Monday, August 29, 2011

தூக்கு தண்டனை ரத்தாகும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருபத்தி ஓராண்டு காலம் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவித்த முருகன் சாந்தன் மற்றும் பேரறிவாளனின் தூக்கு நிறுத்தப் போவது உறுதி.


இவ்வழக்கில் புதிய திருப்பமாக அனைத்து கட்சிகளும் போர் கொடி தூக்கி இருப்பதால் மக்கள் சக்தி ஓரனியில் திகல்கிறது அதைத்தான் நாமும் எதிர்பார்த்தோம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் கோரிக்கையை மீறி மத்திய அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆனையிட்டாலும் அது செல்லுபடியாகாது இதை தடுத்து நிறுத்தும் உரிமம் சென்னை ஐ கோர்ட்டிற்கு இருக்கு இருந்த போதிலும் அனைத்து தரப்பு அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை இது மெது மெதுவாக இணைந்து கொண்டு இருக்கின்றது.

கண்டிப்பாக இது கிடைக்கும்.

வாயை மூடி கொண்டிருந்த விஜய்காந்தும் குரல் எழுப்பியது மட்டுமில்லாமல் போராடவும் வருவார் என தெறிகிறது இப்படி ஒவ்வொரு கட்சியும் முடிவெடுத்தால் மத்திய அரசின் ஆனையையும் சுப்ரீம் கோர்ட்டின் ஆனையையும் தூக்கி வீசி விடலாம்.

மக்களின் தீர்ப்பே இறுதி என்று அரசியல் வாதிகள் புறிந்து கொள்ளனும் மக்களே இவர்களின் கொட்டத்தை அடக்க இவர்களின் திட்டத்தை முறியடிக்க வெகுன்டெழுந்து அநீதியை எதிர்க்க வாருங்கள்.


 இதுதான் இந்த இருபத்தியோராம் ஆண்டில் தாய் மண்ணிற்க்காக நாம் செய்யகூடிய கடமையாகும்.

Tuesday, August 23, 2011

வெற்று உடம்புகள்

வீடற்று நாதியற்று

வீட்டாரின் உறவற்று
காடற்று கடலற்று
கண்டிராத புகழற்று
நடைப்பாதை புழுதியிலே
விடையில்லா பொழுதினிலே
உடையும் என் மனதினை
ஒட்டிவிட ஆளில்லை.

மரணம் நெருங்குமென்று
கரணம் நானிட்டாலும்
சரணம் துதிப்பாடியே
ரணம் ஆனது வாழ்க்கை.
ஆண்பாதி பெண்பாதி
கண்ணீர் வழியும் சரிபாதி
வெண்மை இதயத்தில் 
இருண்ட வாழ்க்கைதான் மீதி.

வெற்று உடம்புகளும்
பற்றற்று போகின
பற்று உறவினமும்
புண்பட்டு மடிந்தன.
கூவ நீரில் நானும்
குழாய் நீரில் நீயும்
போராடி வாழ்ந்தாலும்
மரணம் நிச்சயம்.

உயிரில்லா உறவுகளும்
நடைபிணமாய் அழைகின்றது
பெயரில்லா மனிதர்களும்
படைகொண்டு வாழ்கின்றது.
இதுதான் வாழ்க்கையா
இல்லையேல் இயற்கையா
வசீகர வாழ்க்கையில்
ருசிகரமாய் தெரிவது மரணமே.

என் ஏக்கங்களை தொலைத்து விட்டு
என் ஆக்கங்களை மண்ணில் புதைத்து விட்டு
வீன் தர்க்கத்தில் வாதிட்டால்
விளங்குமா வாழ்க்கை?
இறுகிய இதயத்தில்
இறையருள் பெற்றிட வேண்டும்
குறுகிய காலத்தில்
குறைகள் போக்கிட வேண்டும்

அங்கும் இங்கும் கடன்பெற்று
அன்பு எனும் பயிரை விதைத்திட்டு
அல்லல் படும் மாந்தர்களை
அனைத்திடுவோம் இருகரம் தொட்டு.
இலை உதிர்ந்து கிளை ஒடிந்து
கருகி போன மரம்கூட தளிர்கின்றது
நிலை குழைந்து நில்லாமல்
கலை மகள் காவியமாய் 
நிற்பாய் என நான் நம்புகிறேன்.

வலிகள் நிறைந்த உன் வாழ்க்கையில்
நல் வழிகள் திறக்கட்டும்.
ரணங்கள் ஆன உன் மேனிகள்
நருமணம் கொண்டு சிறக்கட்டும்.
வாழ்க ஏழைகள்.











