
நிலவொளி முற்றத்தில்
ஆசை தீர்க்கும் திட்டத்தில்
நிழலாய் இரண்டு உருவங்கள்
நிஜமான உருவத்தில்.
விரல் தொட்டு பேசியே
எல்லை மீறவும் ஆசையே
குளிர் காற்றின் பாவனையும்
தளிர் அவளின் தோரனையும்
துடி துடிக்கும் இதயங்களுடன்
நெருங்கி வந்தனர்சிறுபயங்களுடன்
அரும்பியதும் அவன் விரும்பியதும்
பறக்க போகிறது மானம்
பிஞ்சு மகளை காணோம் என்று
நெஞ்சு வலிக்க பெற்றோர்கள்
காவல் நிலையம் சென்றங்கே
கண்ணீர் வடித்து அழுதார்கள்
காரணம் அறிந்த போலிசார்
யாரேனும் இதற்கு சதியா என்றனர்
பதினெட்டு கடக்காதவளுக்கு
யாரய்யா சதி செய்வார்?
உரிமை என அவனின் கல் நெஞ்சம்
அவளை சீரழிக்கப் போகிறது
அறியாமை என்னும் பிஞ்சு அவள்
சீரழியும் நேரமிது
மழலை பருவ மங்கையே
கண்ணீரில் மிதக்கிறாள் உன் தங்கையே
போலியில்லா உன் முகம் பார்த்து
உன் சிறகுகளை பிடுங்க வில்லையே.
தொலை பேசியின் அலறலும்
எதிர் முனை உலறலும்
நம்ப முடிய வில்லை போலிசுக்கு
பெற்றோருடன் பறந்தது வாகனம்.
எத்தனை வேதனை இவர்களுக்கு
மனசு தந்தியடிக்க
இரு இதழ்களும் துடி துடிக்க
விழிகளிலும் அவர் பேசும் மொழிகளிலும் கண்ணீர் தெறிந்தது.
கூடிய கூட்டத்தையும்
கூவி அழைத்த கிழவனையும்
குடைந்து எடுத்தது போலிசு.
கொல்லப் பட்ட சடலங்களும்
இனி எங்களை யாரும் தேடாதிர் என்றது.

சத்தம் போட்டு
கண்களை பொத்திக் கொண்டு
கதறி அழுதது ஒரு கூட்டம்
ரத்தம் பார்த்து மனதினை
தட்டிக் கொண்டு சிதறி ஓடியது
இன்னொறு கூட்டம்.
அப்போ கொலையாளி யார்?
நண்பர்களே இது கவிதை இல்லை இது ஒரு புதிர்.
வஞ்சகம் தீர்க்க நய வஞ்சகம் செய்து ஒரு அப்பாவி பெண்ணை சீரழித்தான் காமுகன்,இறுதியில் கொலைதான் தண்டனை,அவன் மட்டும் இல்லை அவளும் கொலை செய்ய பட்டாள் அப்போ அவர்களை கொன்றது யார்?
இருட்டில் நடந்தது காதலா?
இல்லை இருவருக்கும் நடந்த மோதலா?
பரந்து விரிந்த பூமியில் படு பயங்கரத்தின் ஊதலா?
யாருக்குமே தெரிய வில்லை என்ன நடந்ததுவென்று.
காத்திருங்கள் அடுத்த பதிவு இடும் வரை.


