உங்களின் ஆதரவு தேவை

Saturday, January 7, 2012

வாழ்க்கை ஒன்று தான் காட்சிகள் பல


நேற்று: 

என் அம்மா என்னிடம்........

"கண்ணா ஸ்கூல் போறதுக்கு பேக் எடுத்துக்கிட்டியா" 
"எடுத்துக்கிட்டேன் மா" 
"பேக்ல சிலேட் இருக்கா பாரு" 
"இருக்குமா" 
"டப்பால PENCIL இருக்கா பாரு" 
"இருக்குமா" 
"டிபன் பாக்ஸ் வச்சிருந்தேனே எடுத்துக்கிட்டியா?" 
"எடுத்துகிட்டேன்மா" 
"சமத்துல நீ ஸ்கூலுக்கு போயிட்டு வாப்பா. ஸ்கூல் பஸ் வந்திருக்கும் பாரு" 

இன்று: 
என் மனைவி என்னிடம்................
"ஏங்க வாட்ச் கட்டி கிட்டீங்களா?" 
"கட்டிகிட்டேன்மா"
"மொபைல் போன் எடுத்துக்கிட்டீங்களா?" 
"எடுத்துக்கிட்டேன்" 
"ஆபிஸ் ACCESS கார்டு எடுத்துக்கிட்டீங்களா?" 
"எடுத்துக்கிட்டேன்மா" 
"சமத்தா ஆபிஸ் போயிட்டு வாங்க. கம்பெனி பஸ் வந்திருக்கும் பாருங்க" 

நாளை: 
என் மகள் என்னிடம்...............

"அப்பா துணியெல்லாம் பேக் பண்ணி எடுத்துகிட்டீங்களா?" 
"எடுத்துக்கிட்டேம்மா" 
"அப்பா கையில கொஞ்சம் பணம் வச்சிருக்கீங்களா?" 
"அதுவும் எடுத்து வச்சிக்கிட்டேம்மா" 
"அப்பா எங்களோட போன் நம்பர் எல்லாம் குறிச்சிகிட்டீங்களா?" 
"குறிச்சிகிட்டேன்மா" 
"அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'முதியோர் இல்லத்துக்கு' கிளம்புங்கப்பா.அங்கேயாவது உங்க பசங்க பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருங்கப்பா. 
முதியோர் இல்லத்தோட பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா" 

வாழ்க்கை ஒன்று தான். காட்சிகள் பல
Salma Lifaya



எனக்கு பதிவிட நேரம் இல்லாமையால் இன்னும் ஒரு மாதத்திற்கு வலைப்பூ பக்கம் வர இயாலாது ஆகையால் எல்லோரும் நிம்மதியாக இருக்கவும் அப்பப்ப உங்கள் பகுதிக்கு வந்து செல்கிறேன் சல்மா அவர்கள் பதிவிடுவார்கள் என நம்புகிறேன்.

மெயில் அனுப்பி தந்த சகோ சல்மாவிற்கு நன்றி 



அய்யுப். 

25 கருத்துரைகள்:

Lakshmi said...

அ ந் நியன் சார் எங்க போனீங்க ரொம்ப நாளா காணோம். பிசியா? வாழ்க்கை ஒன்றுதான் காட்சிகளும் பலதான் நல்லாவே சொல்லி இருக்கீங்க.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.அய்யூப்,
///ஆகையால் எல்லோரும் நிம்மதியாக இருக்கவும்///---ஹலோ... என்ன இது..? இந்த பதிவை படித்தவுடன் இனி யார்தான் நிம்மதியா இருக்க முடியும்..? பயத்தை கிளப்பி விட்டுட்டீங்க சகோ.அய்யூப்.

நாம் நமது பெற்றோரை எப்படி கவனிக்கிறோம் என்று நமது பிள்ளைகள் கவனிக்கிறார்கள்...

ஒன்று மட்டும் உறுதி...

நாம் நமது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பினால்...

கோடி கோடியாக பிள்ளைகள் காலடியில் நாம் கொட்டினாலும்...

நமக்கு முதியோர் இல்லமா அல்லது முக்குடு சந்தா இரண்டில் எது என்றுதான் தெரியாது.

ஜெய்லானி said...

//"அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'முதியோர் இல்லத்துக்கு' கிளம்புங்கப்பா.அங்கேயாவது உங்க பசங்க பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருங்கப்பா.
முதியோர் இல்லத்தோட பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா" //

:-(

athira said...

ஆஆஆ அந்நியனா... பிடிங்க பிடிங்க பதிவைப் போட்டிட்டு ஓடுறார்.. நான் எங்கின எல்லாம் தேடித்திரிந்தேன் தெரியுமோ? சரி அது போகட்டும்... வந்ததுதான் வந்தீங்க... வர நேரமில்லை எனச் சொல்லலாமோ... முடியும்போது அப்பப்ப பதிவு போட்டிடுங்க....

athira said...

