வீடற்று நாதியற்று
வீட்டாரின் உறவற்று
காடற்று கடலற்று
கண்டிராத புகழற்று
நடைப்பாதை புழுதியிலே
விடையில்லா பொழுதினிலே
உடையும் என் மனதினை
ஒட்டிவிட ஆளில்லை.
மரணம் நெருங்குமென்று
கரணம் நானிட்டாலும்
சரணம் துதிப்பாடியே
ரணம் ஆனது வாழ்க்கை.
ஆண்பாதி பெண்பாதி
கண்ணீர் வழியும் சரிபாதி
வெண்மை இதயத்தில்
இருண்ட வாழ்க்கைதான் மீதி.
வெற்று உடம்புகளும்
பற்றற்று போகின
பற்று உறவினமும்
புண்பட்டு மடிந்தன.
கூவ நீரில் நானும்
குழாய் நீரில் நீயும்
போராடி வாழ்ந்தாலும்
மரணம் நிச்சயம்.
உயிரில்லா உறவுகளும்
நடைபிணமாய் அழைகின்றது
பெயரில்லா மனிதர்களும்
படைகொண்டு வாழ்கின்றது.
இதுதான் வாழ்க்கையா
இல்லையேல் இயற்கையா
வசீகர வாழ்க்கையில்
ருசிகரமாய் தெரிவது மரணமே.
என் ஏக்கங்களை தொலைத்து விட்டு
என் ஆக்கங்களை மண்ணில் புதைத்து விட்டு
வீன் தர்க்கத்தில் வாதிட்டால்
விளங்குமா வாழ்க்கை?
இறுகிய இதயத்தில்
இறையருள் பெற்றிட வேண்டும்
குறுகிய காலத்தில்
குறைகள் போக்கிட வேண்டும்
அங்கும் இங்கும் கடன்பெற்று
அன்பு எனும் பயிரை விதைத்திட்டு
அல்லல் படும் மாந்தர்களை
அனைத்திடுவோம் இருகரம் தொட்டு.
இலை உதிர்ந்து கிளை ஒடிந்து
கருகி போன மரம்கூட தளிர்கின்றது
நிலை குழைந்து நில்லாமல்
கலை மகள் காவியமாய்
நிற்பாய் என நான் நம்புகிறேன்.
வலிகள் நிறைந்த உன் வாழ்க்கையில்
நல் வழிகள் திறக்கட்டும்.
ரணங்கள் ஆன உன் மேனிகள்
நருமணம் கொண்டு சிறக்கட்டும்.
![]() |
| வாழ்க ஏழைகள். |