Saturday, August 13, 2011

(சு)தந்திர தின வாழ்த்துக்கள்!

ஏழை பங்காளானின் ஆட்சியும் 
கோழை காங்கிரசின் காட்சியும் 
காண்பதற்கு பசுமையாக தெரிகிறது கண்களுக்கு.
வெள்ளையரிடம் சுதந்திரம் பெற்று இந்த கொள்ளையரிடம் நாட்டை கொடுத்தால்...
முல்லை பெரியார் அனை தொடங்கி
எல்லை தேசம் வரை ஊழல்
வெள்ளையரின் ஆட்சியும்
கொடுமையான காட்சியும் மாறி
64 ஆண்டு ஆகியும் நம் நாட்டின் அவலம் மாறவில்லை.
இறந்த பிறகே சிதைக்கு தீ மூட்டும் இந்நாட்டில்
பிறந்த உடனேயே பெண் சிசுவுக்கு தீ மூட்டுகிறார்கள் 
சிந்திய ரத்தமும்
தியாகிகளின் சத்தமும் 
தூக்கு கொட்டடியிலே
கழுத்து நெரிபட்டு
கைகள் முறிபட்டு
தசைகள் வடு பட்டு
கண்களும் கட்டப்பட்டு
கொல்லப் பட்ட காட்சியோ...
சொல்லி விட முடியாது.
கூடி அழ அவர் சவங்கள் கிடைக்காமலும்
தேடி எழ வீரர்கள் இல்லாமலும்
அழிக்கப்பட்டனர் தியாகிகள்
அத்தியாகளின் நினைவாகத்தான் நாம் சுதந்திரம் கொண்டாடனுமே தவிர
போலியாக இல்லை.
இந்த அவஸ்தைகளை போக்கி சுதந்திரம் கொண்டாடுங்கள்.


அவஸ்தை எண் 1: இந்திய திரு நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் எண்ணிக்கை 36 சதவீதத்திற்கு அதிகமாக உள்ளதாக புள்ளி விவர கணக்கு தெரிவிக்கின்றதை உடனே சரி செய்து தடுத்திடும் போது...
அவஸ்தை எண் :2 ஏழை இந்தியா பணக்கார இந்தியா என இரு வேஷம் போடுகிறது நாடு,பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்பதை மாற்றிட முயற்சிகள் எடுக்கும் போது...
அவஸ்தை எண் : 3 பட்டினி சாவும்,பாலியல் கொடுமையும் தீண்டாமை வன் கொடுமையும்,தீண்ட தகாத மனித ஜாதி என, மேல் ஜாதி கீழ் ஜாதி என்று பிரித்தாலும்,நய வஞ்சக மனிதர்களை கண்டும் காணாமல் இருக்கும் இருட்டு சட்டமும்,அதனின் பாது காவலர்களும் திருந்திடும் போது...
அவஸ்தை எண் :4 வதைக்கப்படும் பெண்ணுக்காக சிதைக்கப்படும் அவள் கற்பிற்க்காக எத்தனையோ வழக்குகள் நீதி மன்றத்தில் இருந்தும் அவளின் வாழ்க்கை மண்ணில் புதைக்கபடும் தருவாயில் தீர்ப்பு அளிப்பதை நினைத்து பார்க்கும் போது...
அவஸ்தை எண் :5 இன்னும் அன்னம் இல்லை என தினம் என்னும் மனிதர்கள் பசியின்றி பசித்துண்ண வசதிகள் செய்யப் படாத நிலையிலும் அரசியல்வாதிகள் வெட்டி பேச்சை நிறுத்தி கொள்ளும் போது...
அவஸ்தை எண் :6 சரித்திர ஏட்டில் சித்திரம் வரைக்க 
சாமானிய இளைஞர்கள் முற்பட்ட போதும் வேலை இல்லா தின்டாட்டம் ஒழிக்கப் படும் போது...
அவஸ்தை எண் :7 குடியை தடுத்து குடி மகன்களை தத்தெடுத்து குற்றம் குறைவதற்கு முயற்சி எடுக்காத போதும்...
அவஸ்தை எண் :8 காவல் நிலையங்கள் கட்ட பஞ்சாயத்து நிலங்களாக மாறாமல் இருந்திடும் போதும்...
அவஸ்தை எண் :9 நேர்மையும் உண்மையும்தான் இந்தியாவின் கண்கள் அதற்கு கலங்கம் கற்பிக்கும் அரசியல் வாதிகளை தண்டிக்க மறுத்திடும் போதும்...
அவஸ்தை எண் :10 கடமை கண்ணியம் கட்டுப்பாடு மறுக்கப்பட்ட போதும்...

