ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் என்றும் ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.(அல்குர்ஆன் 5:32)
எத்தனையோ நண்பர்கள் துபாயில் இருந்தாலும் சரி மற்றும் பிற ஊர்களிலும் இருந்தாலும் சரி நேரில் பார்ப்பதற்கு நேரமின்மைக் காரணத்தால் யாரையும் சந்திக்க முடிவதில்லை.
இந்த தீவில் இருந்து அபுதாபிக்கு தன்னிச்சையாக யாரும் வந்து விட முடியாது அது போல அபு தாபியிலிருந்தோ அல்லது பிற நாட்டிலிருந்தோ எவரும் உள்ளே நுழைந்து விட முடியாது இப்பேர்ப் பட்ட சூழலில் நாங்கள் இங்கு வாழ்கிறோம்,இங்கு குடும்பமோ அல்லது பிற மக்களோ கிடையாது,எல்லோருமே வேலைப் பார்க்கும் ஊழியர்களே.
இங்கு மொத்தம் முப்பதற்கு மேற்ப்பட்ட கம்பெனிகள் இருக்கு அவை ஒவ்வொன்றும் ஜாட்கோ( ZADCO )என்ற எண்னைக் கம்பெனியின் கட்டுப் பாட்டில் இயங்குகின்றது,எண்ணை வளம் ஆராய் ஓடுகிறது இந்த தீவில்,இங்கு எடுக்கப்படும் எண்ணைகள் வெளி நாட்டிற்கு கப்பல்கள் மூலமாக ஏற்றுமதி செய்யப் படுகின்றது,அதில் நமது தாய் நாட்டின்கப்பல்களும் வந்து போவது நமக்கு பெருமையே.
இந்த தீவானாது சுமார் ஆயிரம் ஊழியர்களை கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது இங்கு போட்டி, பொறாமை,குடி ,கெட்டஎண்ணம்,தகாத வெட்டிப் பேச்சு எதுவும் காணக்கிடைக்காது காரணம், வேலையை விட இங்குள்ள ஊழியர்களுக்கு நல்ல புத்திமதிகளும் நற்க்குனங்களும் மனிதாபிமானம் முறையில் செயல் படுவதற்கு பயிர்ச்சிகளும் கொடுக்கப் படுகின்றன,ஆகையால் இங்குள்ளவர்களின் எண்ணங்கள் நூற்றுக்கு தொண்ணுறு சதவிகிதம் நல்லவையாகவே இருக்கும்.
இங்கு சாதாரண ஊழியர் மாதம் ஊதியமாக ஐயாயிரம் திர்கத்திலிருந்து ஏழாயிரம் திர்கம் வரை பெறுகின்றார்,மூன்று மாத இடை வெளிக்குப் பிறகு ஒரு மாத லீவுடன்.
டெக்னிசியன் என்றழைக்கப்படும் ஊழியர் மாதம் இருபத்தோராயிரம் திர்கம் சம்பளத்துடன் நாற்ப்பத்தி ஐந்து நாள் வேலைக்குப் பிறகு ஒரு மாத விடுமுறையும் செல்கிறார்.
சீனியர் டெக்னிசியன் என்பவர் மாதம் இருபத்தி மூன்றாயிரம் சம்பளத்துடன் ஒவ்வொரு மாதமும் விடுமுறை செல்கிறார்.( ஒரு மாதம் வேலை,ஒரு மாதம் விடுமுறை )
இஞ்சினியர் என்பவர் இருபத்தி ஐந்து ஆயிரம் திர்கம் சம்பளத்துடன் பதினான்கு நாள் வேலை பதினான்கு நாள் விடுமுறை என்ற லெவலில் இருக்கின்றார்.
இன்னும் எண்ணற்ற கம்பெனிகள் அவர்கள் வேலைக்கு ஏற்றவாறு தொழிலாளர்களுக்கு ஊதியமும் கொடுத்து மூன்று மாதத்திற்கு பிறகு ஒரு மாதம் விடுமுறையும் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்த தீவு அபு தாபிக்கு சொந்தமானது,இங்கு ஐநூறு ராணுவத்தினர் முப்படை தளபதிகளின் அறிவுறுத்தலின் பேரில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.
இது தாங்க எங்களின் வாழ்க்கை.
