Showing posts with label poor people. Show all posts
Showing posts with label poor people. Show all posts

Thursday, July 14, 2011

அர்த்தமற்ற வாழ்க்கை.

வீடிழந்து,வாசலிழந்து தங்கள் விதியினை நொந்து கொண்டு உயிரைக் காக்கவென ஊர் விட்டு ஊர் வந்து,வாழ்க்கை வண்டியை ஓட்ட நினைப்பவறே கொஞ்சம் கேளுங்கள்.


வாழுகின்ற வாழ்வில் துன்பங்கள்,துயரங்கள் எல்லாம் புதுப் புது வடிவில் வந்து துவட்டும் போது சமாளித்து எழுவது எப்படி?

அலையும் மனங்களோடு,அலையாத மனிதர்களோடு,அள்ளி தர ஆள் இருந்தும் வாங்குவதற்க்கு உன் "கை" வரவில்லையே ஏன்?
ஒரு வேளை இரவல் வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணமா ?

இந்திரியாத்தால் உருவெடுத்து ஒரு பிடி மண்ணில் உனைப் படைத்து உயிரை இரவலாக தந்து உமை காத்த இறைவனை மறக்கலாமா ?

சத்தியம் வெல்லும் தருவாயில் அசத்தியம் வென்று உமைக் கொன்றாளும் கலங்காதே நாளை நீதான் வெற்றி அடைவாய்.

துன்பச் சுமைகள் உமை அழுத்த கண்களில் கண்ணீர் மடை திறக்க இதயமே வெடித்து போனாலும் கலங்காதே.

அடுத்தவர்,பணம் படைத்தவர்,உமை ஏசினாலும்,அல்லது "நா"கூவ பேசினாலும் கண்டு கொள்ளாதே.


நித்தம் புறியாமல் நிசப்த்தம் கூடாமல் துணிச்சலான உம் வாழ்க்கையை நீச்சல் அடித்து கரை சேர்க்க வந்து விட்டான் நல்லோர் வடிவில்.

ஆம்...தானம் தர்மம் என்ற பெயரிலும்,தானும் உண்டு மீதி போக,பிறருக்கு கொடுக்கும் நல்ல மனப்பான்மையும் வந்து விட்டது பலருக்கு.


நித்தம் புரியாமல் நீண்ட நினைவலைகள்,அர்த்தம் விளங்காமல் ஆயிரமாயிரம் கனவுகள்,அர்த்தமற்ற காத்திருப்பு,நிரப்பப்படாத இடைவெளியாய்
நீண்ட சிந்தனைகள்...போதும்..போதும்..நிறுத்து விடு இக்கனவினை.

அதோ பார்....வானத்தில் விடி வெள்ளி அது போல உமது வாழ்க்கையிலும் வந்து விழும் பெரும் சள்ளி.
நட்பு என்பது வெறுமனே உயிர் கொடுக்கும் உணர்ச்சியல்ல.
நட்பு என்பது மிகமிக ஆழமான அர்த்தம் கொண்ட சொற்பதம்.

நட்பு என்பது தூய்மையான அன்பினால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு,இன்பத்திலும்,துன்பத்திலும் பகிர்ந்து கொண்டு செயல்படுவதே நல்ல நட்பாகும்.

தன் நண்பனின் இன்பத்தில் பங்கு கொண்டு, துன்பத்தில் தூர ஓடுவது நல்ல நட்பிற்கு நல்லதல்ல.

அது போல வறுமையில் வாடியிருக்கும் குடும்ப நண்பர்களை நல் வழி காண்பிப்போம் அதில் அவர்களுக்கு கிடைக்கப் போவது அற்ப்ப சுகமே அதில் நமக்கு கிடைப்பது பெரும் சொர்க்கமே.