Thursday, March 31, 2011

சிரியுங்கள்....சில நிமிஷம்.




நண்பர்களே...வரும் வெள்ளிக்கிழமை வரை விடுப்பு அதுவரை யாருடைய வலைப் பூவிர்க்கும் வர இயலாமைக்கும் பின்னூட்டத்திர்க்கும் பதில் தர இயாலாமைக்கும் மனம் பொருந்திக் கொள்ளவும்.


சந்திப்போம் 06/04/2011.அன்று.


மெட்ரஸ்-ல தேட்ர வேலைக்கு எதுக்கு டெல்லிலே வந்து அப்ளிக்கேசன் ஃபில்லப் பன்றே?

கேப்பிட்டல்ளே எழுதுனு போட்டிருக்கு அதான் டெல்லிக்கு வந்து எழுதுறேன்.

ஒரு மாமி இட்லியை தலைல வச்சிக்கிட்டாக ஏன்?

ஏன்னா இட்லி பூ போல இருந்துச்சு அதுனாலேதான்.



ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் என்ன டூத்பேஸ்ட் யூஸ் பன்னுவாங்க?

சிக்னல்.



ஏண்டா.. உங்க அப்பா எந்நேரமும் உன்னைத் திட்டிக்கிட்டே இருக்காரு.

" "ஹ..ஹ்ஹ.ஹா.... சிங்கத்தைக் கொஞ்ச முடியாதுல்ல.. அதான்!!



"பரிமளம்! கத்திரிக்காய் வாங்கப் போன என் கணவர், லாரி மோதி இறந்துவிட்டார்..."

"ஐயோ, பிறகு..?"

"பிறகு என்ன? கையிலிருந்த முருங்கைக்காயை வைத்து சாம்பார் வைச்சேன்.."





சர்தார்ஜி டர்பன் இல்லாமல் சென்று கடைக்காரரிடம் கேட்டார், "ஏங்க பஞ்சாப் கோதுமை குடுங்க"

கடைக்காரர்: நீங்க பஞ்சாப் சர்தார்ஜியா?

சர்தார்: ஆமாம். ஏன்? ஆந்திரா அரிசி கேட்டா நீங்க ஆந்திரான்னு கேப்பீங்களா?

க.காரர்: இல்லையே.

சர்தார்: பின்ன என்னை மட்டும் ஏன் பஞ்சாப் சர்தார்ஜியான்னு கேட்ட?

கடைக்காரர்: ஏன்னா, இது துணிக்கடை..!



ப‌ி‌ச்சை‌க்கார‌ன்..

கைகாலெல்லாம் நல்லாத்தான இருக்கு! ஏன் இப்படி வீடு வீடா அலஞ்சு பிச்சை எடுக்கற?

ரொம்ப நன்றி சாமி! எனக்கு புத்தி புகட்டினீங்க! இனிமே அலையாம ஒரே இடத்துல உட்கார்ந்து பிச்சை எடுக்கறேன் சாமி.






அவன்: பொண்ணு கிளி மாதிரி இருப்பான்னு சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிட்டது தப்பாப் போச்சு.

இவன்: ஏன்?

அவன்: சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டிருக்கா!




அவர்: எப்ப பார்த்தாலும் மரத்துமேல ஏறி உட்காந்துக்குறாரே, அவர் யாரு?

இவர்: அவர்தாங்க தொகுதியோட 'கிளை'ச் செயலாளர்.


நீதிபதி: (தூக்கு தண்டனைக் கைதியிடம்) சாகறதுக்கு முன்னாடி உனக்குக் கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லுப்பா?

கைதி: மகாத்மா காந்தியை ஒரே ஒரு முறை நேர்ல பாத்துட்டு நான் சாகணும் எசமான்.




வாடிக்கையாளர்: (தொலைபேசியில்) ஹலோ, பேப்பர் தோசை இருக்குங்களா?"

ஓட்டல்காரர்: இருக்குதே.

வாடிக்கையாளர்: அப்ப 408-991-4950-க்கு அதை ஃபேக்ஸ் பண்ணிடுங்க..."


"டாக்டர், பையன் லட்டை முழுங்கிட்டான். ஆபரேஷன் பண்ணியாவது வெளியில எடுத்திடுங்க."

