Monday, November 22, 2010

வரதட்ச்சனைக் கொடுமை !!!



வரதட்ச்சனைக் கொடுமை !!!

புரியாதப் புதிராகவே இருக்கிறது இந்த சொல்...! வரதட்ச்சனை கேட்ட்பவள் பெண்,வரதட்ச்ச்சனையை கொடுப்பவள் பெண்,அதை போராடி வீதிக்கு கொண்டு வருபவள் பெண்,நீதி மன்றத்தில் தீர்ப்பு சொல்லுபவளும் பெண்.
இப்படித் தலைமுறை தலைமுறையாக தொடரும் இந்த தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாதா ?
கண்டிப்பாக முடியும்,பெண்கள் மனசு வைத்தால் மட்டுமே முடியும்.

நாற்ப்பது வருசத்திற்கு முன்னாடி நீங்கள் மருமகளாக, மாமியார் வீட்டிற்குப் போகும்போது வரதட்ச்ச்சனைக் கொடுமைக்கு, மாமியார், மற்றும் நாத்தனர்களால் பெரும் துனபத்திர்க்கு ஆளாக்கப் பட்டிர்கள்... சரியா ?
அன்று நீங்கள் மருமகள்கள்...!!! இன்று நீங்கள் மாமியார்கள்...!!!
நீங்கள்தான், இந்த தலைமுறையில் வரக்கூடிய மருமக்கள்மார்களை வரதட்ச்சனைக் கேட்டு தொல்லைப் பண்ணுகிறிர்கள்.
இதே மருமக்கள்மார்தான் இன்னும் இருபது வருஷம் கழித்து வரதட்ச்சனைக் கேட்கப் போகிறார்கள், ஆகமொத்தம் கூட்டி கழிச்சுப் பார்த்தால், பெண்ணிற்கு பெண்ணே எதிரி !!!

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதற்காகவே பெண் வீட்டார்கள், பயிரிடப்படும் நிலங்களை விற்று, தம் பொண்ணுகளை கரை சேர்த்துள்ளார்கள்,கணவன் என்றப போர்வையில் கைக்கூலி வாங்கியவன் திருடன்தான்.
திருடன் கத்தியைக் காட்டி திருடுவான்,நீயோ தாலியைக் காட்டி திருடுகிறாய்.
வரதட்ச்சனைக் கொடுமையைப் பற்றி எழுத்தின் மூலமாகவும்,சமூக அமைப்பின் மூலமாகவும்,கவிதைகள் மூலமாகவும்,மற்றும் பல போராட்டங்கள் மூலமாகவும், எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்க்காத இந்த கேடுகட்ட சமூகத்திற்கு, அன்னியனைப் போன்றவர்கள் தண்டனைக் கொடுத்தால், குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.

தொட்டதெல்லாம் பொன்னாகிறதே என்று, பெண் வீட்டாரை தொல்லைப் படுத்தும் ஆண் வீட்டாரை எச்சரிக்கிறேன்.
வாங்கியது வாங்கியதாகவே இருக்கட்டும், இனி நீங்கள் வரதட்ச்சனை என்று வாயை எடுத்தால் பழுக்க காய வைத்த கடப்பாறையை எடுத்து உங்கள் வாயில் நுழைப்பதற்கு அந்நியனின் சட்டத்தில் இடம் இருக்கிறது,ஆகையால் அத்தகைய குற்றத்திற்கு ஆளாகாமல், நல்ல வீட்டாராக நடந்து கொள்ளுவதற்கு சத்திய பிராமணம் எடுத்துக் கொள்ளுங்கள்.
இல்லையேல் அந்நியனின் வேட்டை தொடரும், இங்கு தீர்ப்பு மட்டும்தான் வழங்கப்படும்,இந்த தீர்ப்பை படித்து விட்டு இந்தியாவில் உள்ள முப்பது கோடி அந்நியன்களும் உங்கள் இல்லம் தேடி வந்து தண்டனைக் கொடுப்பார்கள்.

வரதட்சனைக் கொடுத்து, கணவன் வீட்டிற்குள் போகும் புதுப் பெண்ணே, உன்னையும் எச்சரிக்கிறேன் உன் மகனுக்கும் வரதட்ச்சனைக் கேட்பதற்கு மனக்கணக்கு போட்டிருந்தால், வாசலில் போடும் கோலமாக நினைத்து அதை அழித்துவிடு, இல்லையேல் அந்நியனின் சட்டத்தின் முன்னே நீயும் குற்றவாளிதான், உனக்கும் அதேக் கம்பிதான் தண்டனை.

அந்நியனின் பரிந்துரை :

1 .ஆடம்பர கல்யாணச் செலவைக் குறைத்து விடுங்கள்.

2 .இரு வீட்டாரும் கல்யாணச் செலவை சேர்ந்தே செய்யுங்கள்.