மாத்தி யோசிச்சுப் பார்க்கிறன்:)

நாளை:
என் மகள் என்னிடம்...............

"அப்பா துணியெல்லாம் பேக் பண்ணி எடுத்துகிட்டீங்களா?"
"எடுத்துக்கிட்டேம்மா"
"அப்பா கையில கொஞ்சம் பணம் வச்சிருக்கீங்களா?"
"அதுவும் எடுத்து வச்சிக்கிட்டேம்மா"
"அப்பா எங்களோட போன் நம்பர் எல்லாம் குறிச்சிகிட்டீங்களா?"
"குறிச்சிகிட்டேன்மா"
"அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'தாஜ்மஹால் பார்க்க' கிளம்புங்கப்பா.அங்கேயும் எங்களைப் பற்றியே நினைச்சுக் கவலைப்படாமல்.. நிம்மதியா சுத்திப்பார்த்திட்டு வாங்கப்பா உங்க
உல்லாசப் பயணிகள் பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா".. பத்திரமா போயிட்டு வாங்கப்பா...


இப்படி ஒரு மகள் கிடைத்தால்:).

Jaleela Kamal said...

///நாளை:
என் மகள் என்னிடம்...............

"அப்பா துணியெல்லாம் பேக் பண்ணி எடுத்துகிட்டீங்களா?"
"எடுத்துக்கிட்டேம்மா"
"அப்பா கையில கொஞ்சம் பணம் வச்சிருக்கீங்களா?"
"அதுவும் எடுத்து வச்சிக்கிட்டேம்மா"
"அப்பா எங்களோட போன் நம்பர் எல்லாம் குறிச்சிகிட்டீங்களா?"
"குறிச்சிகிட்டேன்மா"
"அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'தாஜ்மஹால் பார்க்க' கிளம்புங்கப்பா.அங்கேயும் எங்களைப் பற்றியே நினைச்சுக் கவலைப்படாமல்.. நிம்மதியா சுத்திப்பார்த்திட்டு வாங்கப்பா உங்க
உல்லாசப் பயணிகள் பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா".. பத்திரமா போயிட்டு வாங்கப்பா...


இப்படி ஒரு மகள் கிடைத்தால்:). //




ஹிஹி
மகன் என்றல்லவோ போடனும்

Jaleela Kamal said...

ம்ம்ம் வாழ்க்கை ஒன்று தான் காட்சிகள் தான் பல பல பல.....

மு.ஜபருல்லாஹ் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அய்யூப்!
ஒரு பெரிய குண்டை தூக்கி எறிஞ்சிட்டு மறுபடியும் எஸ்கேப்பா?
வாழ்க்கையே ஓர் எதிர்பார்ப்புதானே. நல்லதையே நினைப்போம்.
நம் குழந்தைகள் நம்மைபோல நல்லவர்களாகவே இருப்பார்கள் இன்ஷா அல்லாஹ்!

அந்நியன் 2 said...

Lakshmi said...

//அந்நியன் சார் எங்க போனீங்க ரொம்ப நாளா காணோம். பிசியா? வாழ்க்கை ஒன்றுதான் காட்சிகளும் பலதான் நல்லாவே சொல்லி இருக்கீங்க//.

வாங்கம்மா...நல்லா இருக்கின்றிர்களா?

வேலையின் காரணமாக வரமுடியலை இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அனைத்து தளங்களுக்கும் வருகின்றேன் நன்றிமா கருத்திற்கும் உங்கள் வருகைக்கும்.

அந்நியன் 2 said...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
/ஸலாம் சகோ.அய்யூப்,
///ஆகையால் எல்லோரும் நிம்மதியாக இருக்கவும்///---ஹலோ... என்ன இது..? இந்த பதிவை படித்தவுடன் இனி யார்தான் நிம்மதியா இருக்க முடியும்..? பயத்தை கிளப்பி விட்டுட்டீங்க சகோ.அய்யூப்.

நாம் நமது பெற்றோரை எப்படி கவனிக்கிறோம் என்று நமது பிள்ளைகள் கவனிக்கிறார்கள்...

ஒன்று மட்டும் உறுதி...

நாம் நமது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பினால்...//

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆஷிக்

எனக்கு போதிய நேரம் கிடைப்பது இல்லை முன்பு மாதிரி ஆகையால் டூட்டி டயமும் மாறிடுச்சு ஆகையால் வலைப் பூ தலங்களுக்கு வருவது குறைவுதான் அப்பப்ப உங்கள் தலத்திற்கும் வந்து போகிறேன் சகோ.