"லட்டுக்கு ஏன் இந்தப் பயம் பயப்படறீங்க?"

"ஐயோ அது வேட்பாளர் தந்த லட்டு. உள்ளே வைர மோதிரம் வெச்சிருக்காறாம்."




என்னங்க "இன்றைய கூட்டு"ன்னு தலைப்பு எழுதி இருக்கீங்க. கீழே என்ன கூட்டுன்னு எழுதலே. இது என்ன ஓட்டல்?

இது ஓட்டல் இல்ல. கட்சி அலுவலகம். இன்னிக்கு எந்த கட்சியோட கூட்டணில இருக்கோம்னு எங்களுக்குத் தெரிஞ்ச உடனே எழுதி வைக்கறோம்.


ஏன் சிங்கு நீ பார்த்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டே..?

நான் எங்கே விட்டேன்.. அந்த ஆபீஸ் வேறே இடத்துக்கு மாத்திட்டாங்க.. இன்னி வரைக்கும் அது எங்கே இருக்குன்னு எங்கிட்டே சொல்லாம வச்சிருக்காங்க..!


ஒரு சர்தாரின் மரண ஊர்வலம்.. ஆனால் ஊர்வலத்தில் சென்றவர்கள் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றனர்.. வினோதமான இக்காட்சியைக் கண்ட ஒருவர் என்னவென்று விசாரிக்க..

" அடப் போய்யா..! இன்னிக்கு இந்தாளு செத்தாலும் எங்க மேல இருந்த களங்கத்தை துடைச்சு எறிஞ்சுட்டு செத்துருக்கார்..

"அப்படியா..? எப்படி செத்தார்..?"

" மூளைக் காய்ச்சல்லே...!"




சர்தார்ஜீ: ஏன் இவங்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க ?

மற்றவர் : இது ஓட்டப் பந்தயம். முதலில் ஓடுபவருக்கு பரிசு உண்டு

சர்தார்ஜீ: முதலாவது ஓடுபவருக்குத்தான் பரிசு என்றால் எதுக்கு மற்றவர்கள் பின்னால் கலைத்துக்கொண்டு ஓடனும் ?..!!






சர்தார்ஜீ தனது வீட்டு தோட்டக்காரனுக்கு : பூ மரங்களுக்கு தண்ணியூத்துப்பா!

தோட்டக்காரன் : ஏற்கனவே வெளியே மழை பெய்யுதே?

சர்தார்ஜீ : அதனால் என்ன? குடைய பிடிச்சுக்கொண்டு தண்ணி ஊத்துறது…


ஜோக்குகள் எல்லாம் நண்பர்கள் அனுப்பியது யாருடைய தலத்திலும் இருந்து நண்பர்கள் சுரண்டி இருந்தால் பின்னூட்டத்தில் உங்கள் முகவரியை தெரியப் படுத்துங்கள் விடுப்பு முடிந்து வந்து சரி செய்து கொள்கிறேன்.

ஜோக்குகள் எல்லாம் சர்தார்ஜீயைப் பற்றி வருவதால் யாரும் தவராக நினைக்கவேண்டாம் சிரிக்க மட்டுமே.


 வட நாட்டில் மதராஸி ஜோக்குதான் நம்பர் ஒன்னாக திகழ்கிறது.

9 comments:

  1. முக்கிய செய்தி;இலங்கை அணியில் முரளி நீடிப்பார்!(01.04.11)

    ReplyDelete
  2. அனைத்தும் கலக்கல்கள்!

    //மெட்ரஸ்-ல தேட்ர வேலைக்கு எதுக்கு டெல்லிலே வந்து அப்ளிக்கேசன் ஃபில்லப் பன்றே?

    கேப்பிட்டல்ளே எழுதுனு போட்டிருக்கு அதான் டெல்லிக்கு வந்து எழுதுறேன்.//

    மெட்ராஸ்கூட ஒரு கேப்பிட்டல்தான் என்பது
    அந்த சர்தார்ஜிக்குத் தெரியவில்லை; பாவம்!