ஊருக்கு போகும்போது அப்படியே காரின் கண்ணாடி வழிYE அபுதாபியைப் பார்த்து விட்டு ஊருக்கு பறந்திடுவோம் அதுனாலே யாரையும் வந்து சந்திப்பதில் நேரம் இருக்காது அதுனாலே கோவித்துக் கொள்ளவேண்டாம்.
சிலப் பதிவர் நண்பர்கள் நேரில் அழைத்ததின் பேரில் இதை எழுதுகிறேன்.
இந்தியா ஒரு ஏழை நாடு என்று மேலை நாடுகள் சொல்லுகிறதே அது என்ன உண்மையா ?
இந்தியாதான் உலகத்திலே முதல் பணக்கார நாடு,சுவீஸ் வங்கியில் திருட்டுத் தனமாக ஒளிந்து கிடக்கும் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவேமேயானால்.
சுவீஸ் வங்கியின் பொது மேலாளர் ஒருவர் இந்திய அரசியல் வாதிகளையும் பிரபல தொழில் அதிபர்களையும் மற்றும் சினிமா டாப் நடிகர்களையும் காரசாரமாக சாடியுள்ளார்.
எல்லோரும் மனதை கல்லாக்கிக் கொள்ளுங்கள்,ஏன் என்றால் நான் சொல்லப் போகும் விசயத்தில் உடம்பில் ஓடும் ரத்தம் நின்னாலும் நின்னு விடும்,கடந்த முப்பது வருசமா இந்திய மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் இருநூற்றி என்பது லட்சம் கோடி ருபாய் அனாதையாக சுவிஸ் பேங்கில் கிடக்கின்றது,எல்லாமே அரசியலில் ஜொலிக்கும் பெரும் தலைவர்களின் பணமாகும்,அந்த அயோக்கியர்கள் நமது ரத்தத்தை உறிஞ்சி பண மூட்டையாக கட்டி சுவிஸ் வங்கியில் ஒளித்து வைத்திருக்கின்றாகள்.
இப்படி யாருக்குமே உதவாமல் முடங்கிக் கிடக்கும் அந்த கருப்பு பணம் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டால் இந்தியாவில் உள்ள அனைத்து சாலைகளுக்கும் நாலு வழிப் பாதையாக மாற்ற முடியும்,அறுபது கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும்,நூற்றி இருபது கோடிப் பேரில் எத்தனை நபர்கள் அறுபது வயதை தாண்டியவரா உள்ளார்களோ,அவர்களுக்கு மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் இலவசமாக வழங்க முடியும்,வறுமையில் வாடும் மக்கள்களுக்கு நல்ல கல்வி மற்றும் சுகாதரான முறையில் வீடு மற்றும்..மற்றும் என்று போட்டுக் கொண்டே போகலாம் என்பது படித்தவர்களின் கருத்து.
ஒரு கட்டிடம் எழுப்ப அடித்தளம் அவசியம். அதே போல நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் மிக முக்கியம் இதனைக் கருத்தில் கொண்டு அந்நியனால் ஒரு கட்டுரை எழுதப் படுகின்றது இக்கட்டுரையினை பொது மக்களாகிய நீங்கள் படித்து தவறுகளை சுட்டிக் காட்டும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
உலக வறுமை ஒழிப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் ஐக்கிய நாடுகள் அவையால் 1992 ஆம் ஆண்டில் அதிகாரப் பட்சாமக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் 1987 முதலாவதாக fபிராண்சின் paris நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்றுகூடினார்கள்,சாதனையும் புரிந்தார்கள்.
சுமார் நூற்றி இருபது கோடி மக்கள்களை சுமந்து கொண்டு கண்ணீர் வடிக்கும் இந்தியாவைப் பார்க்கும் போது காந்தி ஏன் சுதந்திரம் வாங்கி தந்தார் என்று காந்தி மேலே எரிச்சலாக வருகிறது,வெள்ளைக்காரன் கொள்ளை அடிச்சாலும் மனிதாபிமான முறையில் மக்கள்களுக்கும் நல்லதை செய்து விட்டுத்தான் அவனும் சாப்பிடுவான்,ஆனால் நம்ம அரசியல் வாதிகளோ அவர்கள் குடும்பத்தையும் கோத்திரத்தையும் காப்பதிலே குறியாக இருப்பதால் நாட்டு மக்கள்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பதே நாடறிந்த உண்மை.