//நாம் நமது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பினால்...//
நமக்கும் அதே கதிதான் சகோ.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

அந்நியன் 2 said...

/ஜெய்லானி
//"அப்போ அம்மாவை கைத்தாங்கலா பிடிச்சிகிட்டு 'முதியோர் இல்லத்துக்கு' கிளம்புங்கப்பா.அங்கேயாவது உங்க பசங்க பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருங்கப்பா.
முதியோர் இல்லத்தோட பஸ் வந்திருக்கும் பாருங்கப்பா" //

:-(

வாங்க அன்னாத்தே புள்ளி வைத்து பேசும் வார்த்தை எனக்கு புரியாது சகோ இருந்த போதிலும் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

அந்நியன் 2 said...

athira said...


//ஆஆஆ அந்நியனா... பிடிங்க பிடிங்க பதிவைப் போட்டிட்டு ஓடுறார்.. நான் எங்கின எல்லாம் தேடித்திரிந்தேன் தெரியுமோ? சரி அது போகட்டும்... வந்ததுதான் வந்தீங்க... வர நேரமில்லை எனச் சொல்லலாமோ... முடியும்போது அப்பப்ப பதிவு போட்டிடுங்க....//

வலையுலகில் ரொம்ப தமாஷாகாவும் நல்ல நண்பராகவும் திகழும் உங்களை வாழ்த்துகிறேன் சகோ உங்கள் தலத்திற்கும் வரமுடியவில்லை மனம் பொறுக்கவும் சகோ.
சகோ அதிரா நீங்கள் எப்படி வேனும்னாலும் யோசிச்சு பாருங்கள் அது உங்கள் உரிமை மகள் மகனிடமிருந்து பெற்றோரை பாதுகாக்கிறாள்.

அந்நியன் 2 said...

ஜலீலா ...
//ம்ம்ம் வாழ்க்கை ஒன்று தான் காட்சிகள் தான் பல பல//

வாங்க சகோ வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ சமையல் எல்லாம் எப்படி போகிறது ?

அந்நியன் 2 said...

/மு.ஜபருல்லாஹ....
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அய்யூப்!
ஒரு பெரிய குண்டை தூக்கி எறிஞ்சிட்டு மறுபடியும் எஸ்கேப்பா?
வாழ்க்கையே ஓர் எதிர்பார்ப்புதானே. நல்லதையே நினைப்போம்.
நம் குழந்தைகள் நம்மைபோல நல்லவர்களாகவே இருப்பார்கள் இன்ஷா அல்லாஹ்!//

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ

இது என்னுடைய ஆக்கம் இல்லை சகோ இருந்த போதிலும் எனக்கு மெயில் அனுப்பியவரும் இதை படிக்கத்தான் செய்வார் புறிந்து கொள்வார்.

வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

ரெவெரி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

Comeback soon..

வாழ்த்துக்கள்...

Lakshmi said...

அ ந் நியன் 2 உங்களுக்கு என் பக்கம் ஒரு விருது கொடுத்திருக்கேன் வாங்க,.

அந்நியன் 2 said...

ரெவெரி said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

Comeback soon..

வாழ்த்துக்கள்...//

ரொம்ப நன்றி ரேவரி சார் தாமதத்திற்கு வருந்துகிறேன்.

அந்நியன் 2 said...

//Lakshmi said...
அ ந் நியன் 2 உங்களுக்கு என் பக்கம் ஒரு விருது கொடுத்திருக்கேன் வாங்க,.//

ரொம்ப நன்றிமா உடனே வந்து வாங்க முடியாமைக்கு வருந்துகிறேன் ரொம்ப நன்றி.

Minmini RS said...

அசத்தல். ஒவ்வொரு காட்சியிலும் வாழ்க்கையின் அர்த்தம் பொதிந்துள்ளது. அருமையான இடுகை. நன்று.

அந்நியன் 2 said...

//min mini RS said...
அசத்தல். ஒவ்வொரு காட்சியிலும் வாழ்க்கையின் அர்த்தம் பொதிந்துள்ளது. அருமையான இடுகை. நன்று//

வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

minnal said...
This comment has been removed by the author.
athira said...

எங்கே அந்நியனைக் காணவில்லையே நீண்ட காலம்:(

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

ரெவெரி said...

நலமா?

எழுதுவதை விட்டுவிட்டீரா நண்பரே...?

மஹா said...

மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

தோழமை இயக்கங்களான மக்கள் உரிமை மையமும், உட்டோபியன் சட்ட மையமும் தனித்துச் செயல்படுவதோடு நில்லாமல், மக்களுக்குத் தன்னலமற்ற வகையிலே சேவை செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் மற்றும் இதர அமைப்புகள் இவற்றோடு இணைந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
for readmore www.fcrights.in

Post a Comment