    ReplyDelete
  3. ஆரம்பத்திலுள்ள முன்னுரை படித்து அப்படியே
    திரும்பிடலாம் என்று நினைத்துவிட்டேன்.
    அந்த முன்னுரையை - கடைசியில் போட்டிருக்கலாம்.
    (கடைசியாகப் போட்டால் அது முன்னுரையா? #டவுட்டு)

    ReplyDelete
  4. எல்லாம் அருமை, சிங்கத்த கொஞ்சவா முடியும் ஹாஹா
    இரண்டு பகுதிய போட்டு இருக்கலாம்
    ஊருக்கு போறீங்களா மறகாம கடைக்கு போங்க,
    நல்ல படியாக போய் வாங்க.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    இது போன்ற பதிவுகள் என்ன நோக்கத்திற்காக எழுதுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
    இப்படி வெறுமையாக எந்த நோக்கமும் இல்லாமல் பல்லிளிக்க வைக்கின்ற பதிவு தேவைதானா?
    அதற்காக எப்போதும் சீரியஸாக உம்மென்றோ, அனல் கக்கும்படியாகவோ, அழுது கண்கள் வீங்கியபடியோதான் எழுத வேண்டும், நகைச்சுவையும் எள்ளலும் கூடாதென்று நான் கூறவில்லை. சாப்ளினை விடவா? ஒலியே இல்லாத ஒரு கலை சாப்ளினுடைய நோக்கத்தில் நேர்மை இருந்ததனால்தான் அந்த நகைச்சுவையில் கூர்மை இருந்தது. சிரிப்பு எங்கே முடிகிறது, துயரம் எங்கே தொடங்குகிறது என்று பிரித்தறிய முடியாத வெளியை, எளிய மக்களின் வாழ்க்கையை, ரசிகனுக்கு அறிமுகப்படுத்தியது.

    வாழ்க்கையை நேருக்கு நேர் சொந்தக் கண்ணால் பார்க்கும் ஆற்றலும் தைரியமும் இல்லாதவர்களிடமிருந்துதான் ‘லாஃபிங் கேஸ்’ நகைச்சுவை உற்பத்தியாகிறது. மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையின் கொடூரத்தை யாரால் உளப்பூர்வமாக வெறுக்க முடிகிறதோ, அவர்களிடமிருந்து உண்மையான நகைச்சுவையும் தோன்றுகிறது. தம்முடைய கீழ்மையை உணர்ந்து அச்சப்படுவது யாருக்கு கைவருகிறதோ அவர்களுக்கு மட்டுமே சுய எள்ளலுக்கான தைரியம் வருகிறது.

    இவை இல்லாதவர்கள் அனைவரும் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட கருத்துலகின் ரீசைக்கிள்டு சரக்குகளாக இணையத்தில் குவிந்து கிடக்கிறார்கள்.

    சகோதரரே உங்களிடம் உரிமையுடன் கேட்கிறேன் கோபித்து கொள்ளாதீர்கள்
    இணையத்தில் சாதிக்க நிறைய பணிகள் நமக்கு குவிந்து கிடக்கின்றன

    ReplyDelete
  7. //ஹைதர் அலி said...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    இது போன்ற பதிவுகள் என்ன நோக்கத்திற்காக எழுதுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?//


    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

    சும்மா பொழுது போக்கிர்க்காக எழுதுகிறேன் சகோ.

    முதலில் சும்மா பின்னூட்டம் மட்டும் போட்டுக் கொண்டு இருந்தேன் நண்பர்கள் அறிவுரையின் பேரில் இந்த வலைப் பூவை தொடங்கினேன் வாரம் ஒரு பதிவு என்று தீர்மனித்து தெரிந்ததை எழுதுகிறேன் தெரியாததை நண்பர்கள் மூலம் பெற்று இதில் இடுகிறேன் சகோ.

    மற்றபடி இதில் சாதிக்க எனக்கு ஒன்னும் இதில் இல்லை என்று தெரிகிறது,யாராவது மக்கள்களுக்கு ஆதரவா அல்லது அரசு செய்யும் கொடுமையினை தட்டி கேட்டால் குரல் கொடுப்பேன்.


    சொல்லப் போனால் எனது கடமைகள் போக மீதமுள்ள சமயத்தில் இதில் இருப்பேன் அவ்வளவுதான் சகோ.

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்

    ReplyDelete
  9. VA ALAIKKUM VASSALAM.

    PERIYA VAARTHTHAIKAL SOLLA VENDAAM SAGO.

    NEENKAL KETTADHU SARIDHAAN.

    ReplyDelete