மக்களிடம் செருப்படி வாங்கினாலும் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு ஒட்டு கேட்க்கும் அரசியல் வாதிகளையும் குறை சொல்லி பயன் இல்லை காரணம் மானம் என்று ஒன்று இருந்தால்தான் அவனுக்கு கவலை வரும் அதுதான் அவனுக்கு கிடையாதே அதான் அவன் மக்களைப் பற்றிக் கவலைக் கொள்வது இல்லை.
இவர்களைப் பற்றிப் பேசி இனி பிரயோஜினம் இல்லை,எப்படி சுவிஸ் பேங்கிலிருந்து நமது நாட்டிற்கு அந்தப் பணத்தை கொண்டு வர முடியும் என்று ஒவ்வொரு இந்தியனும் யோசிக்கணும் அப்போதுதான் நாம் உலக வங்கியில் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியும்.
சுமார் அஞ்சு வருசத்திற்கு முன்பு தலா ஒரு இந்தியக் குடிமகனுக்கு 475 ரூபாய் கடனாக இருந்தது,120 கோடி x 475 = ???????? இவ்வளவு தொகை பாக்கி இருந்துச்சு அப்போ...இப்போ ???
கட்டுரையை நீளமாக எழுத ஆசை ஆனால் நீங்கள் படிக்க மாட்டிர்கள் என்று எனக்குத் தெரியும் அதுனாலே இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
இந்தப் பாட்டை ரசித்து கேட்டால் கண்டிப்பா உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் சுரக்கும்.
காதல் தோற்றதால் .......... கல்லறை காண துடிக்கிராயோ!
கருவறையில் உன்னை தாங்கிய
தாயின் மனம் அறிவாயோ!
கண்ணுக்குள் வைத்து தாலாட்டும்
தந்தையின் மனம் உணர்வாயோ!
உறவுகள் வந்து பந்தல் போட
ஊரார்கள் வந்து பூ தூவ
வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்தி வைக்க
இரு இதயம் துடித்துகொண்டிருக்கையில்
நீ உன் இதய துடிப்பை நிறுத்த
நினைப்பது நியாயமோ?
கனவுகளோடு தொடர்ந்தாய்
உன் காதல் நாட்களை
கண்ணீரோடு தொடர விடுவாயோ
உன் தாயின் மீதி நாட்களை
கனவு கண்ட உன் தாயின்
மனம் கலங்கி தவிக்கிறது
ஆசை வைத்த உன் தந்தையின்
மனம் அலுது துடிக்கிறது
கண்மணியே!
கல் நெஞ்சம் கொண்டவளா... நீ ?
காதலின் கண்கள் பார்த்து இறங்கிய
உன் இதயம்.
உன் தாய் தந்தையின்
கண்ணீர் பார்த்து இறங்காதோ?
உன் காதலன் வேறொரு
கண்மணி தேடிவிட்டான்
நீ உனக்கொரு கணவன்
தேடுவது தவறோ?
தோழியே ஒன்றை புரிந்து கொள்
கண்கள் காட்டித்தந்த உறவே காதலன்
கருவறை காட்டி தந்த உறவே
உன் தாய்தந்தை.
கலங்கியது போதும்.. கண்கள் துடைத்திடு
இன்னும் உன் வாழ்க்கை தொடரவில்லை
முடிக்க நினைக்காதே.
ஈன்றெடுத்த ஈர் உயிரின் உள்ளம்
உணர்ந்திடு காட்டி தரும் கணவனோடு
கண்கள் கலந்திடு உனக்கும் வாழ்வுண்டு
இந்த பாரில் வாழ்ந்து பார்த்திடு..
சல்மா.
என் அன்பு நெஞ்சங்களே இது நான் படைத்த படைப்பு அல்ல, நண்பர்கள் மெயிலில் எனக்கு அனுப்பியது கிட்டத்தட்ட ஒரு ஐம்பது கவிதைக்கு மேலே வந்து குவிந்து கிடக்கின்றது வலைப் பூவில் இணைப்பதற்கு.
ஆனால் எனக்கு என்ன பயம் என்றால் பயவுல்லைக எங்காவது களவாண்டு நமக்கு அனுப்பியிருந்தால் நம்மலின் கதி என்னாவது ?
