Showing posts with label வாழ்க இந்தியா.. Show all posts
Showing posts with label வாழ்க இந்தியா.. Show all posts

Wednesday, August 31, 2011

திரண்ட தமிழகம்!


ஏழு கோடி...தலையுடையாள்
ஏழாதவற்கும் அள்ளி தருவாள்
நாளு நாளாய் கண்ணீர் துயரால்
தவிக்கின்றாள் தமிழ் தாயவள்.

மத்திய அரசின் ஆனவமும்
கத்திய தமிழனின் ஆவனமும்
நீதியரசின் முன்னிலையில்
முட்டித்தான் பார்த்தது.

நீதிக்கு தலை வணங்கி
அநீதிக்கு குரல் சினுங்கி
வீர கம்பீரத்துடன்
தீர்ப்பளித்தார் நீதிமான்கள்.

மத்திய அரசின் படைகளும்
காந்திய பேரில் மனிதர்களும்
சிறையை பிடித்து வைத்தாலும்
திரையை அகற்ற முடியாது.

கொக்கரிக்கும் சுப்ரமணி சாமியும்
அதற்கு துணை போகும் ஆசாமியும்
குளத்தில் மிதக்கும் ஆமையென்று
செய்தி தாள்கள் சொல்லுகிறது.

மனித காந்தி சோனியாவும்
மவுனம் காப்பது சரியல்ல
மன்னிக்கும் பக்குவம் காந்திக்கு உண்டு
என்னைக்கு மாறும் இந்நிலை கண்டு.

மாநில அரசின் தீர்மானம்
மத்திய அரசு மதிக்காதாம்
விடையும் அவர்கள் நடையும்
வியப்பளிக்கிறது எங்களுக்கு.

ஓர் இந்தியா ஒரு மக்கள் ஒரு நாடு
கொள்கைக்கு உகந்ததல்ல உம் கோட்பாடு
மறவோம் மன்னிப்போம் மனித நேயத்தோடு
இறையான்மை காப்போம் ஒரு பலத்தோடு.

வாழ்க இந்தியா.