என்ன சுதந்திரம்?
(சு)தந்திர தின வாழ்த்துக்கள்!

என்ன முட்டாள்தனமான பதிவு இதுலாம் நடக்கிற காரியமா?
ஹா..ஹா..ஹா.
எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை கஞ்சி,இருங்கள் குடிச்சுட்டு வந்து சொல்றேன்.
ஐயா இன்னைக்கு சுதந்திர தினம் தண்ணீர் குடிச்சது போதும்
போயி எண்ணை தேச்சு குழிச்சுட்டு வாங்கள்

எப்படியாவது அந்த ஃபைலில் கையெழுத்து போட்டிருங்கள் என்னைக்குமே நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஆமா...பக்கத்தில் பொம்மை மாதிரி நிற்கிறாரே யாரு?


கண்டிப்பாக நீங்கள் இலங்கை வரனும் 

உங்களுக்காக மனுசகிட்னி வருவல்

மனுசதலை பொறியல்
மனுசகுடல் சூப்பு எல்லாம் தயாரா இருக்கு.
இந்த கொடுமைகளை பார்ப்பதற்கு 
     நல்ல வேளை நான் உயிரோடு இல்லை

Wednesday, August 10, 2011

யார் கொலையாளி?


நிலவொளி முற்றத்தில்
ஆசை தீர்க்கும் திட்டத்தில்
நிழலாய் இரண்டு உருவங்கள்
நிஜமான உருவத்தில்.

விரல் தொட்டு பேசியே
எல்லை மீறவும் ஆசையே
குளிர் காற்றின் பாவனையும்
தளிர் அவளின் தோரனையும்

துடி துடிக்கும் இதயங்களுடன்
நெருங்கி வந்தனர்சிறுபயங்களுடன்
அரும்பியதும் அவன் விரும்பியதும்
பறக்க போகிறது மானம்


பிஞ்சு மகளை காணோம் என்று
நெஞ்சு வலிக்க பெற்றோர்கள்
காவல் நிலையம் சென்றங்கே
கண்ணீர் வடித்து அழுதார்கள்


காரணம் அறிந்த போலிசார்
யாரேனும் இதற்கு சதியா என்றனர்
பதினெட்டு கடக்காதவளுக்கு
யாரய்யா சதி செய்வார்?


உரிமை என அவனின் கல் நெஞ்சம்
அவளை சீரழிக்கப் போகிறது
அறியாமை என்னும் பிஞ்சு அவள்
சீரழியும் நேரமிது


மழலை பருவ மங்கையே
கண்ணீரில் மிதக்கிறாள் உன் தங்கையே
போலியில்லா உன் முகம் பார்த்து
உன் சிறகுகளை பிடுங்க வில்லையே.


தொலை பேசியின் அலறலும் 
எதிர் முனை உலறலும் 
நம்ப முடிய வில்லை போலிசுக்கு
பெற்றோருடன் பறந்தது வாகனம்.


எத்தனை வேதனை இவர்களுக்கு
மனசு தந்தியடிக்க 
இரு இதழ்களும் துடி துடிக்க
விழிகளிலும் அவர் பேசும் மொழிகளிலும் கண்ணீர் தெறிந்தது.


கூடிய கூட்டத்தையும் 
கூவி அழைத்த கிழவனையும்
குடைந்து எடுத்தது போலிசு.
கொல்லப் பட்ட சடலங்களும்
இனி எங்களை யாரும் தேடாதிர் என்றது.



சத்தம் போட்டு 
கண்களை பொத்திக் கொண்டு
கதறி அழுதது ஒரு கூட்டம்

ரத்தம் பார்த்து மனதினை
தட்டிக் கொண்டு சிதறி ஓடியது
இன்னொறு கூட்டம்.

அப்போ கொலையாளி யார்?

நண்பர்களே இது கவிதை இல்லை இது ஒரு புதிர்.


வஞ்சகம் தீர்க்க நய வஞ்சகம் செய்து ஒரு அப்பாவி பெண்ணை சீரழித்தான் காமுகன்,இறுதியில் கொலைதான் தண்டனை,அவன் மட்டும் இல்லை அவளும் கொலை செய்ய பட்டாள் அப்போ அவர்களை கொன்றது யார்?


இருட்டில் நடந்தது காதலா?