அதான் எதையுமே பிரசுரிக்க வில்லை இந்தக் கவிதை சொந்த படைப்புதான் என்று உறுதி மொழிக்குப் பிறகு படைத்தவரின் பெயரோடு இதில் இணைக்கிறேன்.தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.
நண்பர்களே நாமும் கொஞ்சம் இங்க்லிசை கற்று வைத்துக் கொண்டு சும்மா டாஷ்..பூஷ்ணு பில்டாப் காட்டுறோம். ஆனால் நாம பேசுவது தவறுதான் என்று நமக்கு தெரியும் இருந்தாலும் எப்படி சமாளிக்கிறோம் என்பதுதான் ஆச்சர்யம் !!!
--------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன செய்யனும்?
எம்.ல்.ஏ: !!!
================================================================== டீச்சர் :முதல் மாசம் ஜனவரி ! ரெண்டாவது மாசம் பிப்ரவரி ! பத்தாவது மாசம் என்ன ?
வாத்தியார் : பசங்களா உலகம் ஏன் சுத்துதுன்னு தெரியுமா ? மாணவன் : என்ன சார் நீங்கள் குவாட்டர் அடிச்சிட்டு என் அப்பாவே சுத்தும் போது.. த்ரீ குவாட்டர் தண்ணீ இருக்கி உலகம் சுத்தாமல் இருக்குமா ?
வாத்தியார் : !!!
============================================================ கருணாநிதி அமெரிக்காவிற்கு ஒபாமா வீட்டிற்கு போகிறார் !
கருணாநிதி : எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டுனிங்க ? ஒபாமா : அங்கே... தூரத்துல ஒரு பிரிட்ஜ் தெரியுதா ? கருணாநிதி: ஆமா தெரியுது . ஒபாமா : அந்த பிரிட்ஜ் கட்டும் போது அடிச்ச காச வச்சு கட்டினேன் ...
ஒபாமா தமிழ் நாட்டிற்கு கருணாநிதி வீட்டிற்கு வருகிறார் !
ஒபாமா : என்னோட வீட்டை விட உங்க வீடு பெருசா இருக்கே ?
எப்படி கட்டுனிங்க.? கருணாநிதி : அதோ ஒரு பிரிட்ஜ் தெரியுதா ? ஒபமா : இல்லையே கருணாநிதி : அங்கே பிரிட்ஜ் கட்ட வேண்டிய பணத்திலேதான் கட்டினேன். ஒபாமா : !!!
டாக்டர் : நான் எழுதி குடுத்த மருந்துல எதாச்சும் இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?
நோயாளி : ஓ! இருக்கே... 20 ரூபாய் இருந்த மருந்து இப்போ 25 ரூபாய் ஆயிடுச்சு....
===========================================================
ஒரு பொறியியல் கல்லூரி வாசல் முன் தம் பிள்ளையை படிக்க வைக்க வந்த பெற்றோர்.
பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா ? வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்கே படிச்சா ரொம்ப ஈஸியா வேலைகிடைக்கும்...
பெற்றோர் : அப்படியா! வாட்ச்மேன் : ஆமா... நானும் இந்த காலேஜ்ல தான் இன்ஜினியரிங் படிச்சேன். படிச்சு முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சுடுச்சு....
பெற்றோர் : !!!
============================================================
அம்மா : என்னடி... உன் புருஷன் இப்படி குடிச்சிட்டு வர்றாரே... நல்லாவா இருக்கு? மகள் : தெரியலம்மா... நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பாக்கலை.....
அம்மா : !!!
============================================================
ஹாஸ்பிடலில் மேதாவி !!!
நோய் வாய்ப்பட்டு மரணத்தின் விளிம்பிற்கே சென்று விட்ட நண்பர் ஒருவரை பார்க்க மேதாவி ஹாஸ்பிடல் சென்றிருந்தார். நண்பரின் அருகில் போய் நின்று கொண்டிருந்த மேதாவி, நண்பரின் நிலைமை திடீரென்று மோசமாவதை உணர்ந்து என்னவென்று கேட்டார்.
அந்த நிலையில் பேச முடியாத நண்பர் ஒரு பேபரும் பேனாவும் வேண்டுமெனக் கேட்டார்.அவசரமாக எழுதிகொன்டிருக்கும் போதே நண்பரின் உயிர் பாதியிலேயே பிரிந்தது.