3 .விருந்தை ஒரே இடத்தில் வைத்து இரு வீட்டாரும் இனைந்து கொள்ளுங்கள்.

4 .தங்கம் அணிவதை பெண்கள் புறக்கணியுங்கள்.

5 .சீர்,சீராட்டத்தை மறந்து விடுங்கள்.

இதையும் மீறி நீங்கள் வரதட்சனைப் பணத்தை வாங்கி, வீடு கட்டிடலாம்னு மனக்கோட்டை கட்டி விடாதிர்கள் அழிந்து நாசமாகப் போவிர்கள்,அந்தப் பணத்தை வாங்கித் திங்கப்போகும் நீங்கள் மனித கழிவை தின்பதற்கு சமம்.

பெண்ணையும் கொடுத்து அதை சேர்த்து பொன்னையும் கொடுத்த மக்களின் சாபத்திற்கு ஆளாகிவிடவேண்டாம்.
நண்பர்களே சிந்தியுங்கள்...! பிறகு செயல்படுங்கள்...!

வரதட்ச்சனை மூலமாக வந்தப் பணம் !!!
அது உமது சகோதரனின் அழுகியப் பிணம் !!!


அந்நியன் : 2

12 comments:

  1. நல்ல கருத்து.
    இது இப்படியே போயிட்டு தான் இருக்கும். கொடுமை அனுபவிச்சவங்களாவது வரதட்சணை வேண்டாம் என சொல்ல ஆரம்பித்தால் கண்டிப்பாக இதற்கு முற்றுபுள்ளி கிடைக்கும்!

    ReplyDelete
  2. பாலோவர்ஸ் கெட்ஜெட் வச்சாச்சு போல :)

    ReplyDelete
  3. வாங்கள் ஆமினா,கண்டிப்பா இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் முதலில் சந்தோசப் படுவது நானாகத்தான் இருக்கும்,நன்றி உங்கள் கருத்திற்கு.

    நீங்கள் எழுதிய பிரகாரம் முயற்ச்சிசெய்தேன்,ஆனால் இறுதியில் வரவே இல்லை,கடும் போராட்டத்திற்குப் பின் ஸ்தார்ஜான் அவர்களுக்கு மெயில் அனுப்பினேன் விளக்கப் படத்துடன் அனுப்பினார் ஈசியா புரிஞ்சிகிருச்சு,ரொம்ப நன்றி உங்களுக்கும்

    ReplyDelete
  4. அண்ணா மஹர் பத்தியும் கொஞ்சம் நம்மாளுங்களுக்கு அறிவுருத்தியிருக்கலாமே

    ReplyDelete
  5. அந்நியனின் பரிந்துரைகள் ஏற்க படவேண்டியதே...

    ReplyDelete
  6. //இத்ரூஸ் said...
    அண்ணா மஹர் பத்தியும் கொஞ்சம் நம்மாளுங்களுக்கு அறிவுருத்தியிருக்கலாமே//

    மார்க்கத்தைப் பற்றி நம்ம இஷ்ட்டத்திர்க்கு எழுதிட முடியாது சகோ..விரைவில் தொடரும்.
    வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி இத்ரூஸ்

    ReplyDelete
  7. //ஹரிஸ் said...
    அந்நியனின் பரிந்துரைகள் ஏற்க படவேண்டியதே//
    ஒவ்வொருவரும் மனது வைத்தால் கண்டிப்பாக முடியும் ஹரிஸ், நன்றி உங்களின் கருத்திற்கு

    ReplyDelete
  8. சிலப் பெண் பதிவர்கள் இந்தப் பதிவிற்கு ஈமெயில் மூலம் கண்டனம் தெரிவித்து உள்ளார்கள்.
    இது எல்லாப் பெண்களையும் குறிக்காது, வரதட்ச்சனை வாங்கும் பெண், மற்றும் ஆண் வர்க்கத்தை மட்டும் குறிக்கும்.
    வெளியான செய்தியை திருத்துவதில் ஆர்வமில்லாதக் காரணத்தால் இதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    ReplyDelete
  9. ஒவ்வொருவரும் மனது வைத்தால் கண்டிப்பாக முடியும்.

    ReplyDelete
  10. வரதட்சணை பிரியர்களுக்கு செருப்படி கொடுத்தார் அந்நியன்

    pls visit

    http://nottodowry.blogspot.com/

    ReplyDelete
  11. pls visit

    http://nottodowry.blogspot.com/


    Ok Go Ahead

    Thank You For Your Comments

    ReplyDelete
  12. //சிலப் பெண் பதிவர்கள் இந்தப் பதிவிற்கு ஈமெயில் மூலம் கண்டனம் தெரிவித்து உள்ளார்கள்.//
    நான் இல்ல நான் இல்ல இல்லவே இல்ல

    என்ன தப்பா எழுதிட்டீங்கன்னு உங்களுக்கு மிரட்டல் கொடுக்குறாங்க சகோ?

    ReplyDelete