இல்லை இருவருக்கும் நடந்த மோதலா?


பரந்து விரிந்த பூமியில் படு பயங்கரத்தின் ஊதலா? 


யாருக்குமே தெரிய வில்லை என்ன நடந்ததுவென்று.

காத்திருங்கள் அடுத்த பதிவு இடும் வரை.



























Monday, August 8, 2011

மரணம்தான் பரிசா?


ஊரோடு உறவுகள் இல்லை!
பேரோடு யாரும் பிறப்பதும் இல்லை!
அன்போடு அழைக்க மானிடர் இல்லை!
பண்போடு பார்க்க மனம் கசிந்தவரும் இல்லை!
கணவுகள் காணும் நான் ஒரு ஏழை!
வாழ்க்கையை அமைக்க தெரியாத ஒரு பாவை!
புரண்டோடும் பொழுதுகளே!
என் கண்ணீரை கொஞ்சம் பாராயோ!
சோகத்தில் அழுது வடிக்கும் கண்ணீர் கூட!
கரு...மேகத்தை கரைத்து விடும்!
தாகத்தில் நான் கதறி அழுதும்...மனிதா
போதத்தில் தள்ளாடுகிறாயே ஏன்?
கைக்கு எட்டாத வானமும்!
உனக்கு ஏதேனும் தரவா என கேட்கிறது!
என்னை சுற்றியுள்ள பசுமையும்!
பசி மயக்கம் கண்டு...அழுகிறது!
நளினம் ஆடும் தென்றலும்!
சோகத்தில் நின்றுதான் போனது!
புது வரவாய் பூக்கும் பூக்கள் கூட!
என் வறுமை கண்டு கண்ணீர் சிந்தியது!
இயற்கையே... என்னை கண்டு அழும்போது!
இயற்கை எய்திடப் போகும் நீ அழ வில்லையே!
புன்னகை வலையில் மறைந்து கிடக்கும்!
நீதான் மனித பிறவியோ?
கருவானேன்... பின்பு உருவானேன்!
சாக்கடையில் ஜனித்த நான்!
பூக்கடையையும் கண்டதில்லை!
யார் கண்ணுலேயும் படுவதும் இல்லை!
சுட்டப் புண்ணும் ஆறி விடும்!
கை பட்ட பூவும் மலர்ந்து விடும்!
என் வாழ்க்கை மட்டும் மாற வில்லை!
ஏழையாய் பிறந்ததினால்!
சொந்தத்தில் வந்த பாசமும்!
சோகத்தில் உடைந்து பிரிந்தனர்!
பந்தத்தில் இருந்த நேசமும்!
பசியின் கொடுமைக்கு மாண்டனர்!
தோல்வியின் முதற்படி வெற்றி என்றார்கள்!
வெற்றியின் ரகசியம் பணமும் என்றார்கள்!
இரண்டும் இல்லாத என் வாழ்க்கைக்கு!
மரணம்தான் பரிசா?
ஆவேச வரிகள்---
புன்னைகையில் பிழிந்தெடுத்த என் அன்புத் தமிழ் வார்த்தைகளை பின்னுரையில் ஆரம்பித்து,முன்னுரையில் முடிப்பவன்தான் இந்த அந்நியன்,கிழக்கே உதிக்கும் சூரியனும் சரி,இரவில் ஜொலிக்கும் சந்திரனும் சரி கடவுளின் கட்டுப் பாட்டுக்குள்தான் இருக்கின்றது.
மனித சமுதாய முன்னேற்றத்திற்கு முக்கிய தடைக்"கல்" மனித சமுதாயமே,ஏழையாக பிறந்தது எனது குற்றமா? இல்லை பதறாத காரியம் சிதறாது, பயம் கொண்ட மனம் சிறக்காது என்று சொன்னவரின் குற்றமா?   யார் குற்றம்?