பேப்பரில் தன் குடும்பத்திற்கு எதோ முக்கியமான தகவலை எழுதிவிட்டு போயிருக்கலாம், அதை நாம் படிக்க கூடாது என நினைத்து அதை மடித்து தன் சட்டை பையில் வைத்து கொண்டார். சடங்குகள் எல்லாம் முடிந்து மறுநாள் நண்பர் வீட்டிற்கு போய் துண்டு பேப்பர் விசயத்தை நண்பர் மனைவியிடம் சொல்லி படித்து பார்க்க சொன்னார்.
பேப்பரை பிரித்து படித்த நண்பரின் மனைவி உடனே மயக்கம் அடைந்து கீழேயே விழுந்து விட்டார். அப்பொழுது தான் மேதாவி அந்த பேப்பரில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்த்தார். அதில் " நீ என் ஆக்ஸிஜன் குழாய் மீது நின்று கொண்டிருகிறாய்" என்று எழுதி இருந்தது....
============================================================== பையன் : அப்பா... நான் படிக்க போகலை...
அப்பா : ஏன்டா? பையன் : கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும்னு சார் சொல்கிறார்.அப்பறம் நான் எதுக்கு படிக்கணும்.....
============================================================== நோயாளி : டாக்டர்... முகத்துல மீசை வளரவே மாட்டேங்குது... டாக்டர் : ஒரு பொண்ண லவ் பண்ணி பாருங்க... மீசை என்ன, தாடி கூட வளரும்.....
டாக்டர் : அடிபட்ட இடத்துல 18 தையல் போடணும்... மேதாவி : போடுறது தான் போடுறீங்க... பூ டிசைன்ல எம்பிராய்டரி மாதிரி போட்டு விடுங்க... டாக்டர் : ???
=============================================================== மேதாவியின் மனைவி : எதுக்கு அடிக்கடி கிட்சன் ரூமுக்கு போயிட்டு வரீங்க...?
மேதாவி :டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கானு செக் அப் பண்ண சொன்னார்.....
================================================================ நண்பர் : சின்ன ஆபரேஷன் தான் பயபடாதீங்க, தைரியமா இருங்கன்னு நர்ஸ்சொல்லியும் ஏன் ஓடி வந்துடீங்க?
நோயாளி : நர்ஸ் என்கிட்டே சொல்லலை... டாக்டரிடம் சொன்னாங்க ...
================================================================= நபர் 1 : நேத்து என் மனைவிக்கு பளார்னு ஒரு அறை விட்டேன்...
நபர் 2 : அதுக்கு அவங்க என்ன பண்ணாங்க? நபர் 1 :அதுக்குள்ள கனவு கலைஞ்சுடுச்சு சார்.....
================================================================== நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ? டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....
================================================================== கபாலியோட சம்சாரம் சரியான சினிமா பைத்தியம்னு எப்படிச் சொல்றே? பின்னே.... கபாலி சென்னைக்குப் போயிருக்கான்கிறதை களவாணி மதராசபட்டினம் போயிருக்குன்னு சொல்றாளே!
=================================================================== தொட்ட இடமெல்லாம் வலி !!!
உடம்புல எங்கு தொட்டாலும் வலிக்குது டாக்டர், என்று சொல்லிக்கொண்டு ஒரு மேதாவி டாக்டரிடம் வந்தார்.
டாக்டர் மேதாவியை படுக்க வைத்து ஒவ்வொரு பகுதியாக செக் செய்து பார்த்தார். எல்லா இடமும் நன்றாக இருந்தது. எக்ஸ்ரே எடுத்து பார்த்தார். ஸ்கேன் எடுத்து பார்த்தார். டாக்டரால் கண்டே பிடிக்க முடியவில்லை. சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு, ஆகா இவன் மேதாவியாச்சே என்று பொறி தட்டியது டாக்டருக்கு. நேராக மேதாவிடம் வந்து கையை பிடித்து விரல்களை சோதித்தார். தொடு விரலில் காயம் இருந்தது......
சோமு: இல்லை... எனக்கு எடுத்தது.....
===================================================================
நபர் 1: உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா? நபர் 2: எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க......
=================================================================== ஒருவர்: ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுறே? மற்றவர்: நெருப்புக் கோழியாச்சே... அதான்.....
