3 பேரை தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்புசட்டப்படி அதிகாரம் இல்லை : சுப்பிரமணிய சாமி.
அடே அறிவுகெட்ட எருமை இந்த மூனு பேரும் நேரடியாக ராஜுவை கொல்லவில்லைடா அறியாமையின் கோளாறினால் பேட்டரி வாங்கி கொடுத்தவர்கள்தான் அது இந்த அளவிற்கு கொண்டு செல்லும் என்று கனவில் கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார்கள்.
நீ கூடத்தான் சோரு வாங்கி கொடுத்தே ஆடைகள் வாங்கி கொடுத்தே உனக்கும் இந்த கொலையில் பங்கு இருக்கு நீ மட்டும் எப்படிடா ஹாயாக சுற்றுகிறாய்?
நீ வாயை திறந்தாலே வெறும் பொய்யுதான் வரும் நீ சொல்லுகிறாய் மரண தண்டனை விதிக்கப் பட்ட நளினியை ஆயுள் தண்டனையாக குறைத்தது இந்திய சட்ட அமைப்பிற்கு கொடுக்கப்பட்ட சவால் என்று.
ஒரு மனு தாக்கல் செய்தால் நளினியையும் இவர்களோடு சேர்த்து தூக்கிலிட முடியும் என்று கொக்கரிக்கிறாய்.
நீ வேஷ்ட்டி கட்டிய ஆண்மகன் என்றால் முதலில் சென்னை தலமை நீதிமன்ற வாசலில் கால் வைத்து பார்.
நீ மத்திய அரசை மிரட்டியதாலதான் பத்து வருடமாக இழுவையில் இருந்த இந்த வழக்கு முடிவிற்கு வந்தது என்று சொல்லுகிறாயே யாரடா சொன்னது முடிவிற்கு வந்து விட்டது என்று ?
இல்லை இன்னும் முடிவிற்கு வரவில்லை இனிமேல்தான் ஆரம்பம் ஆக போகிறது ஆம் சிவராசன் உன் வீட்டில் தங்கினதற்க்கான ஆதாரம் இப்பொழுது சி பி ஐ வசம் சிக்கியுள்ளதாக ஏஜெண்ட் நிறுவனங்கள் செய்திகள் வெளியிட்டு கொண்டு இருக்கின்றன மவனே அது மட்டும் உறுதியானால் உனக்கு இரண்டு தடவை தூக்கு...தான்டி.
தமிழக மக்கள்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்ட மன்றத்தில் தூக்கிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்ததற்கு தமிழக மக்கள்களின் சார்பாகவும் பதிவர் நண்பர்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தற்காலிகமாக எட்டு வாரங்களுக்கு தூக்கினை நிறுத்தி வைத்த சென்னை உயர் மன்ற நீதியரசர்கள் அவர்களுக்கும்
உயர் நீதிமன்ற கதவினை தட்டியதுமில்லாமல் அவசர கால அடிப்படையில் இவ்வழக்கினை விசாரிக்கனும் என்று டெல்லியில் இருந்து பறந்து வந்த வசந்தகால ராஜன் அய்யா ராம்ஜெத் மலானி அவர்களுக்கும்.
இப்பிரச்சினையை பொதுமக்கள்கள் முன்னிலைற்கு முதலில் கொண்டு சென்ற நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கும்
பத்திரிகை தர்மகத்தார் அனைவருக்கும் தோளோடு தோல் கொடுத்து தொனிவில்லாமல் அற்புதம்மாளுடன் துணையிருந்த வைகோ அவர்களுக்கும்.
தடா வக்கீல் புகழேந்தி அவர்களுக்கும் எதிர் கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கும் .
சட்ட மன்ற உருப்பினர்கள் அனைவருக்கும் அவசர தந்தியினை ஜனாதிபதிக்கு அனுப்பி தந்த தாயுள்ள்ம் கொண்ட வெளி நாட்டு வாழ் தமிழர்களுக்கும்.
புரட்சி புயல் சீமான் அவர்களுக்கும் தொல் திருமாவளவன் அவர்களுக்கும்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்களுக்கும் மற்றும் டாக்டர் கிருஷ்ண சுவாமி அவர்களுக்கும்
மக்கள் ஆதரவை மதித்து பொருமை காத்த தமிழக காவல் துறையினருக்கும் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும்
நன்றி...நன்றி...நன்றி.
செங்கொடியே நீ செய்த காரியத்தால் நாம் உம்மை மறந்தோம் எதர்க்காக தெரியுமா?
உன்னை தியாகி என்று நாம் புகழாராம் சூடியால் இன்னும் எத்தனை கொடிகள் வீழும் இம்மண்ணில்?
அதற்காகத்தான்.