நேற்றென்பது முடிந்துபோனது,நாளையென்பது அறியாதது,இன்றிந்த நொடியே,நாம் வாழ்ந்துணர்வது...வாழ்க்கை இப்படி இருக்க ஆனவம் எதற்கு?
காலுக்கு தோல் செறுப்பு வாங்க பணம் இல்லையே...என்று கடவுளிடம் வேண்டுகிறாயே...கால் இல்லாத மனிதர்களின் நிலையை நினைத்து பார்த்தாயா?
நூற்று கணக்கான நேற்றுகள் நகர்ந்து விட்டன ஆயிர கணக்கான நாளைகள் பின்பு வரும்,ஒரே ஒரு "இன்று" மட்டும் ஏழைக்கு உதவி செய்...வாழ்க்கையில் என்றுமே சந்தோசமா இருப்பாய்.
கருமியோடு உறவு வைத்தால் இருமியே நம்மை கொண்ணுடுவான்.
பொய்யனுடன் கூட்டு வைத்தால் சமயம் கிடைக்கும் போது மாட்டி விடுவான்.
முட்டாளோடும் ஒட்டாதிர் அவன் உங்களுக்கு உதவி செய்தாலும் அது உபத்திரத்தில்தான் போயி முடியும்.
பாவியோடு சுற்றாதிர் ஒரு பவுன் கொழுசுக்கு கூட உன்னை விற்றுவிடுவான்.
ஏழைகளை ஆதரியுங்கள் வாழ் நாள் பூரா நன்றியுள்ளவனாக இருப்பான்.


 கவிதை எழுதி பழகுறேன்,கவிஞர்கள் யாராவது.... குறைகள் இருந்தால் கண்டு பிடித்து சொல்லவும்.

Friday, August 5, 2011

மூணுக்கு மேலே எழுதியால்... ஒதுக்கி வைத்து விடுவார்களாம்!!!



நான் விரும்பும் மூன்று விஷயங்கள்.

(1) சீர்வரிசை கொடுத்துன்னை வழியனுப்பும் பெற்றோர்க்கு
சீரழிவை கொடுக்கக்க கூடாது அப்பெண்.
(2)பட்டினியின் கோரப் பிடியில் மயங்கிருக்கும் மனித கூட்டம் மூன்று வேளையும் உணவருந்த வேண்டும்.
(3)ஏழைகள் பணக்காரர்களாக மாறனும்.

நான் விரும்பாத மூன்று விஷயங்கள்.

(1)பெற்ற தாயையும் பொறந்த நாட்டையும் ஒதுக்கும் மனிதர்கள் பிடிக்காது.
(2)பணத்தாசையில்"மார்"தட்டும் மானிடமும் புறம் பேசி குழி பறிக்கும் நட்பகத்தையும் பிடிக்காது.
(3)நாம் வாழும் வாழ்க்கை அரியது வறுமையும் கொடியது நாம் வாழும் வரை எழியோரை வாழ வைக்க முயற்சிக்காதவரையும் பிடிக்காது.

பயப்படும் மூன்று விஷயங்கள்.

(1)மரணிக்கும் போது ஒரு முஸ்லிமாக மரணிக்கமாட்டோமா என்ற பயம் இருக்கு.
(2)உதட்டில் ஆசை மொழிகளும் உள்ளத்தில் விஷ உறவுகளும் வைத்து பழகும் மனித கூட்டத்துடன் பழக பயந்து கிடக்கின்றது.
(3)வாழ்க்கையின் பாதையினில் வேதனைகளும் சோதனைகளும் தோன்றும் அதற்காக வாழ்க்கையினை அழித்துக் கொள்ளும் காதலர்களின் பெற்றோரை கானும் போது ஒரு பயம்.

புரியாத மூன்று விஷயங்கள்.

(1)விடியாத இரவுகள் புது வரங்களோடு விடிந்தும் முன்னேராத இந்தியாவை கானும் போது.
(2)போலியும்...கலப்படமும் தமிழகத்தின் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தை போல இருக்கின்றது,எந்த அரசியல்வாதிகளாலும் அதை மாற்ற முடியாததை நினைத்து பார்க்கும் போது.
(3)பரந்து வாழும் நம் மக்கள்களின் கருத்தை விட பன்னாட்டு நிருவனங்களுக்கு மன்மோகன் சிங் நமது வணிகத்தை ஏன்?தாரை வார்க்கிறார் என்று என்னும் போது.

மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்.
(1)கம்ப்யூட்டர்.
(2)டிஷ்னரி.
(3)குறிப்பேடு.

சிரிக்கவைக்கும் மூன்று விஷயங்கள்.

(1)சர்தார் ஜோக்கை படித்து விட்டு நிஜ சர்தாரை ஃபீல்டில் பார்க்கும் போது என்னை அறியாமல் சிரித்து விடுவேன்.
(2)நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பேசும் பேச்சுகளையும் அரசியலுக்கு வந்த பின்பு பேசும் பேச்சுக்களையும் யூ டூபில் பார்த்து சிரிப்பேன்.
(3)டாம் அன்ட் ஜெர்ரியையும் பார்த்து சிரிப்பேன்.

தற்போது செய்துகொண்டிருக்கும் காரியம்.

