Showing posts with label cheedhanam. Show all posts
Showing posts with label cheedhanam. Show all posts

Tuesday, April 26, 2011

பெண்ணாய் பிறந்துவிட்டால்... இதுலாம் சகஜம்...!!!





கண்ணில் ஒரு மின்னல்,முகத்தில் ஒரு சிரிப்பு,சிரிப்பில் ஒரு பாசம்,பாசத்தில் ஒரு நேசம், நேசத்தில் ஒரு இதயம்,இதயத்தில் ஒரு உதயம்,அவ்வுதயத்தில் ஒரு புரட்சி,அப்புரட்சியில் இருதியாய் கண்டது மிரட்சி.

காரணம் பெண்ணாய் பிறந்த நீ எத்தனை சுமைகளை தாங்குவாய் ?

மருத்துவச்சி பார்வையிலே,நீ பிரசவிச்சு போகையிலே,தலை மன்னன் உறுதி என்றால்...உச்சி முகம் முகர்ந்து, பிச்சிப் பூவால் பிணைந்து, உச்சி வாங்கெடுத்து, உலராத பூவெடுத்து, உன்னை போல வருமா ? என் கண்ணைப் போல வருமா என்று புகழ்கின்ற,மாமியாக்களும் பெண்கள்தானே ?

அவள்தான் காரணம் கைக்கூலி வாங்குவதர்க்கும் உன்னை வதைத்து எடுப்பதர்க்கும்.

மகளின் உணர்வை மதிக்கும் தாயவள் மருமகளின் உணர்வை கொல்வது ஏனோ?

அழகு அறிவு அருங்கலை ஆற்றல்,அடக்கம் பனிவு உயர்ந்தோரை போற்றல் என்று தம்மை பம்பரமாக சுற்றிக் கொள்ளும் பெண்ணவள் பாவம்.
ஆட்டி வைப்பதும் பெண்ணே,நிலை தடுமாறி ஆடுவதும் பெண்ணே.

"வரதட்சனை" இதைப் பிறித்து எழுதியால் வர+தட்சனை=வருவதற்க்கு தட்சனை.
யார் வருவதர்க்கு யார் தட்சனை கொடுக்கனும் ?

சமுதாய கணக்கின்படியே வருவோம் ஒரு பெண் ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து ஒரு ஆடவனை திருமணம் செய்துள்ளாள் என்று வைத்துக் கொள்வோம் விலைக் கொடுத்து வாங்கப்பட்ட அந்த ஆடவன் யாருக்கு சொந்தம் ?
அவளுக்குத்தானே சொந்தம் இது ஏன் மர மண்டை மாமியார்மார்களுக்கு தெரிய மாட்டேங்கிறது விலை கொடுத்து வாங்கப்பட்ட அந்த அடிமை உயிர் உள்ளவரை எசமாணியம்மாளான மனைவிக்குத்தான் உழைத்துக் கொடுக்கனும் இதில் யாரும் பங்கு கேட்பதை அனுமதிக்க முடியாது.

கடுமையான குளிரிலும் கொடுமையான பிரிவினிலும் கொடூரத் தனிமையிலும் கடும் நிசப்த்த இரவினிலும் காவியம் படைப்பாள் பெண்ணவள் ஆனால் அவளின் வாழ்க்கை இருட்டறையே.

பெண் எழுத்து...பெண் எழுத்து.. என்று பறை சாற்றும் நாம் சாதித்தது என்ன ?

நான்கு பெண்கள் நன்றாக இருப்பதினால் பெண் சமுதாயம் முன்னேறி விட்டதா?

இங்கு நான்காயிரம் பெண்கள் பஞ்சத்திலும் பசியிலும் வரதட்சனைக் கொடுமையிலும் செத்து மால்கிறார்களே அவர்களை என்னவென்று சொல்வது ?

பிச்சை எடுத்து வயிற்றை கழுவும் மனித ஜாதி கூட நிம்மதியாய் மூன்று வேலை சாப்பிடுகிறது எச்சை தட்டு கழுவிப் செத்து பிழைக்கும் மனித ஜாதிக்கு ஒரு வேலை சாப்பாடு கிடைப்பதே அரிது.

வரதட்சனையை ஒழிப்போம் !
வரதட்சனை கேட்டு வரும் பெண்களை அழிப்போம் !




யா அல்லாஹ்..எங்களை போன்ற கோடான கோடிஏழைகளுக்குவெளிச்சத்தை தந்தருள்வாயாக. 


ஆமின்.