அதற்காக வாழ்க்கையினை அழித்துக் கொள்ளும் காதலர்களின் பெற்றோரை கானும் போது ஒரு பயம்.
புரியாத மூன்று விஷயங்கள்.
(1)விடியாத இரவுகள் புது வரங்களோடு விடிந்தும் முன்னேராத இந்தியாவை கானும் போது.
(2)போலியும்...கலப்படமும் தமிழகத்தின் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தை போல இருக்கின்றது,எந்த அரசியல்வாதிகளாலும் அதை மாற்ற முடியாததை நினைத்து பார்க்கும் போது.
(3)பரந்து வாழும் நம் மக்கள்களின் கருத்தை விட பன்னாட்டு நிருவனங்களுக்கு மன்மோகன் சிங் நமது வணிகத்தை ஏன்?தாரை வார்க்கிறார் என்று என்னும் போது.
மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
(1)கம்ப்யூட்டர்.
(2)டிஷ்னரி.
(3)குறிப்பேடு.
சிரிக்கவைக்கும் மூன்று விஷயங்கள்.
(1)சர்தார் ஜோக்கை படித்து விட்டு நிஜ சர்தாரை ஃபீல்டில் பார்க்கும் போது என்னை அறியாமல் சிரித்து விடுவேன்.
(2)நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பேசும் பேச்சுகளையும் அரசியலுக்கு வந்த பின்பு பேசும் பேச்சுக்களையும் யூ டூபில் பார்த்து சிரிப்பேன்.
(3)டாம் அன்ட் ஜெர்ரியையும் பார்த்து சிரிப்பேன்.
தற்போது செய்துகொண்டிருக்கும் காரியம்.
(1)எப்படி இந்த தொடர் பதிவை முடிப்பது என்று யோசித்துக் கொண்டு "டைப்" பண்ணிக் கொண்டு இருக்கின்றேன்.
(2)கடிகாரம் ஏன் சீக்கிரமாக சுற்றி கொண்டு இருக்கின்றது என்று கறுவிக் கொண்டு இருக்கின்றேன்.
(3) இடை இடையே கொட்டாவி உட்டுக் கொண்டும் இருக்கேன்.
வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும்காரியங்கள்.
(1) தீமைககளிருந்து விலகி நண்மைகளை ஏவி ஹஜ் செய்யனும்(இன்ஷா அல்லாஹ்)
(2)வறுமையிலிருந்த என்னை வைர பொக்கிஷமாக மாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கனும்.
(3)என்னிடம் பணம் இருக்கும் போது எல்லோருக்கும் உதவிடனும்.
செய்து முடிக்கக்கூடிய மூன்று விஷயங்கள்.
(1) முடியாததை முடியும் என்று சவாலாக எடுத்து செய்து முடிப்பது.(தொழில் ரீதியாக)
(2)அன்றைய வேலைகளை அன்றே முடிப்பது.
(3)ஊரில் இருக்கும் போது சமையல் அட்டாகாசங்கள் ப்ளாக்கை திறந்து பிரியாணி செய்து,வீட்டில் பாராட்டைப் பெருவது.
கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்.
(1)குடிகாரனின் பேச்சு.
(2)அவசியம் இல்லாத கடன்.
(3)இரவலாக வாகனம்.
கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்.
(1) கவிதைக்கு எப்படி மெருகூட்டுவது என்று கற்றுக் கொள்ள ஆசை.
(2)ப்ளாக்கின் தொழில் நுட்பங்களை எளிதாக புறிந்து கொள்ளவும் ஆசை.
(3)தைய்யல் தைக்கவும் ஆசை.
பிடித்தமூன்று உணவு வகைகள்.
(1) கஞ்சி (பழைய சோறு)
(2)பிரியாணி.
(3)இட்லி
அடிக்கடி முணு முணுக்கும் மூன்று பாடல்கள்.
(1)(முதல்வன் திரைப்படத்திலிருந்து)
குறுக்கு சிறுத்தவளே... என்னை குங்குமத்தில் கரைச்சவளே...நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்... என்னக் கொஞ்சம் பூசு தாயே...
உன் கொலுசுக்கு மனியாக... என்னக் கொஞ்சம் மாத்து தாயே.
(2)இதய கோவில் படத்திலிருந்து)
நான் பாடும் மவுன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூஙவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்.
(3)காணொளியில் இனைத்துள்ளேன்
பிடித்த மூன்று படங்கள்.
(1) அந்நியன்.
(2) அந்நியன்.
(3) அந்நியன்.
இது இல்லாம வாழமுடியாது மூன்று விஷயம்.
(1) உயிர் இல்லாமல் வாழ முடியாது.
(2) இறை நம்பிக்கை.
(3) அமைதி.
இவ்வளவுதான் என்னால் எழுத முடியும்,இதுக்கு மேலே என்னத்தை நாம எழுதி அதை நீங்கள் படித்து கண்டனங்களை அனுப்புவதற்குள் நான் எஸ்கேப்.
என்னை இப்பதிவிற்கு தொடராக அழைத்ததற்கு லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லோரும் எழுதி விட்டிர்கள் என்று நினைக்கிறேன்,சகோ ஆஷிக் அவர்களும் சகொ ஹைதர் அலி அவர்களும் எழுதுவார்கள் என்று நம்புகிறேன் எதற்கும் சொல்லி பாற்ப்போம்.