மேதாவி 1: வானம் கூட குடிக்கும் போலிருக்கே...
மேதாவி 2: எப்படி சொல்றீங்க? மேதாவி 1: பின்னே... இன்றும் வானம் தெளிவா இருக்கும்னு ரேடியோலசொன்னங்க்ளே.....
================================================================== மேதாவி : கான்ஸ்டபிள், நான் இந்த ரோட்டில் போகலாமா? கான்ஸ்டபிள் : வாகனங்கள் தான் போக கூடாது... நீங்க போகலாமே... மேதாவி : என் பேரு மயில் வாகனம் சார்! கான்ஸ்டபிள் : !!!
===================================================================
நபர் 1:எங்க தாத்தாவுக்கு 100 வயசு ஆகுது... ஆன இது வரைக்கும் டாக்டர்கிட்டபோனதே கிடையாது... நபர் 2:நீங்க 100 வயசுன்னு சொல்லும்போதே நெனச்சேன்...
ஒரு முறை சந்தா, பந்தா இருவரும் டபுள் டக்கரில் (மாடி பஸ்ஸில்) ஏறினார்கள். சந்தா கீழ் தளத்திற்கும், பந்தா மேல் தளத்திற்கும் சென்று அமர்ந்துகொண்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு தன்னுடைய ஸ்டாப்பிங் வந்தும் பந்தா இறங்காததை கண்டு, கீழே இருந்த சாந்த மேல் தளத்திற்கு சென்று பார்க்க போனார். அங்கு தன்னுடைய நண்பன் பந்தா பேயறைந்தது போல், வேர்த்து விறுவிறுத்து, முன்னாலிருந்த கம்பியை கெட்டியாக பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். என்னவென்று சந்தா கேட்டதற்கு பந்தா சொன்ன பதில்... ஐயோ! இங்கே டிரைவரெ காணோமே.. பஸ் தானா ஓடுது.....
===================================================================
நகைச்சுவை மடலை தந்து உதவிய ஜமால் சாதிக்(மலேசியா) சல்மா,(ஷார்ஜா) மற்றும் சிவகங்கை செல்வராஜ் அவர்களுக்கு ரொம்ப நன்றி !
மக்கள் தொகை அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் இந்தியா எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை உலகின் மூன்றாவது பெரிய நாடாக இருக்கின்றது !!!
இதுக்கெல்லாம் காரணம் எய்ட்ஸை பற்றி மக்கள்களுக்கு ஒழுங்கான முறையில் விழிப்புணர்வை அரசு செய்ய தவறியக் காரணத்தால் அரசியல்வாதிகள் அனைவரும் நம் சமுதாயத்தை அவர் அவர் சக்த்திக்குயேற்றவாறு சீரழிக்கின்றனர் என்பதே நூற்றுக்கு நூறு உண்மை.
வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட மேன்மையதாகும் அத்தகைய ஒழுக்கத்தை ஆணினமோ அல்லது பெண்ணினமோ இழக்க நேரிட்டால்,மனித இனத்திற்கும் மிருக இனத்திற்கும் வாழ்க்கை,வித்தியாசம் இல்லாமல் போய் விடும்.
இறைவன் படைப்பான ஆண் மற்றும் பெண் இனத்திடம் பல விதமான வித்தியாசங்கள் காணப் பட்டாலும் அதிகம் மன உளைச்சலுக்கு காரணமாவது பெண்ணினமே,காரணம் தவறுகள் செய்யும் இரு பாலாரும் அற்ப இன்பத்திற்காகவும் சொற்ப்ப பணத்திற்காகவும் தன் மானத்தை காற்றில் பறக்கவிட்டப் பிறகு அதின் எதிரொலி பெண்ணின் கருவறையில் தெரியும்.
நாகரிகம் என்று சொல்லி ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் நண்பராக பழகின்றனரே அது என்ன நல்ல வழியிலியா கொண்டு போகும் ?
கண்டிப்பாக கொண்டு செல்லாது ?
இதோ ஆண்கள் எல்லாம் நண்பர்கள் என்று பழகிய ஒரு பெண்ணின் சோகத்தை கேளுங்கள் இது மதுரை கல்லூரியில் நடந்த சம்பவம்.
