Wednesday, September 28, 2011

நண்பர்களே.....


நண்பர்களே கடந்த நான்கு நாட்களாய் வெளி ஊரில் இருப்பதால் உங்கள் வலை பூவிற்கு வர இயலவில்லை இன்னும் இரண்டு நாட்களில் வேலை முடிந்தப் பிறகு சந்திக்கிறேன்.


நன்றி.

Thursday, September 22, 2011

பெற்ற குழந்தையை உயிரோடு திண்ணும் அப்பா !!!


தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசியான இக்கொடியவன் தாம் பெற்ற பிள்ளையை உயிரோடு கடித்து சாப்பிட்டுள்ளான்.

பெற்ற மனம் கல்லாகி
குற்றமெனும் தெரிந்தும்
கற்றதறியா பிஞ்சுதனை
கடித்து குதறும் காட்சியினை பார்.


மழை துளி விழுந்தும்
மலர் பல நனைந்தும்
மங்காத மண் பூமியில்
கொடூரத்தின் சாட்சியினை பார்.


பசிக்காத வயிறும்
ருசிக்காத நாவும்
இக்கொடுஞ் செயலை 
செய்வதை நன்றாக பார்.


என் இதயம் கிழித்து
குரல் வளையை நெரித்து
என் குருதி குடித்த
கொலைகாரனை உற்றுப் பார்.


நெற்றி முத்தமிட்டு
வெற்றி என சத்தமிட்டு
எனை சுற்றி நீ வருவாய் என
காத்திருந்தேனே அப்பா.


கன்னத்தில் என் வண்ணத்தில்
என்ன குறை கண்டாயோ
மது கிண்ணத்தில் பொடியாக்கி
குடிக்கிறியே நான் பிறந்தது தப்பா?


உதிர்ந்த முத்தங்களும்
உணர்வற்ற சத்தங்களும்
உணர்ச்சிகள் இல்லாமல்
அழுத்து போகவில்லையே.


கறை படிந்த உன் உள்ளங்களை
சிறை பிடிக்க வேண்டும் என
பறை போட்டு சொல்லவும்
என் உயிரும் இல்லையே.


என் நினைவுகளை நீ சுமந்து
பின் விளைவுகளை நீ அடைந்து
மனித கழிவை திண்ணும்
நாளும் உனக்கு வராதோ?


உன் உயிரோடு உயிராக
நான் இல்லாமலும்...
உன் உயிருக்கு உறவாக 
ஆள் இல்லாமலும்...
உன் உயிர் இருக்கும் வரை
உணர்ச்சியின் வலிகள் தொடரட்டும்.



Friday, September 16, 2011

என்னது...மீண்டும் சிரிப்பா? jokes


மிச்சர் கடையில் கொசுரு கேட்க்கிறவனுங்க...
டீ கடையில் ஓசி பேப்பர் படிக்கிறவனுங்க...
சாக்ஸை தொவைக்காமல் போடுறவனுங்க...
பப்ள்கம் சாப்பிட்டு சீட்டுக்கு அடியில் ஒட்டுறவனுங்க...
சோறு வாங்கி கொடுத்துட்டு சொல்லி காட்டுறவனுங்க...
பஸ்ஸில் ஓசி பயணம் செய்ரவனுங்க...
இவர்கள் எல்லோரும் வன்மையாக தண்டிக்கப் படக் கூடியவர்கள்.



அப்புறம் என்ன சிரிக்க வேண்டியதுதானே.