(1)எப்படி இந்த தொடர் பதிவை முடிப்பது என்று யோசித்துக் கொண்டு "டைப்" பண்ணிக் கொண்டு இருக்கின்றேன்.
(2)கடிகாரம் ஏன் சீக்கிரமாக சுற்றி கொண்டு இருக்கின்றது என்று கறுவிக் கொண்டு இருக்கின்றேன்.
(3) இடை இடையே கொட்டாவி உட்டுக் கொண்டும் இருக்கேன்.

வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும்காரியங்கள்.

(1) தீமைககளிருந்து விலகி நண்மைகளை ஏவி ஹஜ் செய்யனும்(இன்ஷா அல்லாஹ்)
(2)வறுமையிலிருந்த என்னை வைர பொக்கிஷமாக மாற்றிய இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கனும்.
(3)என்னிடம் பணம் இருக்கும் போது எல்லோருக்கும் உதவிடனும்.

செய்து முடிக்கக்கூடிய மூன்று விஷயங்கள்.

(1) முடியாததை முடியும் என்று சவாலாக எடுத்து செய்து முடிப்பது.(தொழில் ரீதியாக)
(2)அன்றைய வேலைகளை அன்றே முடிப்பது.
(3)ஊரில் இருக்கும் போது சமையல் அட்டாகாசங்கள் ப்ளாக்கை திறந்து பிரியாணி செய்து,வீட்டில் பாராட்டைப் பெருவது.

கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்.
(1)குடிகாரனின் பேச்சு.
(2)அவசியம் இல்லாத கடன்.
(3)இரவலாக வாகனம்.

கற்றுக்கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்.

(1) கவிதைக்கு எப்படி மெருகூட்டுவது என்று கற்றுக் கொள்ள ஆசை.
(2)ப்ளாக்கின் தொழில் நுட்பங்களை எளிதாக புறிந்து கொள்ளவும் ஆசை.
(3)தைய்யல் தைக்கவும் ஆசை.

பிடித்தமூன்று உணவு வகைகள்.

(1) கஞ்சி (பழைய சோறு)
(2)பிரியாணி.
(3)இட்லி

அடிக்கடி முணு முணுக்கும் மூன்று பாடல்கள்.
(1)(முதல்வன் திரைப்படத்திலிருந்து)

குறுக்கு சிறுத்தவளே... என்னை குங்குமத்தில் கரைச்சவளே...நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்... என்னக் கொஞ்சம் பூசு தாயே...
உன் கொலுசுக்கு மனியாக... என்னக் கொஞ்சம் மாத்து தாயே.

(2)இதய கோவில் படத்திலிருந்து)

நான் பாடும் மவுன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூஙவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்.

(3)காணொளியில் இனைத்துள்ளேன்

பிடித்த மூன்று படங்கள்.

(1) அந்நியன்.
(2) அந்நியன்.
(3) அந்நியன்.

இது இல்லாம வாழமுடியாது மூன்று விஷயம்.

(1) உயிர் இல்லாமல் வாழ முடியாது.
(2) இறை நம்பிக்கை.
(3) அமைதி.

இவ்வளவுதான் என்னால் எழுத முடியும்,இதுக்கு மேலே என்னத்தை நாம எழுதி அதை நீங்கள் படித்து கண்டனங்களை அனுப்புவதற்குள் நான் எஸ்கேப்.
என்னை இப்பதிவிற்கு தொடராக அழைத்ததற்கு லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோரும் எழுதி விட்டிர்கள் என்று நினைக்கிறேன்,சகோ ஆஷிக் அவர்களும் சகொ ஹைதர் அலி அவர்களும் எழுதுவார்கள் என்று நம்புகிறேன் எதற்கும் சொல்லி பாற்ப்போம்.

Tuesday, August 2, 2011

சிரிப்பு....சிரிப்பு...இன்ட்லி மக்களே உங்களுக்காக.



1) போலீஸ் அதிகாரி: இப்படி மொட்டையா வந்து புகார் கொடுத்தா ஏத்துக்க மாட்டோம்...

புகார் கொடுத்தவர்: என்ன சார் அநியாயமா இருக்கு... அப்ப என் தலையில முடி வளர்ர வரைக்கும் நான் புகாரே கொடுக்க முடியாதா?!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
2) பையன்: பாட்டி! நா ஓட்ட பந்தயத்தில கலந்துக்க போறேன். ஆசீர்வாதம் பண்ணுங்க!

பாட்டி: பார்த்து மெதுவா ஓடுப்பா... வேகமா ஓடி கைய கால ஒடிச்சிக்காதே!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
3) ஆசிரியர்: கடல் பக்கத்தில ஏன் லைட் ஹௌஸ் கட்டறாங்க?

மாணவன்: லைட் ஹௌஸ் பக்கத்தில கடல் கட்ட முடியாது. அதனால தான் சார்!

4) ஆசிரியர்: கோழி ஏன் முட்டை போடுது?

மாணவன்: ஏன்னா அதுக்கு 1, 2, 3 போட தெரியாது!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
5) ஆசிரியர்: இடுக்கண் வருங்கால் நகுக...

மாணவன்: நமக்கு வரும்போதா..? இல்லே மத்தவங்களுக்கு வரும்போதா சார்?!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
6)இன்ஸ்பெக்டருக்கு அரசியல் ஆர்வம் வந்திடுச்சுன்னு எப்படிச் சொல்ற கபாலி?

கபாலி : மாமூலை "பண மாலையா" போடச் சொல்றாரே!"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
7)மன்னன் : வறுமையின் காரணமா நிறைய பொய் சொல்லிட்டேன்னு புலம்பறீங்களே... அப்படி என்ன பொய் சொன்னீர் புலவரே...?"

புலவர் : "தங்களைப் புகழ்ந்து ஆயிரக்கணக்கில் பாடல்கள் பாடியதைத்தான் சொல்கிறேன் மன்னா...!"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
8)கல்யாண தரகர்: நாம நாளைக்கு பொண்ணு பாக்க போறேமே... அவுங்க வீட்ல நேத்து திருடன் பூந்து எல்லாத்தையும் அபேஸ் பண்ணிட்டான்...

பையனின் தாய்: நாசமா போன திருடன் நமக்கு முந்திட்டானே...!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
9)டாக்டர்: இந்தா மூணு நாளைக்கு மருந்து. அப்புறமா இருந்தா வந்து பார்!

நோயாளி:ன்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க?

டாக்டர்: இல்லேப்பா... நா ஊர்ல இருந்தா வந்து பார்னு சொன்னேன்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
10)டாக்டர்: தேவைப்பட்டா அடுத்த வாரம் ஆபேரஷன்.

நோயாளி: யாருக்கு தேவைப்பட்டா?...!!!

டாக்டர்: எனக்கு தேவைப்பட்டா!! இது கூடவா சொல்லணும்?!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
11)ஒருவர் :குன்னக்குடி வைத்தியநாதன் வயலினை கேட்டிருக்கீங்களா?

மற்றவர் : நாம கேட்டா கொடுப்பாரா...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
12)கணவர் :சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.

ஏட்டையா : இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே?

கணவர் : ங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.

13)பாட்டி : டேய்! உங்க மிஸ் வர்றாங்க...
ஓடி போய் ஒளிஞ்சிகோ...டா

பேரன் : ஐயோ பாட்டி..நீ போய் ஒளிஞ்சிகோ...
நீ செத்துடேனு சொல்லி தான் ஒரு வாரம் லீவ் போட்டு வீட்ல இருக்கேன்...

பாட்டி : அட சனியனே...!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
14)ஒருவர் : உங்க மனைவி வந்ததும் மாத்திரை சாப்பிடுறீங்களே...ஏன்?

மற்றவர் : தலைவலி வந்தா மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்காரே...!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
15)ஒரு வீட்டில திருடன் வந்து நகை,பணம் எல்லாத்தையும் சுருட்டிகிட்டான்.அவன் கிளம்பும் போது அந்த வீட்டு குழந்தை பார்த்துட்டுச்சு.அந்த குழந்தை என்ன சொல்லிச்சு தெரியுமா?

என்ன சொல்லிச்சு ?

டேய் திருடா மரியாதையா என் ஸ்க்கூல் பேக்கையும் எடுத்திட்டு போ.இல்லையெண்டால் அம்மாவை எழுப்பிடுவேன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
16)பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர்,மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.

ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.

மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க

ஆசிரியர் :!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
17)வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?

சர்தார்: ஆகிவிட்டது.

வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?

சர்தார்: ஒர் பெண்ணை.

வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?

சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
18)பையன்: டிரஸ் சூப்பர்!

லேடி: தேங்ஸ்

பையன்: லிப்ஸ்டிக் சூப்பர்!

லேடி: தேங்ஸ்

பையன்: மேக்கப் சூப்பர்! வெரி நைஸ்!

லேடி: தேங்ஸ் டா

பையன்: அப்புறம் ஏன் டீ அசிங்கமா இருக்க?!!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
19)மனைவி: ஏங்க கொஞ்சம் வாங்க,குழந்தை அழுவுது.

கணவன்: அடியே, உன்னை எவன் மேக்கப் இல்லாம குழந்தை பக்கத்துல போகச் சொன்னது.


20) ஆசிரியர் : கடல் நடுவில ஒரு மாமரம் அதுல இருக்கிற மாங்காயை எப்படி பறிப்பாய்?

மாணவன் : பறவை போல மாறி பறந்து போய் பறிப்பேன்.

ஆசிரியர் : பறவை போல உன்னை உன் தாத்தாவா மாத்துவாரு?

மாணவன் : அப்ப கடல் நடுவில மரம் உங்க அப்பாவா வச்சாரு?

ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிற உங்களுக்கே இவ்வளவுன்னா............, 10 பாடம் படிக்கிற எனக்கு எவ்வளவு இருக்கும்......
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
21)தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டது.

நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம்...
நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்....பாப்பா நடந்து வருவியாம்.

வேண்டாம் தாத்தா...என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம்.
நானே என் பையைத் தூக்கிக்கிறேன்.நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
22)மனைவி: இந்த வாரம் முழுவதும் படம் பார்த்தோம்..

அடுத்த வாரம் முழுவதும் ஸாப்பிங் போவோம்ங்க.

கணவன்:சரி...அதுக்கு அடுத்த வாரம் முழுவதும் கோவிலுக்கு போவோம்..

மனைவி:எதுக்குங்க..

கணவன்:பிச்சை எடுக்கத்தான்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
23)நோயாளி: இப்போ சொல்றது அடுத்த நிமிடம் மறந்து போகுது டாக்டர்.

டாக்டர் : அப்படியா... எத்தனை நாளா இருக்குது இந்த வியாதி?

நோயாளி: எந்த வியாதி டாக்டர்??

டாக்டர்: !!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
24)ஒருவர் : உங்க மனைவி எதுக்கு உங்களை அடித்தார்கள்?

மற்றவர் : "பொறுத்தது போதும்"என்பதற்குப் பதிலாக "பெருத்தது"போதும்"முன்னு வாய் தவறிச் சொல்லிட்டேன் அதுக்குத்தான்.


25)சர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

சர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார் நான்,மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
26)நெப்பொலியன் : முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.

சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை.
அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
27)தலைவர் ஏன் மேடையில பீர்பாட்டில்,பிராந்தி
பாட்டிலையெல்லாம் தூக்கிக் காட்டுறாறு...?

தலைவர்கிட்ட 'சரக்கு இல்லை'ன்னு யாரோ
சொல்லிட்டாங்களாம்.....அதான்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மக்களே சிரித்திர்களா?

உங்கள் ப்ளாக் பிரபலம் அடைய வேண்டுமா அந்நியனின் சிறிய ஆலோசனைகள்.

ஆலோசனை நம்பர் ஒன்று : பதிவுகளை காப்பி&பேஸ்ட் செய்துவிட்டு உங்கள் ப்ளாக்கில் ஒட்டிவிடுங்கள்,பிறகு பதிவு சுட்ட இடத்திற்கு போய் அவர் இடும் பதிவிற்கு ஆகா... ஓகோ.. என்று கமெண்ட்ஸ் எழுதுங்கள்,அவரும் ஓடோடி உங்கள் ப்ளாக்கிற்க்கு வருவார் வந்ததுமே பதிவை பார்த்து விட்டு "அதிர்ச்சி"ஆகி விடுவார்.

பிறகு என்ன... அலறி அடித்து பஞ்சாயத்தைக் கூட்டுவார் பதிவுலக நண்பர்கள் எல்லோரும் கண்டன கனைகளை ஏவுவார்கள் பிறகு மிக சுலபமாக பிரபலம் அடையலாம்.
தினம் விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும் நீங்கள் இடும் இடுகையை படிப்பதற்கு இல்லை நீங்கள் எங்கிருந்து என்ன சுட்டிருக்கிய என்று பார்ப்பதற்கு.

ஆலோசனை நம்பர் இரண்டு: வித்தியாசமான தலைப்பை தேர்ந்தெடுங்கள் மொக்கை பதிவாக இருந்தாலும்.

ஆலோசனை நம்பர் மூன்று: சினிமா நடிகர் நடிககைகளை பற்றி கிசு கிசு எழுதிக் கொண்டு இருங்கள்,குமுதம் மாதிரி.