கதிரவன் காலையில் கண் விழித்து கடமைகளை முடித்தவுடன் கண் எதிரே இருக்கும் கயல் விழியின் வீட்டிற்க்கே கண்கள் செல்லும்,கதிரவன் என்பவன் படிக்கும் மாணவன் கயல் விழி என்பவள் அவனின் கல்லூரி தோழி,படிக்கும் பருவமும்,நடிக்கும் அவன் செயல்களும் கயல் விழி கண்களுக்கு நல்ல நண்பனாகத்தான் தெரிந்தது,ஆனால் அவன் ஒரு நய வஞ்சகன் என்று,அவள் மனதிற்குத்தான் தெரியவில்லை, சான்றோர் அதட்டியும் அவளை ஈன்றோர் அடித்தும் பார்த்து விட்டனர்,அவளின் பதில் ஒன்றுதான்...அவன் என் பாய் fபிரெண்ட்.
இருவரின் நட்பும் இருள் சூள்வதர்க்குள் காதலாக மாறியது,விளைவு இருவரும் ஊரை விட்டு ஓடினர்,ஒண்டுவதற்கு சிறிதும் இடம் இல்லை தமிழ் நாட்டில்.
எல்லை தாண்டுவதற்கு அவனிடம் கையில் நிறையப் பணம் இருந்தது,ஓடினர்,ஓடினர் மொழி தெரியாத பாம்பைக்கு ஓடினர்,முழுதும் அவளை தீண்டிவிட்டு,முடிவு செய்தான் அவளை விற்று விட !!!
கணினி உதவியுடன் கண்டதை மேயும் காமூகர்களின் நட்பும் கிடைத்தது அவனுக்கு,ரிசப்ஷன் என்று பெயரிட்டு பெரிய ஆடம்பர பங்களாவை தேர்ந்தெடுத்து அள்ளிசென்றான் அவளை,ஒன்னும் புரியாத அவளுக்கு வியப்பாகவே இருந்தது அவனின் நடவடிக்கை !!!
ஆடலும் இளமைப் பாடலும் ஆங்காங்கே ஒலிக்கவே சிறிது பயந்துதான் போனாள்,பிறகுதான் தெரிந்தது இது வரவேற்கும் பங்களா இல்லை பணம் கறக்கும் பங்களா என்று !
இருண்டது அவளின் வாழ்க்கை,கண்ணீர் சுரந்தது தாரை தாரையாக,என்னை ஏமாற்றிய பாவியே பெண்ணின் சாபம் உன்னை சும்மா விடாது என்று சாபம் இட்டாலும்,அவனின் காதுகளுக்கு அது கேட்கவில்லை.
ஐயோ....என் தலையில் நானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டேனே ! இப்போது நான் யாரை உதவிக்கு அழைப்பேன் என்று தலையில் அடித்துக் கொண்டு அலறினாலும் ஆறுதல் சொல்லுவதர்க்கோ அல்லது அவளின் கண்ணீரை துடைப்பதற்க்கோ எந்த ஒரு ஆண் மகனும் அங்கு இல்லை என்பதே உண்மை,எல்லாமே பசிக்கு பிணத்தைக் கூட திங்கும் கழுகு கூட்டமே அங்கு கூடி நின்றது.
ஒரு லட்ச்ச ரூபாய்க்கு விற்கப் பட்டாள்.
ஒரு லட்ச்சப் பேருக்கு விநியோகிக்கப் பட்டாள்.
தனக்கு நேர்ந்த கொடுமை வேறே எந்த பெண்ணிற்கும் ஏற்படக்கூடாது என்று எண்ணி,எப்படியோ மதுரையில் படிக்கும் அவளின் தோழிகளை தொலைப் பேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்த விசயங்களை சொல்லி அழுது என்னை விடுவிக்கா விட்டாலும் பரவா இல்லை எனக்கு கிடைத்த நரக தண்டனை வேறே எந்த பெண்ணிற்கும் கிடைக்கக் கூடாது என்பதற்காக உங்களிடம் சொல்லுகிறேன் என்று கண்ணீர் வடிக்கும் போது...அழாதக்கா,என்று ஒரு பதிமூன்று வயது சிறுமி கண் கலங்கினாள்.
அவளின் சோகத்தை நாம் பகிர்ந்து கொண்டால் கண்ணில் கண்ணீர் வராது குர்திதான் வரும்.ஆமாம் அவளும் இந்த தொழிலில் புகுத்தப் பட்டு HIV என்னும் கொடிய நோயால் பாதிக்கப் பட்டுள்ளாள்.