ஆசிரியர்; நான் வரும்போது ஏன் சிரிக்கிறீர்கள்?
மாணவர்கள்; துன்பம் வரும்போது சிரிக்கணும்ன்னு நீங்கதானே சொன்னீங்க.
ஆசிரியர்;தண்ணீரில் வாழும் மூன்று உயிரினங்கள் சொல்லு
மாணவன்; மீன்,முதலை,எங்க அப்பா.
நோயாளி: டாக்டர் இதுக்கு மேலே என் வாயை திறந்தால் வாய் வலிக்கிறது.
டாக்டர்: யோவ்... நான் திறக்க சொன்னது வாயை இல்லை உன் மணி பர்ஷை.
---------------
கபாலிக்கு அந்த இன்ஸ்பெக்டர் சல்யூட் அடிக்கிறாரே எதுக்கு?
மாமூல் கொடுக்கிற பட்டியல்ல 30 வருஷமா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறானாம்.
-------------
ஒருவர்:என் மனைவியை இன்னிக்குத்தான் பயங்கரமா திட்டினேன்.
மற்றொருவர்: நீ திட்டுற வரைக்கும் உன் மனைவி சும்மாவா இருந்தாங்க?
ஒருவர் : இல்லை அவ நல்லா தூங்கிட்டு இருந்தா.
கணவன்: சீனி டப்பாவில் எதுக்கு உப்பு என்று எழுதி வைக்கிறே?
மனைவி : எல்லாம் எறும்பை ஏமாற்றத்தான்.
---------------
கபாலி: ஹலோ! சுந்தரா ஜவுளிக்கடையா?
ஓனர் : ஆமாங்க நீங்கள் யாரு பேசுறது?
கபாலி: நான் சைதாப்பேட்டை கபாலி பேசுறேன் ராத்திரி உங்க கடைக்கு வந்திருந்தேன் நல்ல டிஷைன் புடவைகள் இல்லை எப்போ வரும்னு சொல்ல முடியுமா சார்?
ஓனர்: !!!
---------------
நோயாளி: டாக்டர் எனக்கு இப்போ ஆப்ரேசன் பன்ன வேண்டாம் எனக்கு டைம் நல்லா இல்லைனு ஜோசியகாரர் சொல்லி இருக்கார்.
டாக்டர்: அதே ஜோசியகாரன்தாய்யா டைம் நல்லா இருக்கு நீங்கள் ஆப்ரேஷன் பன்னலாம் என்று என்னிடம் சொல்லி இருக்கார்.
நர்ஸ்: டாக்டர்..டாக்டர் ஸ்கேன் மெசினை கானோம்!!
டாக்டர்: அய்யோயோ...கபாலிகிட்டே ஸ்கேன் எடுக்கனும் சொன்னதை தப்பா புறிஞ்சுக்கிட்டு ஸ்கேன் மெசினை தூக்கிட்டு போயிட்டானே.
----------------
நோயாளி: நாய் துரத்துற மாதுரியே கனவு வருது டாக்டர்.
டாக்டர்: அப்படியா மூணு நாலு கல்லை வைத்துக் கொண்டு தூங்கு நாய் துரத்தாது.





Sunday, September 11, 2011

சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்...



அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!
$$$$$$$$$$$$$$$$$$$$
பாடகர்: தொண்டையில ஆபரேஷன் முடிந்த பிறகு நான் பாடலாமா 
டாக்டர்: நீங்க இனிமே பாடக்கூடாதுன்னுதானே இந்த ஆபரேஷன்!!
$$$$$$$$$$$$$$$$$$$$
மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..
கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...
மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை...
கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..
மனைவி:-????????
$$$$$$$$$$$$$$$$$$$$
குளிர்காலத்துல ஆபரேஷன் பண்றதா இருந்தா டாக்டருக்கு ரொம்ப இஷ்டம்...."
"ஏன்?"
"ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்னால நடுங்குதுன்னு சொல்லி சமாளிச்சுறலாமே!"
$$$$$$$$$$$$$$$$$$$$$
"என்னடா! கையில பைனாகுலர் எடுத்துகிட்டு எங்கே போறே?"
"நான் என் "தூரத்து" சொந்தக்காரர் ஒருத்தர பாக்கப்போறேன்."
$$$$$$$$$$$$$$$$$$$$$
நோயாளி : டாக்டர், வயித்து வலி என்னால பொறுக்க முடியல...
டாக்டர் : வயிறு வலிக்கும்போது,நீங்க ஏன் பொறுக்கப் போறீங்க?
$$$$$$$$$$$$$$$$$$$$$
காதலன் : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.
காதலி : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?
காதலன் : மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...
காதலி : !!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$
"ஏண்டி டாக்டர் உன்னை எதையும் தூக்கி வச்சுக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காருல்ல..."
"ஆமாம்...அதுக்கென்ன...?"
"நீ இப்ப மூஞ்சியைத் தூக்கி வச்சுக்கிட்டிருக்கியே...!"
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "ஓ" போட்டாங்க...
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
முதலாளி: இந்தக் கம்பெனியில்"நைட் வாட்ச் மேன்"வேலை கேட்கறியே,உனக்கு அனுபவம் இருக்குதா?
வேலைக்கு வந்தவன்: என்ன இப்படிக் கேட்டுட்டீங்க.இரவுல லேசா சின்ன சத்தம் கேட்டாக் கூட நான் விழித்துக் கொண்டு விடுவேன்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நர்ஸ்:ஆப்ரேஷன் தியேட்டர்ல டெலிபோன் வைக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்?
டாக்டர்: ஏன்?
நர்ஸ்: இப்ப அதுவும் டெட் ஆய்டுச்சு
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பொதுக் கூட்ட மேடையிலே ஏன் தீப்பிடிச்சிருக்கு?
தலைவர் அனல் பறக்கப் பேசினாராம்!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...? காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
போலீஸ்:!!!!
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மனைவி: ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா இல்ல ரசம் வைக்கட்டுமா?
கணவன்: முதல்ல எதாவது ஒன்னு வை... அப்பறமா அதுக்கு பேரு வச்சுக்கலாம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க...
வணக்கம்தான் சொல்லிட்டேனே...வெண்ணே மறுக என்ன வணக்கம் நொனக்கம்னு.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...
யாருங்க அந்த மகாலட்சுமி ?
எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... பெண் அவ்வளவு அழகா? 
இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா.
$$$$$$$$$$$$$$$$$$$$$$
நீதிபதி:ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?
கபாலி:என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான் அதான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே? வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மெயில் அனுப்பி தந்த நண்பர்களுக்கு நன்றி.


Wednesday, September 7, 2011

டெல்லியில் குண்டு வைத்தது யார்?



டெல்லி ஐகோர்ட்டு முன்பு இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 10 பேர் பலியானார்கள். 65 பேர் காயம் அடைந்தனர். 

இந்த குண்டு வெடிப்புக்கு பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.பாராளுமன்றம் இன்று கூடியதும்,சபாநாயகர் மீராகுமார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

முடிந்தது வேலை.

கொல்லப்பட்டவர்களின் குடும்பம் நாதியற்று நிற்கின்றது அந்நிலையில் உணரப்பட்ட வலியும் மரணித்து மண்ணாகி போயின காயங்கள் பட்டு அக்காயத்திற்கு மருந்துகளை இட்டு வரும் தருவாயில் மற்றொரு குண்டு வெடிப்பு !!!
உள்துறை அமைச்சகமும் தேசிய பாதுகாப்பு கமிட்டியும் அவசரம் அவசரமாக ஒரு புகைப் படத்தை வெளியிட்டு இவனாக கூட இருக்கலாம் என்று இறந்து போனவனின் புகைப் படத்தை காட்டி இந்திய மக்கள்களை முட்டாளாக ஆக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்,மும்பையில் நடந்த குண்டு வெடிப்பே இதுவரையிலும் கண்டு பிடிக்காமல் இருக்கும் நிலையில் இன்னொரு துர திருஷ்ட்டம் வந்திருப்பதை எந்த ஒரு ஆன்மாவும் மன்னிக்காது.

பிரதமர் தொடங்கி அனைத்து தலைவர்களின் கண்டனமும் கடுதாசியும் பத்திரிக்கையில் வந்தாச்சு ஆனால் இறந்து போனவரின் உயிர்தான் வரவில்லை இந்திய தேசிய கொடியை நெஞ்சில் சுமந்து கொண்டு ஒவ்வொரு இந்தியனும் உலா வரும் நிலையில் இரக்கமற்று கொன்னு குவிக்க எப்படி மனம் வந்தது என்றுதான் புறியவில்லை!
அரசியல் முடிவு எடுக்கப்படவேண்டிய நேரமிது இல்லையேல் மிஞ்சிய இந்தியாவும் சீரழிந்து போகும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இவைகளை யார் செய்கிறது?

பாக்கிஸ்த்தானை குற்றம் சுமத்தும் நாம் ஏன் அநாட்டுடன் உறவை வைத்திருக்க வேண்டும்?
சீனாவுடன் கூட்டு அமர்த்தி நம்மை குத்தி விடுவார்கள் என்ற பயமா?
இல்லை அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக மாறி நமக்கு தொல்லை தருவார்கள் என்ற பீதியா?
நாம் உறவை வைத்துக் கொண்டே இத்தனையயும் சந்தித்து வருகின்றோம் பிறகு எதற்கு அவர்களுடன் நமக்கு நட்பு?
தீவிராவாத இயக்கங்களும் அதனை வளர்க்கும் மனித மிருகங்களும் தண்டிக்கப் படகூடியவர்கள் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு முன்பே மக்கள் முன்பு கொல்லப்பட வேண்டும் காரணம்,வழக்குகளும் விசாரனைகளும் அவர்களை காப்பாற்றிவிடும் அதற்க்காகத்தான் வழக்கறிஞர் மஹான்கள் காத்திருக்கின்றனர் அவர்களின் வேலையோ அவர்களின் வாதத்திறமையால் நல்லதையும் கெட்டதாக நிரூபிக்கவேண்டும் கெட்டதையும் நல்லதாக நிரூபிக்கவேண்டும் இத மாயஜால வித்தையை கற்று வைத்திருக்கும் இவர்கள் குற்றவாளியை வெளியில் கொண்டு வருவதற்கு செத்த பிணத்தை கூட திண்ண தயங்க மாட்டார்கள்.

தீவிரவாதம் முற்றிலுமாய் அழிக்கப் படவேண்டும் அதற்கு வழி வகுத்து கொடுக்கும் ஆசாமிகளும் அரசியல் வாதிகளும் தண்டிக்கபட வேண்டும் இல்லையேல் நாட்டின் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடும்.
பாக்கிஸ்த்தான் முஸ்லிம் செய்யும் குற்றத்திற்கு இந்திய முஸ்லிம் எப்படி பொறுப்பு ஏற்ப்பான்?
இஸ்லாம் என்று தம்மை தம்பட்டம் அடித்து கொண்டு திமிர் பிடித்து அலையும் தீவிரவாதிகளையும் ஹிந்துத்துவா நாங்கள்தான் என்று பறைசாட்டி திறியும் போலி காவிகளையும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.

குண்டு வெடிப்பில் இறந்த ஆன்மாக்களுக்கும் அவ்வான்மாவின் உறவுகளுக்கும் எனது அனுதாபங்கள்.
காணொளியில் நீங்கள் பார்த்தது பாக்கிஸ்த்தான் அப்பாவிகளை தாலிபான் தீவிரவாதிகள் கொல்லும் காட்சிதான் இப்போ தெறிகிறதா தீவிரவாதி என்றால் எப்படி இருப்பார்கள் என்று?
கொல்லுகிறவனும் முஸ்லிம்தான் கொல்லப் படுகிறவனும் முஸ்லிம்தான்.
தீவிரவாதத்தை இஸ்லாம் ஒரு போதும் அனுமதிப்பது இல்லை இதை புறியாமல் நடப்பவர்கள் ஒரு போதும் முஸ்லிமாக இருக்கமாட்டார்கள்.

வாழ்க இந்தியா.