அவளின் பெற்றோரை தொடர்பு கொண்டால் அவளை தலை முழுகி முப்பது நாளாச்சு என்று பதில்தான் வந்தது,தம்மோடு படித்த பாவத்திற்காக அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என எண்ணி,தோழிகள் அனைவரும் சகா மாணவ மாணவிகளிடம் நிலைமையை சொல்லி சிவகங்கை மாணவன் செல்வராஜ் உதவியுடன் (அவர் அப்பா போலிஸ் இன்ஸ்பெக்டர்) நடவடிக்கை எடுத்தாலும்...திடு திப்பென்று பாம்பைக்கு எப்படி போவது என்று ஆலோசனை நடத்தினர்,இதில் பெரும்பாலான மாணவ மாணவிகளின் கோரிக்கை என்னவென்றால் இந்த செய்திகள் பத்திரிகையில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று.அப்படியென்றால் கதிரவனை பிடித்தால் மட்டுமே கயல் விழியைக் காப்பாற்ற முடியும் என்று முதலில் கதிரவனுக்கு வலையை வீசினார் தனிப்பட்ட முறையில்.
வாரங்கள் இரண்டு ஓடியப் பிறகே கதிரவன் சென்னையில் உள்ள சிறையில் அடைக்கப் பட்டு இருப்பதாக செய்திகள் அவர் காதுக்கு வருகிறது,அவன் திருட்டு வழக்கில் கைதாகி இருப்பதாகவும் இரண்டு மாத தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப் படுவான் என்றும் செய்திகள் வரவே அவருக்கு ஏமாற்றம் அளித்தது.
காரணம் ஒரு கைதியை போலிஸ் அதிகாரி தனிப்பட்ட முறையில் சந்தித்தால் அவருக்கு சட்ட சிக்கல்கள் வர வாய்ப்புகள் இருக்கு,அவர் அறிவுரையின்படி சில மாணவர்கள் முன் வந்தார்கள் அந்த கயவனை ஜாமீன் எடுப்பதற்கு,நிபந்தனை ஜாமினுக்குப் பிறகு அவனை அள்ளி வந்தார்கள் மாணவர்கள் இன்ஸ்பெக்ட்டர் வீட்டிற்கு,அவனை ரவுண்டு கட்டிய அவரோ அவன் அரசு கட்டுப் பாட்டில் இருக்கும் ஒரு கைதி என்பதை மறந்தும்தான் போயி விட்டார்.
விரைந்தது நம் பட்டாளம் பாம்பைக்கு முகவரியை கண்டு பிடித்து முற்ப் புதரில் நடப்பதை போன்றே கதிரவனின் துணையோடு உள்ளே நுழைந்த நண்பர்களுக்கு சகா மாணவியின் நிலையைக் கண்டு கண்ணீர் மல்கியதோடு அல்லாமல் அவளை மீட்பதற்கு பல ஆயிரங்களை படு பாவிகளின் மூஞ்சியில் வீசி எரிந்து விட்டு தமிழ் மண்ணிற்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தார்கள்,சகா தோழிகளை கண்ட அவளுக்கு....உண்மை என்று நினைப்பது எல்லாம் இறுதியில் பொய்யாக இருப்பதை கண்டேனே... என்று கதறி அழுதது நெஞ்சை பாரமாக்கியது.
இனி வாழ்ந்து பயன் என்ன? என் வாழ்வே துயரம் என,கண்ணீர் மல்கிய போதும் தோழிகள் அவளை அரவணைத்துக் கொண்டது நம் மனசுக்கு நிம்மதி அளிக்கின்றது.
அந்நியன் :
உழும் காலத்தில் ஊர் சுற்றி விட்டு அறுக்கிற காலத்தில் அரிவாள் எடுத்துக் கொண்டு போகக்கூடாது.
அது போல படிக்கின்ற வயதில் கண்டவனிடம் நட்ப்பு கொள்ளாதே என்று பெற்றோர் கூறினால் கேட்டு நடப்பதே மேல்.
இல்லையெனில் கயல் விழியின் நிலைமையை எண்ணி பாருங்கள்.
குறிப்பு :மேலே உள்ள போட்டோவுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை